India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சையில் நடைபயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். சென்னை கிண்டியில் நேற்று பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர், அங்கிருந்து திருச்சி சென்றார். பின்னர் சிறுகனூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார். இந்நிலையில் இன்று காலை தஞ்சையில் நடைபயணமாக அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உங்கள் அன்பை பார்க்கும் போது, எனக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது என நடிகர் விஜய் எமோஷனலாக பேசியுள்ளார். கேரளாவில் ரசிகர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடும், கேரளாவும் எனக்கு 2 கண்கள் மாதிரி. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த 32 வருடங்களில் என்னை ஒரு நடிகனாக மட்டும் பார்க்காமல், உங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்ததற்கு நன்றி. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உங்கள் விஜய் தான்” எனக் கூறியுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போதை அதிகமானதால் பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முட்டுக்காடு பகுதியில் தாயின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அனு சத்யா (31) தனியார் விடுதியை புக் செய்திருக்கிறார். நேற்றிரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது இந்த விபரீதம் நடைபெற்றதாக தெரிகிறது. அனு சத்யாவின் தோழி சைலஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமான நடிகை மகாலட்சுமி, தனது பிறந்தநாளில் உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “எனது பிறந்தநாளில் விலைமதிப்பற்ற பரிசு வழங்க முடிவு எடுத்தேன். உடல் உறுப்புகள் தானம் செய்வதன் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். இறந்த பிறகும் எனது உறுப்புகள் மற்றவர்கள் வடிவத்தில் வாழும்” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்கு ஏணி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். இக்கட்சியின் சார்பில் நவாஸ் கனி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அகில இந்திய கட்சியான IUML, கூட்டணி பேச்சுவார்த்தையின்போதே சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று திமுகவிடம் கூறியிருந்தது. அதன்படி, தற்போது ஏணி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
திமுகவில் குடும்பத்தினருக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுபோல விமர்சித்துவிட்டு, தருமபுரியில் பாமக தனது வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியாவை நிறுத்தியுள்ளது. விருதுநகரில் பாஜக தனது வேட்பாளராக சரத்குமார் மனைவி ராதிகாவை நிறுத்தியுள்ளது. விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரனை தேமுதிக களமிறக்கியுள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. கடந்த 16 வருட ஐபிஎல் வரலாற்றில், சென்னைக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணி ஒருமுறை கூட வெற்றி பெற்றது இல்லை. கடைசியாக 2008இல் ராகுல் டிராவிட் தலைமையிலான பெங்களூரு அணி தான் சென்னையை வீழ்த்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறது தேர்தல் ஆணையம். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு முன்னிலையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், தபால் வாக்கு செலுத்தும் முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், தேர்தலில் கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் விவரிக்கப்படவுள்ளது.
அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் உயர்நீதிமன்ற அமர்வில் மேல் முறையீடு செய்திருக்கிறார். இந்த மனு மீதான விசாரணை மார்ச் 25ஆம் தேதியே நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. “அதிமுகவின் சின்னம் மற்றும் கொடி பறிக்கப்பட்டது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என்று ஓபிஎஸ் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மத்திய தொகுதியில் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளார். இத்தொகுதியில் திமுக சார்பாக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். காலை 8.30 மணியளவில் திறந்த வாகனம் மூலம் பிரசாரத்தை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தின் ஐயா தெரு, பஜார் தெரு ஆகிய சந்திப்புகளில் பிரசாரம் செய்யவிருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.