News April 2, 2024

டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டு கொலை

image

டிக்கெட் பரிசோதனையின் போது டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் பயணி ஒருவரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் அந்த பயணி, டிடிஆரை கீழே தள்ளிவிட்டதில் டிடிஆர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2024

இயக்குநர் அமீரிடம் விசாரணை நிறைவு

image

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக்குடன் இருந்த தொடர்பு குறித்து, இயக்குநர் அமீரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் இன்று காலை ஆஜரான அமீரிடம் NCB அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். முன்னதாக, ஜாஃபர் சாதிக் தயாரிப்பில் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற படத்தை அமீர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

News April 2, 2024

இந்த ராசியினரை அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது

image

சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் குரு பகவான் நுழையப் போகிறார். இதனால் மேஷ ராசியினருக்கு போதிய பண வரவு, கடக ராசியினருக்கு புதிய வேலை வாய்ப்பு, மிதுன ராசியினருக்கு வெளிநாடு செல்லும் யோகம், கன்னி ராசியினருக்கு தொழில் தொடங்கும் வாய்ப்பு மற்றும் துலாம் ராசியினருக்கு செய்யும் செயலில் எல்லாம் வெற்றி கிடைக்கப் போகிறது. இந்த பலன்கள் குறிப்பிட்ட நட்சத்திற்கு ஏற்றார் போல மாறுபடும்.

News April 2, 2024

ஐபிஎல்லில் 250 சிக்ஸர்கள்

image

பெங்களூருவில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சீசனில் மட்டும் இதுவரை 250 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. சிராஜ் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்த லக்னோ வீரர் டி காக், நடப்பு சீசனில் 250வது சிக்ஸரை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். நடப்பு சீசனில் இதுவரை அதிகபட்சமாக SRH வீரர் க்ளாசென் 17 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

News April 2, 2024

டக் அவுட்: மோசமான சாதனை

image

லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் RCB வீரர் மேக்ஸ்வெல் ஒரு மோசமான சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் டக் அவுட்டான அவர், ஐபிஎல்லில் அதிகமுறை (16) டக் அவுட்டான வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ரோஹித் ஷர்மா, தினேஷ் கார்த்திக் இருவரும் 17 முறை டக் அவுட்டாகி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர். மந்தீப் சிங், பியுஷ் சாவ்லா, சுனில் நரைன் 15 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

News April 2, 2024

அபார வெற்றி: புதிய கருத்துக் கணிப்பு

image

தமிழ்நாட்டில் I.N.D.I.A கூட்டணி 39 தொகுதிகளிலும் அபார வெற்றி பெறும் என்று இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த முறை அதிமுக ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த முறை அதுவும் கிடைக்காது என்று இந்தியா டுடே நாளேடு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்திருக்கும் பாஜகவுக்கும் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 2, 2024

இதிலெல்லாம் தமிழகம் முதன்மை மாநிலம்

image

ஊழல், கடன் வாங்குவது, போதைப்பொருள் விற்பனையில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கனவில் வீடு கட்டும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், திமுக அளித்த 520 வாக்குறுதிகளில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றப்படவில்லை என்றார். மேலும், மக்கள் சிந்திக்காவிட்டால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது எனவும் அவர் எச்சரித்தார்.

News April 2, 2024

அழகுக்காக 43 அறுவைசிகிச்சை செய்தவரின் நிலைமை

image

பார்பி பொம்மை போல மாற ஆசைப்பட்டு 43 அறுவை சிகிச்சைகள் செய்த பெண்ணின் நிலைமை மோசமாகியுள்ளது. ஈராக்கை சேர்ந்த டாலியா நயீம் (30) என்ற இளம்பெண் பார்பி போல மாற ஆசைப்பட்டு முகம், மூக்கு மற்றும் மார்பகங்களில் அறுவை சிகிச்சை
செய்துள்ளார். சிகிச்சைக்குப் பின் உதடுகள் வீங்கி முகம் வித்தியாசமாக மாறியுள்ளது. மக்கள் அவரை ஜாம்பி, டெவில் என தற்போது அழைக்கின்றனர். அவரது முகம் எப்படி உள்ளது என நீங்களே கூறுங்கள்.

News April 2, 2024

படம் பிடிக்காவிட்டால் செருப்பால் அடியுங்கள்

image

ஹாட்ஸ்பாட் படம் பிடிக்காவிட்டால் மக்கள் என்னை செருப்பால் கூட அடிக்கலாம் என அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கூறியுள்ளார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் வரவில்லை என வேதனை தெரிவித்த அவர், மலையாளப் படங்களை ஆதரிக்கும் ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தையும் திரையரங்கில் பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஹாட்ஸ்பாட் படம் மார்ச் 29-ல் ரிலீசானது.

News April 2, 2024

இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட ஓபிஎஸ்

image

ராமநாதபுரம் தொகுதியின் பரமகுடி பகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது தவறுதலாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட அவர், பழக்க தோஷத்தில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டுவிட்டதாக கூறினார். பின்னர், பலா சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்தை மீட்கவே போராடுவதாக பேசினார்.

error: Content is protected !!