India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர் சில ரகசியங்களை தெரிந்து கொள்வது அவசியம். குழந்தை பொறாமை எண்ணத்துடன் இருந்தால், மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்று பொருள். பொய் சொல்கிறார்கள் என்றால், அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் அதிகமாக திட்டி, அடிக்கிறீர்கள் என்று பொருள். அதிகமாக தொந்தரவு செய்கிறார்கள் என்றால், அரவணைப்புக்கு ஏங்குகிறார்கள் என்று பொருள். இதனை கவனித்தாலே பிரச்னையை சரிசெய்யலாம்.
மத்திய அரசு வெள்ள நிவாரணம் வழங்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நாளை வழக்கு தொடர உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் சென்னை உள்பட 8 மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தன. அதனை சீரமைக்க தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டிய முதல்வர் ஸ்டாலின் நாளை காலை வழக்கு தொடர உள்ளதாக அறிவித்தார்.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிவரும் எல்எஸ்ஜி வீரர் டி காக் அரை சதம் கடந்துள்ளார். 38 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 58* ரன்கள் அடித்துள்ளார். கே.எல்.ராகுல் 20 ரன்னிலும், படிக்கல் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டொய்னஸ் 9* ரன்கள் அடித்துள்ளார். தற்போது வரை LSG 12 ஓவர்கள் முடிவில் 102/2 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்சிபி தரப்பில் சிராஜ், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
2024ஆம் நிதியாண்டில் 6,644 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து புதிய சாதனை படைக்கப்பட்டிருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், இது 1,100 கிலோ மீட்டர் கூடுதலாகும். நாட்டின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் அவசியமாக இருக்கும் நிலையில், அதிக நீளத்திற்கு சாலைகள் அமைப்பதில் புதிய உச்சம் தொடப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ், திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய கச்சத் தீவு விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது பாஜக. 1974ஆம் ஆண்டு இந்திய அரசு கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கியதை குறிப்பிடும் பாஜக, அப்போதைய முதல்வர் கருணாநிதி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், 1974 ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த விவகாரத்தை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் கருணாநிதி.
Mother of Dragons ( டிராகன்களின் தாய்) என்று செல்லமாக அழைக்கப்படும் Pons – Brooks வால் நட்சத்திரம் 70 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமியை நெருங்கி வந்திருக்கிறது. மேற்கு வானில் மிக பிரகாசமாக காணப்படும் இந்த வால் நட்சத்திரம் கடைசியாக 1954ஆம் ஆண்டு தென்பட்டது. இன்னும் சில தினங்களுக்கு வானில் தெரியும் இந்த வால் நட்சத்திரம் மீண்டும் 2095ஆம் ஆண்டு தென்பட வாய்ப்புள்ளது.
13 வருடத்திற்கு முன் இதே நாளில், தனது சிறுவயது கனவு நனவானதாக சச்சின் கூறியுள்ளார். 2011 ஏப்ரல் 2-ல் நடைபெற்ற ODI உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. அது குறித்த தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின், அந்த நினைவுகளுக்காகவும், அணிக்காகவும், பல லட்சம் மக்களின் நம்பிக்கைக்காகவும் என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வந்தால் தமிழகத்திற்கு சில பார்ட் டைம் அரசியல்வாதிகள் வருவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வேலூர் பிரசாரத்தில் பேசிய அவர், தேர்தல் சீசனுக்காக மட்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், திமுக அரசின் திட்டங்கள் (காலை சிற்றுண்டி) இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகிற்கே முன்னோடியாக உள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிளே ஸ்டேஷன் 5 ஸ்லிம் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் PS5 மாடலை விட அதிக மெமரி கொண்டிருக்கிறது. மற்றபடி ஹார்டுவேரில் எந்த மாற்றமும் இல்லை. இதன் டிஜிட்டல் எடிசன் விலை ரூ.44,990, டிஸ்க் வெர்ஷன் விலை ரூ.54,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் தொடங்குகிறது.
அரசியல் ஆதாயம் தேடவே கச்சத்தீவு விவகாரத்தை பாஜகவினர் கையில் எடுத்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ‘தேர்தல் வருவதால் மீனவர்கள் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காகவே பாஜக கச்சத்தீவு விவகாரத்தை பேசுகிறது. மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டபோது அவர்கள் கவலைப்படவில்லை. தற்போது பாஜக கச்சத்தீவு விவகாரத்தை பேசி வருவது வேடிக்கையாக உள்ளது’ என விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.