News March 20, 2024

அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக திட்டமிடுகிறதா?

image

எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அதிமுகவை பலவீனப்படுத்த அரசியல் சதுரங்கத்தில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. பாஜக – பாமக கூட்டணியால், வெற்றி வாய்ப்புகளை உறுதி செய்துவிட முடியாது. இருப்பினும், பாமகவை தங்கள் பக்கம் இழுத்ததன் மூலம் வட தமிழகத்தில் N.D.A கூட்டணியின் வாக்கு வங்கியை உயர்த்துவதோடு, அதிமுகவை பலவீனப்படுத்தி 3ஆம் இடத்திற்கு தள்ளும் ராஜதந்திர அரசியலை பாஜக நேர்த்தியாக செய்திருக்கிறது.

News March 20, 2024

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின்

image

மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். மகளிர் உதவித் தொகை ரூ.1000 இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்படும். நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

News March 20, 2024

புதிய தமிழகம் தென்காசியில் போட்டி

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தனித் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் பு.த.க சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிட்டு தனுஷ் எம் குமாரிடம் தோல்வியடைந்தார். இந்த முறை பு.த.க சார்பில் கிருஷ்ணசாமியே மீண்டும் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

News March 20, 2024

BREAKING: கூட்டணியை அறிவித்தது தேமுதிக

image

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. அதேபோல், தேமுதிக கட்டாயம் கேட்ட மாநிலங்களவை சீட் குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

News March 20, 2024

அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் (2)

image

9. ஆரணி – கஜேந்திரன் 10. அரக்கோணம் – விஜயன் 11. விழுப்புரம் – பாக்யராஜ் 12. சேலம் – விக்னேஷ், 13. ஈரோடு – ஆற்றல் அசோக்குமார் 14. நாகை – சுர்ஜித் சங்கர் 15. வடசென்னை – ராயபுரம் மனோ 16. ராமநாதபுரம் – ஜெயபெருமாள் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

News March 20, 2024

அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் (1)

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக நேரடியாக போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 1. தென்சென்னை – ஜெயவர்தன் 2. காஞ்சிபுரம் – ராஜசேகர் 3. நாமக்கல் – தமிழ்மணி 4. கரூர் – கே.ஆர்.என்.தங்கவேல் 5. மதுரை – சரவணன் 6. தேனி – நாராயணன் 7. சிதம்பரம் – சந்திரசேகரன், 8. கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

News March 20, 2024

இளைஞர்களுக்கு அதிக சீட் வழங்கும் திமுக

image

மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில் அண்ணா அறிவாலயத்தை தாண்டி அன்பகத்தில் தான் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இம்முறை திமுக போட்டியிடவுள்ள 21 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இளைஞர்களுக்கு சீட் வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. கட்சிக்குள் சீனியர்கள் மத்தியில் எழும் எதிர்ப்பை சமாளிக்க வாரிசுகளுக்கு (அருண் நேரு போன்றவர்களுக்கு) இடமளிக்கப்படும் என கூறப்படுகிறது.

News March 20, 2024

சற்றுநேரத்தில் அதிமுக தொகுதிப் பங்கீடு

image

கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இன்னும் சற்றுநேரத்தில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை அதிமுக இறுதி செய்ய உள்ளது. இதில், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ-க்கு திண்டுக்கல் தொகுதியும், புரட்சி பாரதத்திற்கு விழுப்புரம் அல்லது திருவள்ளூர் தொகுதியும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

News March 20, 2024

ஆதிக்-ஐ பாராட்டிய அஜித்

image

நடிகர் அஜித், தான் நடிக்கும் படத்தின் கதையைப் போலவே டைட்டிலில் மிகுந்த கவனம் செலுத்துவார். அந்த வகையில், தனது 63ஆவது படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என்கிற தலைப்பை ஆதிக் சொன்னதுமே அஜித் வெகுவாக பாராட்டியிருக்கிறார். இது பாசிட்டிவ், நெகட்டிவ் என இருவிதமான குணநலன்களை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான டைட்டில் எனத் தயாரிப்புத் தரப்புக்கும் அஜித் விளக்கம் சொல்லியிருக்கிறார்.

News March 20, 2024

ரேஷன் கார்டு வழங்க உத்தரவு

image

இ-ஷ்ரம் தளத்தில் பெயர் பதிவு செய்துள்ள 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்தப்படாததால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 மாதங்களுக்குள் கார்டுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளை உடனே வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!