News March 19, 2024

ராகுல் காந்திதான் ஒரே நம்பிக்கை

image

135 கோடி மக்களின் ஒரே நம்பிக்கையாக ராகுல் காந்தி திகழ்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரக் கூடிய ஒரே தலைவர் ராகுல் தான் எனக் கூறியுள்ளார். மேலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் அவர் செயல்படுவதாகவும் சிதம்பரம் கூறியுள்ளார்.

News March 19, 2024

தூங்குவதற்கு முன் நிச்சயம் இதை செய்யுங்க

image

ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன்பு லேசான உடற்பயிற்சி செய்வது ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேபோல மிதமான சூட்டில் தண்ணீரையோ, பாலையோ அருந்திவிட்டு தூங்கச் செல்வது வயிற்றை இதமாக்கி தூக்கத்தை மேம்படுத்தும். டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விலகி இருத்தல், புத்தகம் படித்தல், மனதை சாந்தப் படுத்துதல் ஆகியவை ஆழ்ந்த தூக்கத்திற்கான காரணிகள்.

News March 19, 2024

வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் சீமான்

image

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் சனிக்கிழமை ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்யவிருக்கிறார். தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழகம் மற்றும் புதுவையில் 40 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். அவர்களை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் மார்ச் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை பல்லாவரத்தில் நடைபெறவுள்ளது.

News March 19, 2024

வெப் சீரிஸில் நடிக்கும் அசோக் செல்வன்

image

அசோக் செல்வன், நிமிஷா ஆகியோர் நடிக்கும் வெப் சீரிஸூக்கு “கேங்க்ஸ் குருதி புனல்” என பெயரிடப்பட்டுள்ளது. ஹாரர் படமான போர் தொழில் மூலம் பிரபலமான அசோக் செல்வன், தற்போது அமேசான் பிரைமின் புதிய வெப் சீரிஸில் நடித்துள்ளார். அதில் சத்யராஜ், நாசர், ரித்திகா சிங், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இரு குழுவினரிடையேயான மோதலை மையமாக கொண்டு சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

தேர்தலில் போட்டியிட அனுமதி தாருங்கள்

image

தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு, தேர்தல் ஆணையத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் அரசு மருத்துவர் ஒருவர், நீதிமன்ற அனுமதியுடன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டதை சுட்டிக்காட்டிய கூட்டமைப்பு, வெற்றி பெற்றால் பணியை ராஜினாமா செய்யலாம். தோல்வி அடைந்தால் மீண்டும் பணியில் சேரலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

News March 19, 2024

கோர விபத்தில் 4 பேர் பலி

image

திருநெல்வேலியில் இருந்து சென்ற டெம்போ டிராவலர் வாகனம் கேரளாவின் மலைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து இடுக்கிக்கு சுற்றுலாவுக்காக 20 பேருடன் சென்ற வாகனம், அடிமாலி அருகே சென்று கொண்டிருக்கும்போது மலையில் இருந்து கவிழ்ந்தது. இதில் 3 வயது குழந்தை உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News March 19, 2024

அத்தியாவசியப் பணியில் உள்ளோருக்கு தபால் வாக்கு

image

தமிழகத்தில் சிவில் போக்குவரத்து, ஊடகம் போன்ற அத்தியாவசியப் பணியாளர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யுமாறு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தபால் வாக்கு செலுத்தும் பணியை ஒருங்கிணைக்க அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு அறிவுறுத்தியுள்ள ஆணையம், அது தொடர்பான 12டி விண்ணப்பம் அந்த அதிகாரியிடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

News March 19, 2024

ஐபிஎல் ஃபேன்ஸ் பார்க்..

image

IPL 17ஆவது சீசன் மார்ச் 22-ல் தொடங்க உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் CSK-RCB அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், ‘ஐபிஎல் ஃபேன்ஸ் பார்க்’ என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பெரியத் திரையில் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக காண BCCI சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில், மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

News March 19, 2024

விஜய் கட்சியில் இணைந்த ரேவந்த் சரண்

image

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கின் இயக்குநர் ரேவந்த் சரண், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், “20 வருடங்களுக்கும் மேலாக அவரது ரசிகராக இருந்து வருகிறேன். தமிழகத்தை முற்போக்கான, ஊழலற்ற மற்றும் பாதுகாப்பான மாநிலமாக மாற்றும் அவரது சிந்தனையுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

News March 19, 2024

இளைஞர்களிடையே அதிகரிக்கும் புற்றுநோய்!

image

வயதானவர்களை மட்டுமே தாக்கி வந்த பெருங்குடல் புற்றுநோய், தற்போது இளைஞர்களையும் தாக்கி வருகிறது. மரபணு பிரச்னை, சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாறுபாடுகளே இந்த மோசமான நிலைக்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது. பலவீனம், மயக்கம், ரத்தசோகை, எடை இழப்பு, சாப்பிடும் பழக்கத்தில் மாற்றம் போன்றவை இதன் அறிகுறிகளாகும். உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்குமானால், ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவமனையில் பரிசோதனை செய்வது நல்லது.

error: Content is protected !!