News April 3, 2024

முக்கிய அறிவிப்பு வெளியாகிறது

image

டெல்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த வாரம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்பு தான் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி செய்பவர்களுக்கு சம்பளம் ரூ.25 உயர்த்தி வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய கூட்டத்திற்கு பின்பும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

News April 3, 2024

பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு

image

தமிழக பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக பாஜக வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், ஸ்மிருதி இரானி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது. அத்துடன், ஓபிஎஸ், டிடிவி, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பாரிவேந்தர், குஷ்பு உள்ளிட்ட 40 பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.

News April 3, 2024

விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகை

image

மக்களவைத் தோ்தல் முடிந்த பின்பு, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என அமைச்சா் உதயநிதி கூறியுள்ளார். “மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்கு 1.60 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில், 1.17 கோடி மகளிருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இது பெரிய திட்டமாக இருப்பதால் குறைகள் விரைவில் சரி செய்யப்பட்டு, விடுபட்ட அனைவருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும்” என்றாா்.

News April 3, 2024

நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே இலக்கு

image

RCBக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 2 போட்டிகளில் 2 ஆட்டநாயகன் விருது வென்றுள்ளது நல்ல உணர்வை கொடுப்பதாக அவர் கூறினார். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என்றும், அந்தப் பயணத்தில் இது வெறும் தொடக்கம் என்று உணர்வதாகவும் மயங்க் தெரிவித்தார்.

News April 3, 2024

தலைவனுக்கான தகுதியை தளபதி பெற்றுவிட்டார்

image

விஜய் சிறந்த பேச்சாளராக இருப்பதால், அரசியல் கட்சி தலைவருக்கான முதல் தகுதியை அடைந்துவிட்டதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். மக்களுக்கு என்ன தேவை என்பதை ஒரு தலைவன் புரிந்திருக்க வேண்டும், அதை விஜய் சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்ப்பதாக கூறிய அவர், விஜய் அரசியலில் அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை பார்க்க மிக ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

சித்தராமையா மகன் மீது வழக்குப்பதிவு

image

அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு பேசியதாக சித்தராமையா மகன் யதீந்திரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரப்புரையின் போது, அமித் ஷாவை குண்டர், ரவுடி, அவர் மீது குஜராத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார் என பேசியிருந்தார். மேலும், பிரதமரையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

News April 3, 2024

தமிழகத்தில் 4 தொகுதிகளை குறிவைத்த பிரதமர்

image

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் 4 தொகுதிகளை குறிவைத்து, பிரதமர் மோடி 4 நாள்கள் பரப்புரை மேற்கொள்கிறார். இதில் 9ஆம் தேதி தென்சென்னை வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து பிரசாரம் செய்யும் மோடி, 10ஆம் தேதி அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையிலும், கூட்டணி வேட்பாளரான பாரிவேந்தரை ஆதரித்து 13ஆம் தேதி பெரம்பலூரிலும், ராதிகா சரத்குமாரை ஆதரித்து 14ஆம் தேதி விருதுநகரிலும் வாக்கு சேகரிக்கிறார்.

News April 3, 2024

அதிமுகவை வீழ்த்துவார்களா EX அதிமுகவினர்

image

நாடாளுமன்றத் தேர்தல் அதிமுக வேட்பாளர்களை வீழ்த்த, திமுக, பாஜக போன்ற கட்சிகள் முன்னாள் அதிமுகவினரை தான் களமிறக்கி இருக்கின்றன. தேனி – தங்கம் தமிழ்ச்செல்வன் & டிடிவி, நெல்லை- நயினார், சேலம்- செல்வகணபதி , கரூர் – செந்தில்நாதன், வேலூர்- ஏ.சி. சண்முகம், அரக்கோணம் -ஜெகத்ரட்சகன், நாமக்கல்- கே.பி.ராமலிங்கம், கோவை-ராஜ்குமார், திருச்சி- செந்தில் நாதன், ராமநாதபுரம்-ஓபிஎஸ் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

News April 3, 2024

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

தைவானின் தலைநகர் தைபேயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தைவானின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜப்பானின் தெற்கு கடலோரப் பகுதி மக்கள் உடனே அங்கிருந்து வெளியேறுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2024

மிகப்பெரிய லிங்கத்தை கொண்ட பிரகதீஸ்வரர் ஆலயம்

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டிடக் கலை பல அதிசயங்களை கொண்டது. குறிப்பாக,13.5 அடி உயரம், 60 அடி சுற்றளவு கொண்ட, தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய லிங்கம் இந்த கோயிலில் உள்ளது. கோயிலின் கருவறையின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் குளிர்ச்சியும், குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை உண்டாக்கும் சிறப்புடையது.

error: Content is protected !!