India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அமமுகவிற்கு குக்கர், ஜி.கே.வாசனின் தமாகாவிற்கு சைக்கிள் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த வரிசையில், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தற்போது மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மதிமுகவுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் மறுத்ததால் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதனையடுத்து, பொன்முடிக்கு அழைப்பு விடுத்திருக்கும் ஆளுநர், உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டார். ஆளுநரின் பதிலை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
➤2007 மே 16 : ஆ.ராசா தொலைத்தொடர்புத் துறை அமைச்சரானார். ➤2007 ஆக 1 : 2G உரிமம் ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை தொடங்கியது. ➤2007 செப் 25 – 2008 ஜன 10: விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன. ➤2008 ஜன 10: முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டது. ➤2008 ஜன 11: ஸ்வான் டெலிகாம், டாடா, யுனிடெக், லூப், ஸ்பைஸ், ஐடியா, டேட்டாகாம், வீடியோகான், ஷ்யாம் ஆகிய நிறுவனங்கள் 2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்றன.
இன்று மதியம் அமைச்சராக பொறுப்பேற்கும் பொன்முடிக்கு மீண்டும் உயர்கல்வித் துறை ஒதுக்கப்படுவதாக ராஜ்பவன் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற கண்டனத்தையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதனையடுத்து, பொன்முடி ஏற்கெனவே வகித்துவந்த உயர்கல்வித் துறை, அறிவியல் & தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகள் பொன்முடிக்கு வழங்கப்படவுள்ளன.
ஐபிஎல் தொடரை முன்னிட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்நாட்டு வீரர்களுக்காக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சீசனில் தமிழர்களின் திறமை என்ன என்பதை காட்ட 12 வீரர்கள் தயாராக உள்ளனர். இத்தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஷ்வின், தினேஷ் கார்த்திக், நடராஜன், ஷாருக் கான், சாய் சுதர்சன், விஜய் சங்கர், சாய் கிஷோர், சுந்தர், வெங்கடேஷ், வருண், சித்தார்த், ஜாதவேத் சுப்ரமணியன் ஆகியோர் விளையாடுகின்றனர்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர்தான் பாஜகவுக்கு என்றைக்குமே செல்வாக்கு மிகுந்த மாவட்டங்கள். தமிழக பாஜக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களை கோவைதான் கொடுத்திருக்கிறது. அதனாலேயே, கோவையில் அண்ணாமலையை களம் இறக்க பாஜக தலைமை முடிவு செய்திருக்கிறது. ஜாதி ஓட்டும் அவருக்கு சாதமாக விழும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் சின்னம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், சின்னம் இல்லாமல் நாதக பரப்புரையில் ஈடுபட்டது. தேர்தல் ஆணையத்திடம் அரிக்கேன் விளக்கு, மைக் உள்ளிட்ட சின்னங்களை நாதக கேட்ட நிலையில், மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை நாதக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் எனத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை, ‘தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்’ என்ற கொள்கை பிரகடனத்தோடு வெளியானது. இதில், மத்திய அரசுடன் இணைந்து விவசாயிகளுக்கு ஆண்டு ஓய்வு ஊதியமாக ₹5,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், ஆளுநர் பதவியை நியமிக்கும்போது மாநில அரசின் கருத்துகளை கேட்க வேண்டும், கூட்டாட்சி மொழிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க விழா கலைநிகழ்ச்சியை கீழ்காணும் தளங்களில் காண முடியும். 1) ஜியோ சினிமா செயலி மற்றும் இணையதளம் 2) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சி 2) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சி 3) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 தொலைக்காட்சி 4) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்.டி. தொலைக்காட்சி 5) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 ஹெச்.டி தொலைக்காட்சி
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்து நின்று, அரசியல் அங்கீகாரம் பெறும் திராணி பாஜகவிடம் இருக்கிறதா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “எந்த சின்னத்தை ஒதுக்கினாலும், நான் போட்டியிடுவேன். வெற்றி பெற்று அங்கீகாரம் பெறுவேன். மக்களவைத் தேர்தலில் 8 கோடி மக்களுடன் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.