India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சி வழங்க பிரேமலதா டோக்கன் வழங்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
கடைகளில் விற்பனை செய்யப்படும் பேக்கேஜ்டு குடிநீரை விட, ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரம் மேலானதாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலை., மற்றும் சென்னை பல்கலை., இணைந்து, 30 பேக்கேஜ்டு குடிநீர் நிறுவனங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், பேக்கேஜ்டு குடிநீரில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கனிம அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எத்தனை வருடம் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜக வெல்லாது என வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ” பாஜகவை திராவிட கட்சிகள் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் எதிர்க்கிறார்கள். பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகத்துக்கு வந்தாலும் அவரால் வெற்றிபெற முடியாது. மேரா பாரத் மேரா பரிவார் என கத்திக்கொண்டே மட்டும் தான் பாஜகவால் இருக்க முடியும். அவர்கள் தமிழக மக்களின் இதயத்தில் ஒருபோதும் வெல்ல முடியாது” என்றார்.
காஸாவின் ரஃபா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ரஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ‘ரஃபா நகரில் நடத்தும் தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க அமெரிக்காவுக்கு, அதிகாரிகள் குழுவை அனுப்புமாறு நெதன்யாகுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
உக்ரைனில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், தங்களை எதிர்த்துப் போரிட்டால் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் அபாயம் இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 5ஆவது முறை அதிபராகவுள்ள புதின் மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘உலகப் போர் சூழலை யாரும் விரும்பவில்லையென நினைக்கிறேன். ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி இறந்தது மிகவும் சோகமான நிகழ்வாகும்’ என்றார்.
➤ 1895 – லூமியர் சகோதரர்கள் தாம் புதிதாக உருவாக்கிய திரைப்படக் கருவியின் மூலம் முதற்தடவையாக திரைப்படத் துண்டைப் பதிவு செய்தனர். ➤1944 – நாஜி ஜெர்மானியப் படைகள் ஹங்கேரியைக் கைப்பற்றின. ➤ 1945 – ஜப்பானில் பிராங்கிளின் என்ற அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 724 பேர் கொல்லப்பட்டனர். ➤ 2018 – சூடான் என அழைக்கப்படும் கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டாமிருகம் இறந்தது.
வடகொரியா நேற்று தொடர்ச்சியாக 3 ஏவுகணை சோதனையை நடத்தியிருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஜப்பான் கடற்பகுதியில் வடகொரியாவின் ஏவுகணை பாகங்கள் விழுந்துள்ளது. இதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனின் சியோல் பயணம், அமெரிக்கா – தென்கொரியா கூட்டு ராணுவப்பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா இந்த சோதனையை நடத்தியுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் பாஜகவில் இணையப் போவதால், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதில் எந்தவொரு பலனும் இல்லையென அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். கரீம்கஞ்ச் பாஜக கூட்டத்தில் பேசிய அவர், ‘காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்ந்து காங்கிரசில் இருப்பார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. யாரும் காங்கிரசில் இருக்க விரும்புவதில்லை. ஒவ்வொருவரும் பாஜகவில் சேரவே விரும்புகின்றனர்’ என்றார்.
◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 128
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
◾விளக்கம்: தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையும் தீமையாகப் போய்விடும்.
சூரரைப்போற்று படத்திற்கு பிறகு சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி கைக்கோர்த்த படம் ‘புறநானூறு’. 2023 நவம்பரிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமென கூறப்பட்ட நிலையில், இன்னமும் தொடங்கவில்லை. இது குறித்து நடிகர் சூர்யா தனது X பக்கத்தில், ‘புறநானூறு படத்திற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. உங்களுக்கு சிறப்பான ஒன்றை தர வேலை செய்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பில் சந்திப்போம்’ என்றார்.
Sorry, no posts matched your criteria.