India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (மார்ச் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இந்தியாவில் ‘FAN WAR’ நிலை மிகவும் அருவருப்பாக உள்ளதாக அஷ்வின் தெரிவித்துள்ளார். ரோகித்-ஹர்திக் பாண்டியா ரசிகர்களின் மோதலை சுட்டிக்காட்டியுள்ள அவர், இங்கிலாந்து அணி வீரர்களின் ரசிகர்கள் சண்டை போட்டு நான் பார்த்ததில்லை எனக் கூறியுள்ளார். மேலும், கங்குலி கேப்டன்சியில் சச்சின், டிராவிட் கேப்டன்சியில் கங்குலி, சச்சின் மற்றும் தோனி கேப்டன்சியில் அனைத்து ஜாம்பவான்களும் விளையாடவில்லையா என வினவியுள்ளார்.
அரசியலில் மதம் கலந்த நாடு உருப்படாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாஜகவை விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்த கமல், இன்று முதல் தனது பரப்புரையைத் தொடங்கினார். ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பேசிய அவர், ‘தமிழ் மொழி மீது காதல் இருந்தால், இந்தியாவில் தமிழை ஆட்சி மொழியாக்குங்கள்’ என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஸ்டார்க் முதல் 2 போட்டிகளிலும் சேர்த்து 100 ரன்களை வாரி வழங்கியுள்ளார். SRH-க்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 53 ரன்களை விட்டுக்கொடுத்த ஸ்டார்க், RCB உடனான இன்றைய ஆட்டத்தில் 4 ஓவர்களில் 47 ரன்களை வாரி வழங்கினார். இதனால் KKR ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆஸியை., சேர்ந்த மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ₹24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஸ்ரீதேவ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெவர் எஸ்கேப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் ஸ்ரீதேவ் ராஜ் உள்பட படக்குழு அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் சின்னம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு, மதிமுகவின் பம்பரம் சின்னம் கிடைக்காததால் புதிய சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அது என்ன சின்னம் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என துரை வைகோ கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான 10ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. சின்னசாமி மைதானத்தில் முதலில் விளையாடிய RCB அணி 182/6 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கோலி 83 ரன்கள் குவித்தார். பின்னர் 183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KKR அணி 16.5 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 50, நரைன் 47 ரன்கள் எடுத்தனர்.
ராகு மற்றும் கேது பகவான் ஆகிய இருவரும் இந்த ஆண்டு முழுவதும் மீனம் மற்றும் கன்னி ராசியில் பயணம் செய்ய உள்ளனர். இதனால் மிதுனம், கன்னி, துலாம், தனுசு ராசியினர் பண மழையில் நனையப் போகின்றனர். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம், வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை, தொழிலில் பல மடங்கு லாபம் போன்ற பல்வேறு சுப பலன்கள் மேற்கண்ட ராசியினரை தேடி வரப்போகிறது.
தமிழகத்திற்கும் தமிழ் இனத்திற்கும் திமுக தான் உண்மையான எதிரி என அண்ணாமலை கூறியுள்ளார். மழை வெள்ளத்தில் தத்தளிக்கக் கூடிய நகரமாக சென்னை மாறியதுதான் திமுகவின் சாதனை எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் வளர்ச்சியை குழிதோண்டி புதைத்து விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக வாக்குப்பதிவிற்கு முன்பே, யார் பிரதமர் என்று தீர்மானிக்கப்பட்ட தேர்தல் இதுதான் எனவும் அவர் கூறினார்.
2023-24ஆம் நிதியாண்டில் பிட்காயின் மதிப்பு வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. நிதியாண்டின் தொடக்கத்தில் $28,500 ஆக (இந்திய மதிப்பில் ₹23 லட்சம்) இருந்த பிட்காயினின் மதிப்பு சுமார் 150% அதிகரித்து தற்போது $73,750 என்ற (₹61.5 லட்சம்) புதிய உச்சத்தை தொட்டது. ஈக்விட்டி, பத்திரங்கள் மற்றும் தங்கத்துடன் ஒப்பிடுகையில் பிட்காயின் நல்ல வருமானத்தை அளித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.