India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடித்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது ஆங்காங்கே தகராறுகள், கலவரங்கள் நடைபெற வாய்ப்பிருப்பதால் அதன்பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிகிறது.
ஐபிஎல் 17ஆவது சீசன் 6 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், CSK அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரனா காயம் காரணமாக ஆரம்பப் போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 21 வயதான பத்திரனாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் 4 முதல் 5 வாரங்கள் வரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த சீசனில் CSK அணியில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.19 முதல் ஜூன் 1 வரை, மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
*முதல்கட்டம் – ஏப்.19 – 102 தொகுதிகள்
*2ஆம் கட்டம் – ஏப்.26 – 89 தொகுதிகள்
*3ஆம் கட்டம் – மே 7 – 94 தொகுதிகள்
*4ஆம் கட்டம் – மே 13 – 96 தொகுதிகள்
*5ஆம் கட்டம் – மே 20 – 49 தொகுதிகள்
*6ஆம் கட்டம் – மே 25 – 57 தொகுதிகள்
*7ஆம் கட்டம் – ஜூன் 1 – 57 தொகுதிகள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையே கடைசி நாள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டியவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலை ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்கும் இறுதி வாய்ப்பாக மக்கள் கருத வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் மூலம் இந்தியாவின் நியாயத்திற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட கிடைத்த கடைசி வாய்ப்பாக இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“இயேசு”வைப் பற்றி, கனவிலும் தவறாக சித்தரிக்க மாட்டேன் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். ரோமியோ பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில், மது பழக்கம் தொடர்பாக “இயேசு” குறித்து அவர் தவறாக பேசியதாக சர்ச்சையானது. இதனால், கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், தவறாக எதுவும் சொல்லவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், தனது கருத்து தவறாக அர்த்தப்படுத்தப்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் சார்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரே நேரத்தில் மக்களவை, சட்டசபை தேர்தல் நடத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆதலால் மக்களவைத் தேர்தல் முடிந்ததும், அங்கு சட்டசபை தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.
ஐபிஎல் 17ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் மார்ச் 18ஆம் தேதி ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என CSK நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிக்கெட் விலை ₹1,700-ல் இருந்து ₹7,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என CSK நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகுவதால் கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று ம.பி, மாநில மாநிலங்களவை உறுப்பினர் அஜய் பிரதாப் சிங் அக்கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் விலகியதாக கூறியுள்ளார். தேர்தலில் சீட் கொடுக்காததாலேயே கட்சியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது
Form 12 D விண்ணப்பத்தை நிரப்பியளித்தால், வீட்டில் இருந்து 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் வாக்களிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 81,87,999 பேரும், 100 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் 2,18,442 பேரும் உள்ளனர். அவர்கள், தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாள்களுக்குள் விண்ணப்பத்தை அளித்தால், வீட்டில் இருந்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.