News March 20, 2024

ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது

image

பீகாரில் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மே.வங்க மாநிலம் சிலிகுரிக்கு ராணுவத் தளவாடங்களுடன் வீரர்களும் சென்று கொண்டிருந்தனர். அப்போது இன்ஜினுடன் இணைத்திருந்த பெட்டிகளில் சில தனியாக துண்டிக்கப்பட்டதால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே விபத்து சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 20, 2024

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது

image

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு – நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 20 மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். ஏற்கெனவே, 21 ராமேஸ்வர மீனவர்களை கைது செய்ததோடு, மேலும் 20 பேரை கைது செய்துள்ளனர்.

News March 20, 2024

கணவர் மரணம்.. மீண்டும் நடிக்க வந்த நடிகை

image

நாதஸ்வரம், வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி சண்முகபிரியா. இவர் அரவிந்த் சேகர் என்பவரை கடந்த 2002இல் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த ஆண்டு அரவிந்த் மாரடைப்பால் மரணமடைந்தார். கணவர் மறைவிற்குப் பின் எந்த தொடரிலும் நடிக்காமல் மன உளைச்சலில் இருந்த ஸ்ருதி, தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் லட்சுமி தொடர் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

News March 20, 2024

இந்திய அணியில் இடம்பிடிப்பது சவாலான காரியம்

image

கேரளாவில் இருந்து இந்திய அணியில் இடம்பிடிப்பது சவாலான காரியம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், இந்தியா கிரிக்கெட்டில் முதல் அணியாக உள்ளது. பல திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால், ஏதாவது ஸ்பெஷலான விஷயங்களை செய்தால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கிறது” என்றார். 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சஞ்சு, இதுவரை 16 ஒருநாள், 25 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

News March 20, 2024

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

image

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரம் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வந்த ராமச்சந்திரன், மனைவி விசித்ரா மற்றும் மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், எதற்காக அவர்கள் தற்கொலை செய்தார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 20, 2024

மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் விடுமுறை ரத்து

image

மார்ச் 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுத் துறைகளின் கணக்குகளை பராமரிக்க வரும் 31ஆம் தேதி வங்கிகளின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான அரசின் நிதி விவரங்களை முடிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News March 20, 2024

7 ஆண்டுகளுக்கு தோல்வி படங்களையே கொடுத்த நடிகர்

image

இந்தி நடிகர் சயீப் அலிகான், 7 ஆண்டுகளுக்கு தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்துள்ளார். பட்டோடி ராஜ குடும்பத்தை சேர்ந்த அவர், முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடியின் மகன் ஆவார். 2013ல் ரேஸ் 2 வெற்றி படத்தை கொடுத்த அவர், பிறகு 2020 வரை 10 தோல்வி படங்களையே அளித்திருக்கிறார். 2020ல் வெளியான தான்ஹாஜி, சூப்பர் ஹிட் அடித்தது. சேக்ரட் கேம்ஸ், தான்டவ் ஆகிய சீரிஸ் வரவேற்பை பெற்று தந்தது.

News March 20, 2024

ஐஜேகேவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

image

பாஜக கூட்டணியில் ஐஜேகேவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையில் தமிழகத்தில் அக்கட்சி புதிய அணியை கட்டமைத்து வருகிறது. கூட்டணியில் உள்ள பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்கெனவே தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதியை பாஜக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 20, 2024

அமலாக்கத்துறையை கண்டித்த உச்சநீதிமன்றம்

image

ED விசாரணையின்றி ஒருவரை கைது செய்து நீண்ட நாட்கள் சிறையில் வைத்திருக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜார்கண்டை சேர்ந்த ஒருவர் 18 மாதங்களாக விசாரணையின்றி தன்னை அமலாக்கத்துறை கைது செய்து வைத்திருப்பதாக கூறி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. 90 நாட்களுக்குள் விசாரணையை நிறைவு செய்யாவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமின் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 20, 2024

சூட்கேஸில் பெண் சடலம்

image

ஏற்காடு மலைப் பாதையில் சூட்கேஸிலிருந்து பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 அடி பாலம் அருகில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற அவர்கள், அங்கு கிடந்த சூட்கேஸை கைப்பற்றி பார்த்தபோது அதில் பெண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!