India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 124
▶குறள்: நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
▶விளக்கம்: தன் நேர்மையான வழியை விட்டு விலகாமல், அடக்கத்துடன் வாழ வேண்டும். அப்படி வாழ்பவரது மனது, மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
ரயில் சேவைகள் மூலம் 2023-24ஆம் நிதியாண்டில், ₹12,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட 10% அதிகமாகும். பயணிகள் ரயில் சேவை மூலம் ₹7,151 கோடி, சரக்கு ரயில்கள் மூலம் ₹3,674 கோடி, இதர வருவாய் மூலம் ₹1,194 கோடி வசூலாகியுள்ளது. இதுதவிர, பாரத் கவுரவ் ரயில்கள் மூலம் ₹34 கோடி, ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் மூலம் ₹20 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமரிடம் கூறி முதலிலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். “தன்னை எல்லாம் தெரிந்தவர் என்று சொல்லும் அண்ணாமலை, கச்சத்தீவு பற்றி எப்படி படிக்காமல் இருந்தார்?. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி எப்படி தெரியாமல் போனது? இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தேவையா? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (ஏப்ரல் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமான இவர், தனது முதல் போட்டியிலேயே 156.7 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தினார். இதனால் கவனம் ஈர்த்த அவர், நேற்றைய போட்டியில் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை மணிக்கு 155+ கி.மீ வேகத்தில் பந்துவீசிய பவுலர் என்ற பெருமையை பெற்றார்.
தமிழகத்தில் நேற்று 41 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, ஈரோடு-41.2, வேலூர்-40.1, தருமபுரி-40, சேலம்-40.3, கரூர்-40.5, கோவை, மதுரை, நாமக்கல், திருச்சி, திருத்தணி உள்ளிட்ட இடங்களில் 39 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மேலும், வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போவதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுக திட்டங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்னோடியாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரக்கோணத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “தமிழகத்தைப் போல கனடாவிலும் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெருமிதமான தருணம். காலை உணவுத் திட்டத்தால் 16 லட்சம் குழந்தைகள் பயன் அடைகிறார்கள். பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக தான் திமுக உழைக்கிறது” என கூறியுள்ளார்.
இன்று (ஏப்ரல் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶டாஸ்மாக் கடைகளை அகற்றவே அரசியலுக்கு வந்துள்ளோம்: அண்ணாமலை
▶திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் என்னை எதிர்க்கிறார்கள்: சீமான்
▶கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, பாஜக இருவருமே துரோகிகள்: ஜெயக்குமார்
▶பாஜகவுக்கு டெபாசிட் கிடைத்தால் அதுவே பெரிய ஆச்சரியம்: முத்தரசன்
▶தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதிக்கு மாநில அரசு கணக்கு கூற வேண்டும்: நிர்மலா சீதாராமன்
▶நடிகர் விக்னேஸ்வர ராவ் காலமானார்
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர், காஸா விவகாரத்தில் ஐ.நா.வால் உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை எனக் கூறிய அவர், ஐ.நா.வில் இந்தியா நிரந்தர உறுப்பினராக உலகம் முழுவதும் ஆதரவு குரல் எழுந்துள்ளது என்றார். மேலும், அதற்கான வேலைகளில் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, எகிப்து நாடுகள் ஈடுபடுவதாகவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.