India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் இந்த சூழலில், மாற்று கட்சியினர் பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியனும் தனது தொண்டர்களுடன் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
▶கச்சத்தீவு பிரச்னையில் திமுகவும், பாஜகவும் நாடகம் நடத்துகிறது: சி.வி சண்முகம்
▶அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது
▶அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளின் விலை 10% உயர்ந்துள்ளது.
▶அரசியல் ஆதாயத்திற்காகவே கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்: இபிஎஸ்
▶தேர்தல் வந்ததும், சில பார்ட் டைம் அரசியல்வாதிகள் வருகிறார்கள்: ஸ்டாலின்
▶ஐபிஎல்: பெங்களூரு அணி தோல்வி
தோ்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை வழிகாட்டு நடைமுறையை வெளியிட SBI வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக SBI துணைப் பொது மேலாளர் எம்.கண்ணா பாபு கூறிய போது, “இந்தத் தகவலை வெளியிடுவது 3ஆம் தரப்பினரின் போட்டி நிலைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஆா்டிஐ சட்டப் பிரிவு 8(1) (D)-இன் கீழ் பொது வெளியில் வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் விளையாடுகிறது என இபிஎஸ் விமர்சித்துள்ளார். தருமபுரியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “முதல்வர் ஸ்டாலின் பொய்யைத் தவிர எதுவுமே பேசுவதில்லை. அவரது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கிறது. அதை தடுக்க திறமையில்லாத பொம்மை முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கள்வன்’ திரைப்படம், நாளை திரைக்கு வரவுள்ளது. இதில் பாரதிராஜா, இவானா, தீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யானை வேட்டையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்திற்கு, ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார்.
▶ஏப்ரல் – 3, பங்குனி – 21 ▶கிழமை – புதன்
▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM, 4:30 PM – 5:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM
▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM
▶குளிகை நேரம்: 10:30 AM – 12:00 PM
▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶திதி: திதித்துவம்
▶நட்சத்திரம்: 9:47 PM வரை உத்திராடம் பிறகு திருவோணம்
பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், ஐபிஎல் தொடரில் அறிமுகமான 2ஆவது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை பெற்ற முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இதுவரை எந்தவொரு வீரரும், ஐபிஎல்லில் அறிமுகமான 2ஆவது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை பெற்றதில்லை.
மக்களவைத் தோ்தல் குறித்து பரவும் தவறான தகவல்களைச் சரி பாா்க்க, ‘மித் வெர்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டர்’ எனும் புதிய வலைதளத்தை இந்திய தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தவறான தகவல்கள் அதிகம் பரவி வரும் இச்சூழலில், தோ்தல் நடைமுறை முழுவதும் துல்லியமான மற்றும் சரிபார்க்கப்பட்ட தகவல்களை வாக்காளா்கள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்த இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் பெண்களை மதிப்பதில்லை என்று நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார். சிம்லாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், “பெண்களை மதிக்காதவர்கள், பெண்களின் நலனுக்காக உழைப்பார்களா? அவர்கள் நாட்டை சீரழித்துவிட்டனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி கடுமையாக உழைத்துள்ளார். நாம் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். பிரதமர் மோடி சாதாரண மனிதர் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
▶இளநீர் குடிப்பதால் உடல் உஷ்ணம் குறையும். சிறுநீர் பிரச்னையை சரி செய்ய உதவும்.
▶எலுமிச்சை சாறில் உள்ள வைட்டமின் சி, உங்கள் உடல் சூட்டைத் தணிக்கும்.
▶மோரில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், அதிக எனர்ஜி கிடைக்கும்.
▶நீர்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
▶சீரக தண்ணீர் குடிப்பது நல்லது.
▶மாங்காய், மாம்பழம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
Sorry, no posts matched your criteria.