India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை தாமாக முன்வந்து உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரித்து வருகிறது. இதில் இன்று நடந்த விசாரணையில் தமிழக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது மொத்தம் 561 வழக்குகள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில், 20 ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளும் உள்ளன.
சமீபகாலமாக அடுத்தடுத்து தமிழ் நடிகர்கள் உயிரிழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று தமிழ் சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். மார்ச் 26இல் நடிகர் சேஷு, மார்ச் 29 இல் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தனர். இன்று அதிகாலை நடிகர் விக்னேஸ்வர ராவ் (62) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தொடர் மரணத்தால் ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் உள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதித்த 25 லட்சம் குடும்பங்களுக்கு ₹1487 கோடி நிவாரணம் வழங்கியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த ஆணையிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு நிதி தராத போதும் கடந்த ஜனவரி வரை 24.25 லட்சம் குடும்பங்களுக்கு தலா ₹6000 மற்றும் விடுபட்ட 53,000 குடும்பங்களுக்கு தலா ₹6000 வழங்கப்பட்டதாக தமிழக அரசு கூறியது. இதையடுத்து விசாரணை ஏப்.17க்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோடைக்காலம் என்றால் அதிகம் விற்பனையாவது ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்கள்தான். ஆனால் அவை உடல் சூட்டை மேலும் அதிகரிக்க செய்யும். இதற்கு பதிலாக இயற்கை கொடையாக தந்த நீர் சத்து நிறைந்த தர்பூசணி, ஆரஞ்ச், இளநீர், வெள்ளரி உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். முடிந்தவரையில் அசைவம் வேண்டாம். வெளியே செல்லும்போது சூட்டை ஈர்க்கும் கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து, வெண்மை நிற பருத்தி ஆடைகளை அணியலாம்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க, ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை அமலாக்கத்துறை நாடியது. ஆனால் உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களை திறக்க முடியும் என அந்நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில், அமலாக்கத்துறைக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற இருந்த கொல்கத்தா – ராஜஸ்தான் அணிகள் இடையிலான லீக் போட்டி ஏப்ரல் 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. நாடு முழுவதும் ஏப்.17ஆம் தேதி ராமநவமி கொண்டாடப்படுகிறது. இதனால், ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற இருந்த போட்டி ஒருநாள் முன்கூட்டியே நடத்தப்படுகிறது. இதேபோல, ஏப்.16ஆம் தேதி நடைபெற இருந்த குஜராத்-டெல்லி இடையிலான லீக் போட்டி ஏப்.17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
தனக்கு பிடித்தமான நடிகர் துல்கர் சல்மான்தான் என நடிகை மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார். ‘சீதா ராமம்’ படத்தில் நடித்தபோது தான் மிகவும் கஷ்டப்பட்டதாக தெரிவித்த அவர், துல்கர் சல்மான் அந்த சமயத்தில் ஊக்கமளித்ததாக கூறினார். அவர்தான் எனக்கு முன்னுதாரணம். எனது வழிகாட்டி, நண்பர் எல்லாம் அவர்தான் என நெகிழ்ச்சி தெரிவித்தார். துல்கரை அவர் பல இடங்களில் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான ஷர்மிளா, கடப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளார். ஆந்திரா, பீகார், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. ஆந்திராவில் அண்ணனும், தங்கையும் எதிரெதிர் துருவங்களாக தேர்தலில் களம் காண்பதால், தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பலரின் பிரச்னையாக இருப்பது உடல் பருமன். என்னதான் டயட் பாலோ செய்தாலும், உடற்பயிற்சி மேற்கொண்டாலும் உடல் எடையை குறைக்க முடியாமல் பலர் திண்டாடி வருகின்றனர். அவர்களுக்காகவே இன்னொரு வழி இருக்கிறது. அதுதான் பேரியாட்ரிக் சர்ஜரி. பேரியாட்ரிக் என்று சொல்லக் கூடிய அறுவை சிகிச்சை தெரபி இது. BMI 40-க்கு மேல் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் இந்த சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர்.
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பயன்பெறும் வகையில், 25% இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் சேரும் மாணவர்கள் LKG முதல் 8ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன்படி நடப்பாண்டில் RTE மாணவர் சேர்க்கைக்கு ஏப்.22ம் தேதி முதல் (rte.tnschools.gov.in) பெற்றோர் விண்ணப்பிக்கலாம். மே.20ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாகும்.
Sorry, no posts matched your criteria.