India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாட்ஸ் அப்பில் மக்களுக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்கள் குறித்து
கருத்துகள் கேட்டு விக்சித் பாரத் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜில் மோடியின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மெசேஜ் அனுப்புவதை நிறுத்த மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாஜகவில் திருச்சி தொகுதியை குறிவைத்து கோஷ்டி மோதல் தொடங்கியுள்ளது. திருச்சியில் பாஜக நிர்வாகி ராம.சீனிவாசன் போட்டியிடுவதற்கு அக்கட்சியை சேர்ந்த திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதற்கு X-ல் பதிலளித்துள்ள ராம.சீனிவாசன், “அரசியல் பணியாற்றுவோர் அந்த மண்ணின் மைந்தனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அந்த மண்ணுக்கான மைந்தனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்” என பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளின் சார்பிலும் பிரசாரம் செய்ய திரையுலக பிரபலங்கள் தயாராகி வருகின்றனர். திமுக சார்பில் வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், அதிமுக சார்பில் விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், பபிதா, ஜெயமணி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக ராதிகா, குஷ்பு, நமீதா, ரஞ்சனா நாச்சியார் உள்பட பலர் பிரசாரம் செய்ய தயாராக உள்ளனர்.
தேர்தலில் வாக்காளர்கள் எப்படி வாக்கு பதிவு செய்ய வேண்டுமென வீடு வீடாக சென்று கையேடு வழங்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ல் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான கருத்துகள், ஆலோசனைகளை கேட்பதற்காக மார்ச் 23ல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐபிஎல் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், போட்டி நடைபெறும் நேரம், எந்தெந்தத் தொலைக்காட்சிகளில் நேரலையில் காணலாம் என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம். தொடக்க நாளான நாளை நடைபெறும் முதல் போட்டி மட்டும் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. மற்ற போட்டிகள், மதியம் 3.30 மணி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா ஓடிடியிலும் நேரலையாக காணலாம்.
அதிமுக நீலகிரி தொகுதி வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி தொகுதியும் அடங்கும். அத்தொகுதியின் எம்எல்ஏவாக தனபால் இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நீலகிரி தொகுதியில் இருந்து ஆ.ராசா 2 முறை (2009 & 2019) மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துரை வைகோவிற்கு, கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். முன்னதாக அவர், வைரமுத்து வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றார். இதுதொடர்பான புகைப்படத்தை X-ல் பதிவிட்ட வைரமுத்து, “தீயின் பொறி திராவிட நெறி, தேர்தலே வெறி, திருச்சியே குறி, வெல்வார் துரை” என அவர் வாழ்த்தியுள்ளார்.
புதிய தேர்தல் ஆணையர்களின் நியமனத்துக்கு தடை கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் ஆணையர்களாக எஸ்.எஸ்.சாந்து, ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டனர். இதற்கு தடை விதிக்கக்கோரும் மனுக்கள் மீதான விசாரணையில், புதிய சட்டத்தில் அரசின் ஆதிக்கத்துக்கு வழிவகை செய்யப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளைக் காண வருபவர்கள் மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. ஆன்லைன் டிக்கெட்டை காண்பித்து போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து சென்னையின் பிற இடங்களுக்கு இலவசமாக செல்லலாம். இச்சலுகை குளிர்சாதனப் பேருந்துகளுக்கு பொருந்தாது.
வேட்பாளர் தேர்வில் ஜெயலலிதா பாணியை எடப்பாடி பழனிசாமி கடைபிடித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலில் 80%க்கும் மேல் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்தவரை புதுமுகங்களையே அதிகளவில் களமிறக்குவார். அதே பாணியை இபிஎஸ்சும் கடைபிடித்திருப்பதை வேட்பாளர் பட்டியல் மூலம் அறிய முடிகிறது.
Sorry, no posts matched your criteria.