India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤1919 – ரெளலட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார். ➤ 1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் “கலிபோர்னியம்” என்ற 98-வது தனிமத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர். ➤ 1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார். ➤1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
விஜய் கட்சி ஆரம்பித்ததால் பாதிப்பு திமுகவுக்கு தான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ விஜய் கட்சியினர் சிறு பிள்ளைகள், 2026 தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து பார்க்கலாம். ஏனெனில், விஜய் ரசிகர்கள் பெரும்பகுதி திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். அதனால் விஜய் கட்சி ஆரம்பித்ததில் திமுகவுக்கு கோபம். அதிமுகவுக்கு இப்போது ரூட் கிளியர்’ என்றார்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வியடைந்தார். பர்மிங்காமில் நேற்றிரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தோனேசியா வீரர் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்ட சென், முதல் செட்டில் 12-21 என்ற கணக்கில் பின் தங்கினார். 2ஆவது செட்டை 21-10 என கைப்பற்றிய சென், வெற்றியைத் தீர்மானிக்கும் 3ஆவதுசெட்டில் 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
தமிழகம், கர்நாடகாவை தொடர்ந்து இமாச்சலிலும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படும் ரோடமைன் – பி ரசாயனத்தால் புற்றுநோய், கல்லீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அங்குள்ள கடைகளில் சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வில், நச்சுப்பொருள் கலந்திருப்பது உறுதியானதை அடுத்து, இமாச்சலில் ஓராண்டுக்கு பஞ்சு மிட்டாய் உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: இனியவை கூறல்
◾குறள்: 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
◾விளக்கம்: பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
ஏ.ஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை பறித்து விடக்கூடாது, மாறாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமென இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். பிருத்விராஜ், அமலாபால் நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘நேரம் தேவைப்படும் விஷயங்களின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்’ என்றார்.
அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் வர்த்தக கப்பல் கடத்தல் முயற்சியை இந்தியக் கடற்படை போர்க்கப்பல் முறியடித்துள்ளது. சோமாலியா கடற்பகுதியில் சென்ற எக்ஸ் எம்.வி ரூவென் என்ற வர்த்தக கப்பலில் பிடித்த கொள்ளையர்கள் 17 மாலுமிகளை சிறைபிடித்தனர். தகவலறிந்து விரைந்த இந்தியாவின் ஐ.என்.எஸ் கோல்கட்டா போர்க்கப்பல், வர்த்தக கப்பலைச் சுற்றிவளைத்து எச்சரிக்கை விடுக்கவே, 35 கடற்கொள்ளையர்களும் சரணடைந்துள்ளனர்.
இன்று (மார்ச் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதிக்கரையோரங்களில், சிவபெருமானின் நவ கைலாச தலங்கள் உள்ளன. முதல்தலம், பாபநாசத்தில் பிரமாண்டமாக உள்ளது. 2 முதல் 9 வரையிலான தலங்கள், சேரன்மாதேவியில் தொடங்கி, சேர்ந்தபூமங்கலம் வரை அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால், சூரியன், சந்திரன், செவ்வாய், குரு உள்ளிட்ட 9 கிரகங்களின் அருளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில் தொடங்கிவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில் , ‘பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முழு நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் மக்களவைத் தேர்தலில் பங்கேற்க உள்ளது. மக்களுக்கு பணியாற்றவும், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக வலுப்படுத்தக் கிடைத்த இது ஒரு நல்ல வாய்ப்பாகும்’ என்றார்.
Sorry, no posts matched your criteria.