India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம் என்று அக்கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், “எந்த சின்னம் கேட்டாலும், அதனை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டதாக கூறுகிறார்கள். இதற்கு எல்லாம் நானும் என் தம்பிகளும், தங்கைகளும் சோர்ந்துவிட மாட்டோம். 23ஆம் தேதியன்று நடக்கும் கூட்டத்தில், 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைப்பேன்” என்றார்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அதில், 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுக செல்வாக்குள்ள வேட்பாளர்களை நிறுத்துவதால் ரெய்டு நடத்தி அவர்களில் ஒருவரை கைது செய்ய உள்ளதாக தனக்கு தகவல் வந்ததாக அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் இதைப் பற்றி தாங்கள் கவலைப்பட போவதில்லை என்றும் அவர் கூறினார்.
பொன்முடி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பொன்முடியை அமைச்சராக்க ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திர சூட், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என எப்படி கூற முடியும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தாண்டு அமேசான் பிரைமில் வெளியாகும் தமிழ் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ▶சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’, ▶நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படம், ▶அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘கேங்ஸ் – குருதிபுனல்’ வெப் தொடர், ▶புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் நடிக்கும் ‘சூழல் 2’ வெப் தொடர்.
ஓபிஎஸ்-க்கு ஒரு தொகுதி மட்டுமே வழங்க முடியும் என்று பாஜக கறார் காட்டுவதால் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அவரச ஆலோசனை மேற்கொண்டார். ஒரு தொகுதியை பெற எதிர்ப்பு தெரிவித்து புகழேந்தி, கு.ப.கிருஷ்ணன், மருது அழகுராஜ், சுப்புரத்தினம் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தனர். மேலும், கூட்டத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், ஓபிஎஸ் முடிவெடுக்க முடியாமல் கூட்டத்தை ஒத்திவைத்தார்.
தேர்தல் ஆணையர்கள் சட்டத்தை சீராய்வு செய்யப் போவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தேர்தல் ஆணையர்கள் நியமனங்கள் சட்டத்தில், தேர்வுக் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர் இடம் பெறும் வகையில் திருத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமனங்களுக்கு தடைகோரும் மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இச்சட்டத்தை சீராய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “WI அணிக்கு எதிரான எனது முதல் டெஸ்ட் போட்டியின்போது, பயத்தில் இருந்தேன். அப்போது என் அருகில் வந்த சச்சின், உலகக் கோப்பைக்காக 21 வருடங்கள் காத்திருந்ததை நினைவுபடுத்தி ஊக்கப்படுத்தினார். அதன் பிறகு தான் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.
அதிக வாக்குகளை பெற்றுத் தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், “அதிமுக – தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த ராசியான கூட்டணி. மக்கள் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும்” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக பொய் செய்திகளை கண்டறிந்து நீக்குவதற்கு உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அரசியல் சாசனம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வரும் வரை உச்ச நீதிமன்றம் இக்குழுவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது கிரிமினல் குற்றம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜக பல ஆயிரம் கோடி ரூபாய்களை குவித்துள்ளது. ஆனால், அடுத்தவர்களை ஊழல்வாதிகளாக காட்டுவதற்கு பாஜக அனைத்து வேலைகளிலும் ஈடுபடும். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் நாளேடுகள், தொலைக்காட்சியில் விளம்பரங்கள் செய்ய முடியவில்லை” என்றார்.
Sorry, no posts matched your criteria.