India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொன்முடி வழக்கில் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அழுத்தமான வாதத்தை தமிழக அரசு முன்வைத்து வருகிறது. அதில், ” 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என கூறுகிறார். ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வந்து நீதி பெற வேண்டியுள்ளது. அரசின் இயல்பான செயல்பாட்டை அவர் தொடர்ந்து தடுக்கிறார். இது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல” எனக் கூறினர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா? என உச்சநீதிமன்றம் மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. பொன்முடி வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “மாநிலத்தின் ஆளுநர் தான்தோன்றி தனமாக நடந்து கொண்டால் ஒரு மாநில அரசு எவ்வாறு செயல்பட முடியும். அரசியல் சாசனத்தை முதலில் ஆளுநர் தெரிந்துகொள்ள வேண்டும். தன் விருப்பங்களை செயல்படுத்த ஆளுநர் பதவியை பயன்படுத்தக் கூடாது” என்றனர்.
பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பான வழக்கில் தமிழக ஆளுநர் R.N.ரவிக்கு உச்ச நீதிமன்றம் 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது எனக் கூறியதற்காக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, சரியான முடிவை ஆளுநர் எடுக்காவிட்டால் நாங்களே உத்தரவு பிறப்பிப்போம் என எச்சரித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதிக்காக பாஜகவினரிடையே பிரச்சனை எழுந்துள்ளது. ராம ஸ்ரீனிவாசனை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா சிவா, மண்ணின் மைந்தனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஸ்ரீனிவாசன், நான் மண்ணுக்கு மைந்தனாக இருப்பேன் என்றார். மண்ணுக்கு மைந்தனாக இருந்தால் போதும் என்றால், சோனியா காந்தி பிரதமராவதை தடுத்தது ஏன்? என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள 1,125 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். Center In Charge, Assistant & Extension Officer பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, +2, Any Degree. வயது வரம்பு: 18-40. தேர்வு: எழுத்து தேர்வு. ஊதிய வரம்பு: ₹37,500-₹43,500/-. கூடுதல் தகவல்களுக்கு <
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜுன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர், 250 நாள்களை கடந்து சிறையில் இருந்து வருகிறார். பல முறை ஜாமின் கோரி அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த போதும் அவரின் கோரிக்கையை நீதிமன்றங்கள் ஏற்கவில்லை. இந்நிலையில், அவரின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடரின் டிராபி போட்டோ ஷூட்டின் போது, அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்றனர். அப்போது சென்னையின் கேப்டனான எம்.எஸ்.தோனி பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, ருதுராஜ் போட்டோ ஷூட்டில் பங்கேற்றார். இதன் மூலம் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து அதிகாரப்பூா்வமாக விடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
பிரபல நடிகை அமலாபாலுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், மகிழ்ச்சியான 2 குழந்தைகள் எனப் பதிவிட்டுள்ளார். இதனால் அவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்க உள்ளதாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். முன்னதாக ஜகத் தேசாய் என்பவரை 2ஆவது திருமணம் செய்த அமலாபால், சமீபத்தில் தாயாகப் போவதாக தெரிவித்திருந்தார்.
2008- ராஜஸ்தான், 2009- ஐதராபாத், 2010- சென்னை, 2011- சென்னை, 2012- கொல்கத்தா, 2013- மும்பை, 2014- கொல்கத்தா, 2015- மும்பை, 2016- ஐதராபாத், 2017- மும்பை, 2018- சென்னை, 2019- மும்பை, 2020- மும்பை, 2021- சென்னை, 2022- குஜராத், 2023- சென்னை. நடந்து முடிந்த 17 சீசன்களில், அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளன. இம்முறை வெற்றி பெறப்போவது யார்?
ஹிட்டான ஓம் சாந்தி ஓம் படத்தில் நடிக்க தீபிகா படுகோன் சம்பளம் வாங்கவில்லை. கடந்த 2007இல் வெளியான அந்தப் படத்தை தயாரித்து கதாநாயகனாக ஷாருக்கான் நடித்திருந்தார். அந்தப் படம் மூலம்தான் தீபிகா படுகோன் அறிமுகமானார். மொழி கடந்து அந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதில் சம்பளம் வாங்காமல் தீபிகா நடித்துள்ளார். எனினும், அந்த ஒரு படம் மூலம் பலகோடி சம்பளம் வாங்கும் நடிகையாக அவர் உயர்ந்தார்.
Sorry, no posts matched your criteria.