News March 23, 2024

கவிதை எழுதியவருக்கு 7 ஆண்டு சிறை

image

ரஷ்யாவில் போருக்கு எதிராக கவிதை எழுதிய ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டின் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உக்ரைன் போர் குறித்து பேசுவோருக்கு ரஷ்யா சிறைத்தண்டனை விதிப்பது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், உக்ரைன் போருக்கு எதிராக கவிதை எழுதிய லுதூனியாவில் வசிக்கும் ஆசிரியர் அலெக்சாண்டர் பைவ்ஷேவ், பயங்கரவாத நடவடிக்கைக்கு மக்களை அழைத்ததாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

8 தொகுதிகளில் நேரடியாக மோதும் பாஜக – காங்கிரஸ்

image

மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளான பாஜக – காங்கிரஸ் 8 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அதில் திருவள்ளூர்(தனி), கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகளுடன், சிவகங்கையில் காங்கிரஸை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள இமகமுகவின் தேவநாதன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதுதவிர விளவங்கோடு இடைத்தேர்தலிலும், இரு தேசிய கட்சிகளும் நேரடியாக மல்லுக்கட்டுகின்றன.

News March 23, 2024

ரத்த சோகையை போக்க இப்படி சாப்பிடுங்க!

image

ரத்த சோகை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் இரும்புச் சத்து பற்றாக்குறையால் ரத்த சோகை உண்டாகிறது. கீரைகள், பேரிச்சம் பழம், பால், இறைச்சி போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. கீரைகள், மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணும்போது அவற்றுடன் எலுமிச்சை, நெல்லி போன்ற வைட்டமின் – சி போன்ற உணவுகளை உட்கொண்டால், நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து உடலால் அதிகம் உறிஞ்சப்படும்.

News March 23, 2024

தோனி இருக்கப் பயமேன்

image

அணியில் தோனி இருப்பதால் கேப்டன் பொறுப்பில் கூடுதலாக எந்த அழுத்தத்தையும் உணரவில்லையென சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டி வெற்றிக்கு பின்னர் பேசிய அவர், ‘கேப்டன் பொறுப்பை நான் ரசித்து மகிழ்ந்தேன். நிலைமையை எவ்வாறு கையாள வேண்டுமென்பதில் ஏற்கெனவே அனுபவம் உள்ளது. அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆடினர்’ என்றார்.

News March 23, 2024

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவித்தால் நடவடிக்கை

image

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் செயலிகளுக்கு விளம்பரம் செய்யக்கூடாதென சமூகவலைதள பிரபலங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியிருக்கும் நிலையில், சமூகவலைதள நிறுவனங்களும் தங்களது பயனர்களுக்கு இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

News March 23, 2024

பிரதான வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் எப்போது?

image

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவாக நல்லநாள் பார்த்து வேட்பு மனுதாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வரும் மார்ச் 25ஆம் தேதி ஒரே நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர். அதே போல, திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்களும், மார்ச் 25ஆம் தேதி அந்தந்த தொகுதிகளில் தங்களது வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

News March 23, 2024

வரலாற்றில் இன்று!

image

➤1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங், சிவராம் ராஜகுரு, சுக்தேவ் தபார் ஆகியோர் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டனர். ➤ 1942 – இரண்டாம் உலகப் போர் : இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர். ➤1956 – பாகிஸ்தான் உலகின் முதலாவது இஸ்லாமியக் குடியரசானது. ➤1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

News March 23, 2024

இந்தியாவிடம் கடன் கேட்கும் மாலத்தீவு அதிபர்

image

மாலத்தீவில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாக அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடரும் முய்சு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இந்தியா மாலத்தீவின் நெருங்கிய கூட்டாளியாக தொடரும். மாலத்தீவுக்கு இந்தியா கடனுதவி வழங்க வேண்டும்’ என்றார். கடந்தாண்டு மாலத்தீவுக்கு 400 மில்லியன் டாலர்களை இந்தியா கடனாக அளித்திருந்தது.

News March 23, 2024

ஆர்சிபி தோல்விக்கு காரணம் இதுதான்!

image

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதற்கு 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்ததே காரணமென ஆர்சிபி அணியின் கேப்டன் டூபிளெசிஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற போட்டிக்கு பின்னர் பேசிய அவர், நாங்கள் பேட்டிங் செய்த போது, சிஎஸ்கே அணியின் ஸ்பின்னர்கள் நல்ல நெருக்கடி கொடுத்தனர். சேஸிங்கில் சிஎஸ்கே எப்போதும் முன்னிலையில் இருக்கும். நாங்கள் நெருக்கடி தர முயற்சித்தோம். ஆனால் அது பலிக்கவில்லை’ என்றார்.

News March 23, 2024

எதிர்க்கட்சிகளை முற்றிலும் அழிக்க நினைக்கும் பாஜக!

image

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் கைது குறித்து பேசிய அவர், ‘ஹேமந்த் சோரன், கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது. இதற்காக வருமான வரித்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது’ என்றார்.

error: Content is protected !!