News March 19, 2024

SBI PO முடிவுகள் வெளியானது

image

எஸ்பிஐ வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீஸர்களை தேர்வு செய்வதற்கான இறுதி முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 2000 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் பல கட்டங்களாக நடைபெற்றன. இறுதியாக, ஜனவரி 21ஆம் தேதிக்கு பிறகு நேர்காணல் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றன. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை <>இந்த லிங்க்-ஐ<<>> க்ளிக் செய்து அறியலாம்.

News March 19, 2024

ஜொமாட்டோவில் இரட்டை குவளை முறை

image

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ, சைவ உணவுக்கென தனி ஆட்களை நியமித்திருக்கிறது. இவர்கள் பச்சை வண்ண உடை உடுத்திக் கொண்டு சைவ உணவகங்களுக்கு மட்டும் சென்று, சைவ உணவுகளை மட்டுமே டெலிவரி செய்வார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. உணவில் வேற்றுமையை ஒழிக்க வேண்டும் என்று ஒருபுறம் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஜொமாட்டோ நிறுவனத்தின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News March 19, 2024

ஐபிஎல்லில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்கவில்லை?

image

மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்த அவருக்கு, குடலிறக்கப் பிரச்னை இருந்தது தெரிய வந்தது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயம் நொறுங்கிய எமோஜியை பதிவிட்டிருக்கிறார். இதனால் வரும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் என கூறப்படுகிறது.

News March 19, 2024

ஓபிஎஸ்-இன் மனுவை நிராகரிக்க கோரிக்கை

image

கட்சிப் பெயர் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று இபிஎஸ் தரப்பு மனு அளித்துள்ளது. அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரை வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இரட்டை இலை சின்னத்துக்கு பதிலாக இரண்டு அணிகளுக்கும் தனி சின்னத்தை வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் நேற்று மனு அளித்திருந்தார். அதற்கு எதிராக இபிஎஸ் தற்போது மனு அளித்துள்ளார்.

News March 19, 2024

பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா கைது

image

மதக்கலவரத்தை தூண்டியதாக பாஜக MP தேஜஸ்வி சூர்யாவை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். நாகர்ட்பேட் பகுதியில், இஸ்லாமியர்கள் நமாஸ் செய்தபோது, மொபைல் கடைக்காரர் முகேஷ் என்பவர் அனுமன் பாடலை இசைத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முகேஷ் தாக்கப்பட்ட நிலையில், அதனை கண்டித்து தேஜஸ்வி உள்ளிட்டோர் பேரணி சென்றனர். அப்போது தேர்தல் விதிகளை மீறி மத வெறுப்புப் பேச்சுகளை பேசியதாக போலீசார் அவரை கைது செய்தனர்.

News March 19, 2024

ஒரே வாரத்தில் 5 கட்சிகள்

image

கடந்த ஒரு வாரத்தில் 5 கட்சிகளுடனான கூட்டணியை பாஜக தமிழகத்தில் உறுதி செய்துள்ளது. அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி அதிமுகவினர் பாஜகவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி மொத்தமாக பாஜகவுடன் சேர்ந்துக் கொண்டது. கொங்குநாடு முன்னேற்றக் கழகம் மற்றும் பாமக ஆகியவையும் பாஜகவுடனான கூட்டணியை அறிவித்துள்ளது. இது குறித்து உங்களது கருத்து என்ன?

News March 19, 2024

CSK பயற்சி ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு அனுமதி

image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தை காண, ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதற்காக, கடந்த வாரம் சென்னை சேப்பாக்கத்திற்கு வந்த CSK அணி, தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. போட்டிக்கான டிக்கெட்டுகள் பலருக்கும் கிடைக்காததால், இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

image

மக்களவைத் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும். மார்ச் 20 – மார்ச்27ஆம் தேதி வரை காலை 11 – பிற்பகல் 3 மணி வரை மனுத்தாக்கல் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

News March 19, 2024

நாளை முதல் வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை காலை 11 மணிக்கு தமிழகத்தில் தொடங்குகிறது. முதற்கட்ட தேர்தலிலேயே தமிழகத்தின் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் நாளை முதலே தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய 27 கடைசி நாளாகும்.

News March 19, 2024

பங்குச் சந்தைகள் கடும் சரிவு

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவினை சந்தித்திருக்கின்றன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 238 புள்ளிகளை இழந்து 21,817 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 736 புள்ளிகளை இழந்து 72,012 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அன்னிய நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதே வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

error: Content is protected !!