India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய 9 சம்மன்களை எதிர்த்து, ஏற்கனவே அவர் தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாதென உத்தரவிடக்கோரி அவர் தாக்கல் செய்த புதிய மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக் கூடியது நுங்கு. கோடையில் அதிகமாக கிடைக்கும் நுங்கை கொண்டு ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். இளநீர் வழுக்கைத் துண்டுகள், நுங்கு (தோல் உரித்தது), பனை வெல்லம் ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும். பின்னர் அதில் இளநீரை ஊற்றி, சில நுங்கு துண்டுகளை சேர்த்தால் சுவையான நுங்கு இளநீர் சர்பத் ரெடி.
கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று புதிய உச்சம் தொட்டு சவரன் ரூ.50,000-ஐ நெருங்கியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹760 உயர்ந்து ₹49,880க்கும், கிராமுக்கு ₹95 உயர்ந்து ₹6,235க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.1,500 உயர்ந்து ஒரு கிராம் ₹81.50க்கும் கிலோ ₹81,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இபிஎஸ் தலைமையில் அதிமுக மக்களவைத் தேர்தலை 2வது முறையாக சந்திக்கிறது. கடந்த தேர்தலில் இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் ஒரே அணியில் இருந்தனர். அதே போல் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இருப்பினும், ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. ஆனால் இத்தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் பாஜக இல்லாமல் அதிமுக போட்டியிடுகிறது. இதில் இபிஎஸ் சாதிப்பாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆளுநர் ரவி பொன்முடியை அமைச்சராக நியமிக்காததற்கு எதிரான தமிழக அரசின் மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டுமென்ற மனு மீதும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற உள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதாக தமிழக அரசு அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.
உலக கோப்பை (ஆசிய பிரிவு) கால்பந்து 2ஆவது கட்ட தகுதிச் சுற்றில் இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. சவுதி பிரின்ஸ் சுல்தான் மைதானத்தில் இன்று நடக்கும் 3ஆவது போட்டியில் இந்திய அணி (117), ஆப்கனை (158) வென்றால், உலக கோப்பை கால்பந்து மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றுக்கு, முதல் முறையாக முன்னேறும். ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி ஆப்கனை வென்றது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதே போல், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இதனால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதை உணவு வழங்கல் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலையில் 4 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக உடன் கூட்டணியை முறித்துகொண்ட அதிமுக இத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
ஏழை மக்களின் ஆசிர்வாதம் தனக்கு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சி கருத்தரங்கில் பேசிய அவர், “என்னை முகலாய மன்னர் அவுரங்கசீப்புடன் எதிர்க்கட்சியினர் ஒப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளனர். இது 104வது அவதூறாகும். எதிர்க்கட்சியினர் விமர்சித்தாலும், ஏழைகளின் ஆசிர்வாதம் எனக்கு உள்ளது. எனது அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த நாட்டு மக்கள் முடிவெடுத்துவிட்டனர்” என்றார்.
வேட்புமனுத் தாக்கல் குறித்து வேட்பாளர்களுடன் திமுக தலைமை நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில், மூத்த வழக்கறிஞர் இளங்கோ வேட்புமனுத் தாக்கல் குறித்த ஆலோசனைகளை வழங்குவார் என்று தெரிகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் புதுமுகங்கள் 11 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.