News March 23, 2024

மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

image

இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடைபெறுகிறது. மீனவர்களை விடுவிக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், பிற மாநில மீனவர்கள் குமரி எல்லையில் மீன் பிடித்ததை கண்டித்து குமரி மாவட்ட மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News March 23, 2024

ஓபிஎஸ் வருகிற திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல்

image

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் வருகிற திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதுகுறித்து ஓபிஎஸ் அளித்துள்ள பேட்டியில், “இரட்டை இலை சின்ன வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு எங்களுக்கு சாதமாக இருக்கும். அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளேன்” என்றார்.

News March 23, 2024

இந்தியாவின் எடிசன் ‘ஜி.டி.நாயுடு’ பிறந்தநாள்

image

தமிழ்நாடு கண்ட அறிவியல் மாமேதைகளில் ஒருவரான ஜி.டி.நாயுடுவின் 131ஆவது பிறந்தநாள் இன்று. கோவை மாவட்டம் கலங்கல் கிராமத்தில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு, ஆர்வத்துடன் படித்து மேதை ஆனார். அவர் கண்டுபிடித்த சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றைதான் நாம் இன்றும் பயன்படுத்திக் வருகிறோம். விதையில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு ஆகியவற்றையும் கண்டுபிடித்து வளரச் செய்தவர் ஜி.டி.நாயுடு.

News March 23, 2024

நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம்-நாகர்கோவில் 25ஆம் தேதியும், நாகர்கோவில்-தாம்பரம் 24 & 31ஆம் தேதிகளிலும், நாகர்கோவில்-சென்ட்ரல் 24ஆம் தேதியும், சென்ட்ரல்-நாகர்கோவில் 25ஆம் தேதியும், எழும்பூர்-நாகர்கோவில் 28ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதனால் குமரி-புனே எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 23, 2024

12,000 ரன்களை கடந்த விராட் கோலி

image

டி20 போட்டிகளில் 12,000 ரன்களை கடந்து, விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 6 ரன்கள் எடுத்த போது, டி20 போட்டிகளில் 12,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற புதிய மைல் கல்லை எட்டினார். மேலும், கெயில், சோயிப் மாலிக், பொல்லார்டு, ஹேல்ஸ், வார்னருக்கு பிறகு 12,000 ரன்களை கடந்த 6ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அவரை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

News March 23, 2024

பிரதமர் மோடி கண்டனம்

image

ரஷ்யாவில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு செயலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். நேற்றிரவு பொது இடத்தில் திடீரென புகுந்த ISIS தீவிரவாதிகள் பொது மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து Xஇல் பதிவிட்டிருக்கும் மோடி, “இந்நேரத்தில் ரஷ்ய நாட்டுக்கும், மக்களுக்கும் இந்தியா துணை நிற்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

News March 23, 2024

CSKvsGT: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்

image

சென்னை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. முதல் போட்டிக்கான டிக்கெட் அதிகபட்சமாக ₹6,000 வரை விற்பனையான நிலையில், இம்முறை ₹1,700 – ₹6,000 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை காலை 10.10 மணிக்கு, சிஎஸ்கே மற்றும் பேடிஎம் இன்சைடர் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

News March 23, 2024

மார்ச் 31ஆம் தேதி வழக்கமான பரிவர்த்தனைகள் இருக்காது

image

வருகிற 31ஆம் தேதி வங்கிகளில் வழக்கமான பரிவர்த்தனை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயரதிகாரிகள் கூறுகையில், “இந்த நிதியாண்டு 31-ம் தேதியுடன் நிறைவடைவதால், அரசு கணக்குகளில் பணம் எடுத்தல், செலுத்துதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிக் கிளைகள் மட்டும் செயல்படவுள்ளன. அன்றைய தினம் வழக்கமான பரிவர்த்தனைகள் நடைபெறாது” என்றனர்.

News March 23, 2024

பரிதாப நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள்

image

தேர்தலுக்கு தேர்தல் கம்யூனிஸ்ட் கட்சிகள் நிலை, மோசமாகி வருகிறது. காங்கிரஸுக்கு வலுவான எதிர்க்கட்சியாக திகழ்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், மே.வங்கம், திரிபுரா, கேரளாவில் ஆட்சியில் இருந்தன. மே.வங்கத்தில் 2011ல் திரிணாமுலிடமும், திரிபுராவில் 2018ல் பாஜகவிடமும் ஆட்சியை இழந்தது. நாடாளுமன்றத்திலும் எம்பிக்கள் எண்ணிக்கை 5ஆக குறைந்துவிட்டது. தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை பரிதாபமாகி உள்ளது.

News March 23, 2024

ராமாயணத்தில் உள்ள புஷ்பக் விமானம்

image

இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ள மறுபயன்பாட்டு விண்கல புறப்பாடு வாகனத்துக்கு ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புஷ்பக் (புஷ்பகம்) விமான பெயர் வைக்கப்பட்டுள்ளது. குபேரனால் பயன்படுத்தப்பட்ட அந்த வாகனத்தை ராவணன் அபகரித்து கொண்டதாகவும், ராவணனை வதம் செய்தபின், அயோத்திக்கு சீதா தேவியுடன் அந்த வாகனத்திலேயே ராமர் திரும்பி வந்ததாகவும் ராமாயணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!