India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். இதுவரை 985 ரன்கள் எடுத்துள்ள அவர், இன்னும் 15 ரன்கள் அடித்தால் சிஎஸ்கேவுக்கு எதிராக 1,000 ரன்கள் எடுத்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார். முதல் இடத்தில் ஷிகர் தவான் (1,057) உள்ளார். ஆர்சிபிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர்களின் பட்டியலில் தோனி (740) முதல் இடத்தில் உள்ளார்.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில், ஈரோடு 102 டிகிரி F, கரூர் (பரமத்தி), சேலம் மற்றும் மதுரை விமான நிலையம் பகுதியில் தலா 100 டிகிரி F வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலையில் நீடிக்கும் என்பதால் பகல் 12-3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்ட பாஜக, இந்த தேர்தலில் வீழ்த்தப்படும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், “மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரானதாக இருக்கும். அதை தடுக்கவே முதல்வர் இந்த வெற்றி கூட்டணியை அமைத்துள்ளார். தமிழக மக்களை பழிவாங்கும் பாஜக அரசை இந்த தேர்தலில் நாட்டை விட்டே துரத்த வேண்டும்” என்றார்.
ஐபிஎல் 17வது சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணி இன்னும் சற்று நேரத்தில் பவுலிங் செய்ய உள்ளது. தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என கூறப்படுவதால் சேப்பாக்கம் மைதானத்தில் தோனியைக் காண ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்த போட்டியில் உங்கள் ஆதரவு எந்த அணிக்கு?
தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயம் மோடிக்கு வந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி கூட்டத்தில் பேசிய அவர், “மோடி வாரம் வாரம் தமிழகத்துக்கு வருகிறார். அவரிடம் தொடர்ந்து ஒரு கேள்வியை கேட்டு வருகிறேன். ஆனால் அதற்கு மட்டும் அவரால் பதில் சொல்ல முடியாது. தமிழ்நாட்டுக்கு எதாவது நல்லது செய்தால் தானே அவரால் சொல்ல முடியும். இல்லை என்பதால் திமுகவை விமர்சித்துவிட்டு செல்கிறார்” என்றார்.
ஐபிஎல் 17ஆவது சீசன் தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், டைகர் ஷெரப், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடகி ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் சிவாஜி படத்தின் ‘பல்லேலக்கா’ பாடலை பாடி அசத்தினார். இந்த கலை நிகழ்ச்சிகளை முடிந்த பின் சிஎஸ்கே – ஆர்சிபி போட்டி தொடங்கும்.
செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஏப்.1ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரியும், 3 மாதத்தில் அமர்வு நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முடிவில் அவருக்கு ஜாமின் கிடைக்குமா? என்பது தெரியவரும்.
நீண்ட நாள்களுக்குப் பின் ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தோனிக்கு இது கடைசி தொடராக இருக்கலாம் என்பதால் சேப்பாக்கம் மைதானத்தில் தோனி ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். சேப்பாக்கம் மைதானம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. ‘Thala Is Back’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய ரசிகர்கள் தோனியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். உங்கள் ஆதரவு எந்த அணிக்கு?
வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் சிறப்பு சலுகையை வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பயனாளர்கள் ₹49க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 25GB டேட்டாவை பெறலாம் என அறிவித்துள்ளது. 2024 ஐபிஎல் தொடரையொட்டி இந்த சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஏர்டெல் நிறுவனம் ₹49க்கு ரீசார்ஜ் செய்தால், 20GB டேட்டா வழங்குவது குறிப்பிடத்தக்கது.
எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி கிருமியை மனித உடல்களில் இருக்கும் செல்களில் இருந்து நீக்கும் வழியை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மரபணு திருத்த தொழில் நுட்பத்திற்கு 2020ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே முறையை கடைபிடித்து, நமது செல்களில் இருந்து எச்.ஐ.வி பாதிப்பை நீக்கும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.