India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் நெருங்கி விட்டதால், கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே, புதிய தமிழகம், புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளன. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை மனிதநேய ஜனநாயக கட்சியினர் நேரில் சந்தித்து, ஆதரவு கடிதத்தை வழங்கினர்.
2007 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் சோகமான ஒன்றாகும். இதில் லீக் சுற்றிலேயே தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதில் மார்ச் 17இல் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் தோல்வியை பதிவு செய்தது. இதில் அதிகபட்சமாக கங்குலி 66, யுவராஜ் 47 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (மார்ச் 17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட தற்போது விண்ணப்பிக்கலாம். தங்கள் பெயரை சேர்க்க விரும்புவோர், www.voters.eci.gov.in இணையதளத்திலும், ‘Voter Helpline’ செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
தங்கம் இறக்குமதி தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நற்செய்தியை அளித்துள்ளது. இறக்குமதி வரி செலுத்தாமல் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே தங்கத்திற்கு அதிக அளவில் நுகர்வோர் கொண்ட நாடுகளில் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில உள்ளது. நம் நாட்டில் தங்கம் இறக்குமதிக்கு 15% வரி செலுத்த வேண்டும். மத்திய அரசின் சமீபத்திய முடிவால், இனி வரிச்சுமை குறையும்.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 – 32 வயதுடையவர்கள், https://eservices.tnpolice.gov.in/ என்ற இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் சென்னையில் உள்ள DGP அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
தமிழகத்தை விட அதிக தொகுதிகளை கொண்ட உ.பி, பீகார், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களிலும், குறைவான தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான், ம.பி மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. 25 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 12 தொகுதிகளுக்கும், 29 தொகுதிகளை கொண்ட ம.பிக்கு 6 தொகுதிகளுக்கும் மட்டுமே முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. 39 தொகுதிகளை கொண்ட தமிழகத்திற்கு மட்டுமே ஒரே கட்டத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. நாமக்கல்லில் மொத்த கொள்முதல் விலையில் ஒருகிலோ கறிக்கோழி (உயிருடன்) ₹108க்கு விற்பனையாகிறது. அதேபோல், எலும்புகள் இல்லாத கோழி கறி ஒரு கிலோ ரூ.210, கறி கோழி ஒருகிலோ ரூ.160, கோழி கல்லீரல் ஒருகிலோ ரூ.120, நாட்டுக் கோழி கறி ஒரு கிலோ ரூ.360, தோல் இல்லாத கோழி கறி ரூ.200க்கு விற்பனையாகிறது.
ஒரு காலத்தில் தனது கணவர் எனக்கு எதிரியாக இருந்தார் என நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார். ‘என் கணவர் என்னை ஒருபோதும் நேசித்ததில்லை. எனக்கும் அவரைப் பிடிக்கவில்லை. திருமணமான சில நாட்களிலேயே எனக்கு எதிரியாகி விட்டார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இதைவிட மோசமானது வேறு என்ன இருக்க முடியும்? என வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 2010இல் சாம்ராட் தஹல் என்பவரை மணந்த அவர் 6 மாதத்தில் விவாகரத்து பெற்றார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி முதல்கட்டத்திலேயே தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்ததால்தான் அடிக்கடி தமிழகத்தில் பிரசாரத்துக்கு வந்தாரா? என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மெரிக்காவில் வரும் 19ஆம் தேதி தொடங்கவுள்ள மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக நம்பர் 1 வீரர் ஜோகோவிச் அறிவித்துள்ளார். மியாமியில் கலந்துகொள்ளாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. எனது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், எனது தனிப்பட்ட மற்றும் தொழில் அட்டவணையை நான் சமநிலைப்படுத்துகிறேன் எனக் கூறிய அவர், ரசிகர்களின் ஆரவாரத்தை அனுபிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.