India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர்கள், “தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற கூடாது என்ற நோக்கில் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். பாஜகவின் சூழ்ச்சி அரசியலை தேர்தல் ஆணையத்திடம் புகாராக தெரிவித்துள்ளோம். இதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் தருமபுரி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தருமபுரி தொகுதியில் வேட்பாளராக அரசாங்கம் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அன்புமணியின் மனைவி ‘சௌமியா’ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு தொண்டர்களிடையே ஆதரவு இல்லாததால் வேட்பாளர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கோடை வெயில் தொடங்கும் முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
கேரளாவில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகை அருந்ததி நாயர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஐசியூவில் உள்ள அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், சிகிச்சைக்கு அதிகம் செலவாகுவதால் நிதியுதவி தேவைப்படுவதாகவும் அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த அருந்ததி நாயர் கோமா நிலைக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஜு ஜனதா தளத்துடனான பாஜகவின் கூட்டணி முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளது. இதற்காக, அங்கு ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை பாஜக தலைமை துவங்கியிருந்தது. ஆனால், அதிக எண்ணிக்கையில் இடங்களை பாஜக எதிர்பார்ப்பதால், இந்த கூட்டணி முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதனிடையே, பாஜக தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
பொன்முடி அமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் முதல்வரும், ஆளுநரும் சுவாரசியமாக பேசிக்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு பொன்முடி ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்றார். பதவியேற்பு முடிந்த நிலையில், ஆளுநரிடம் பேசிய முதல்வர், இங்கிருந்து நேரடியாக தேர்தல் பரப்புரைக்காக திருச்சி செல்கிறேன் என்றார். அதை கேட்ட ஆளுநர் ரவி, முதல்வரிடம் ஆல் த பெஸ்ட் என்று கூறினார்.
17ஆவது ஐபிஎல் தொடர் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ள நிலையில், மாலை 6.30 மணியளவில் ஐபிஎல் தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். முதல் போட்டியில் யார் வெற்றி பெறுவாங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
புதுச்சேரியில் பாஜக சார்பில் நமச்சிவாயம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஒன்றரை மாதத்திற்கு முன்பாகவே புதுச்சேரியில் பாஜக போட்டியிடும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பின் இன்று வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்., சார்பாக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
சூது கவ்வும் 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முதல்பாகத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்திருந்தனர். வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால் 2ஆம் பாகம் எடுக்கப்படுகிறது. இதில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மிர்ச்சி சிவா நடிக்கிறார். படத்தை எம்எஸ் அர்ஜூன் இயக்குகிறார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ED வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் மார்ச் 28இல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட உள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி, எவ்வித ஆதாரமும் இல்லாமல் ED தன்னை கைது செய்துள்ளதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரியும் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது வரும் வியாழக்கிழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
Sorry, no posts matched your criteria.