India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் 2021இல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால், அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், “இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதையும், சித்ரவதை செய்யப்படுவதையும் பாஜக அரசு ஏன் தடுத்து நிறுத்தவில்லை. அதானியின் வர்த்தக நலனுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த பாஜக அரசு, மீனவர்களுக்காக ஏன் இதுநாள் வரை அழுத்தம் கொடுக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தேதி இன்று வெளியாக உள்ள நிலையில், எத்தனை கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2004இல் 4 கட்டங்களாகவும், 2009இல் 5 கட்டங்களாகவும், 2014இல் 9 கட்டங்களாகவும், 2019இல் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த முறை மார்ச் 10ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், இம்முறை சற்று தாமதமாகியுள்ளது.
மநீமவில் இருந்து விலகுவதாக மாநில பரப்புரை செயலாளர் டாக்டர் அனுஷா ரவி, சரியாக இன்று நண்பகல் 12:02 மணிக்கு அறிவித்தார். ஆனால், கட்சியில் இருந்து விலகி ஒரு மணி நேரத்தில் (மதியம் 1 மணிக்கு) அவர் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் இதுபோன்று இன்னும் பலர் கட்சித் தாவ வாய்ப்புள்ளது. அந்த வரிசையில் அதிமுக முன்னாள் எம்பி ஒருவரும் பாஜகவில் இன்று ஐக்கியமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி வருவதாக முதல்வர் ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார். குமரியில் கூட்டத்தில் பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய முதல்வர், “திமுக அரசின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க கடந்த பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். புதிய கல்விக்கொள்கை வேறு, பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டம் வேறு. புதிய கல்விக்கொள்கையை பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். பிரதமர் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு குழு அமைத்துள்ளோம். அக்குழுவின் அறிக்கைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தங்கர் பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் 2002இல் வெளியான படம் ‘அழகி’. இப்படம் 22 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இந்த செய்தியை X தளத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன், “22 வருடங்களுக்கு பிறகு மார்ச் 29ஆம் தேதி மீண்டும் என் ‘அழகி’யை பாக்க போறேன்! என் மனசுக்குள்ள இருக்குற ஆசை யாருக்கு புரியும்?!” என குறிப்பிட்டுள்ளார். யாருக்கெல்லாம் இந்த படம் பிடிக்கும்?
திமுக கூட்டணியில் காங்., கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குமரி, விருதுநகர், ஆரணி, தேனி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவள்ளூரில் போட்டியிட வாய்ப்புள்ளது. திருச்சிக்கு பதிலாக மயிலாடுதுறை, கரூருக்கு பதிலாக ஈரோடு தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
மநீமவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில பரப்புரை செயலாளர் டாக்டர் அனுஷா ரவி அறிவித்துள்ளார். கமலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மநீமவில் 3 ஆண்டுகள் பயணம் செய்ததில் மகிழ்ச்சி; இருப்பினும் தேர்தல் அரசியலில் மநீம பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிட திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கணிசமானத் தொகுதிகளை பெற வேண்டும் என்றும் திமுகவின் ஸ்டார் வேட்பாளர்களான கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரை வீழ்த்த வேண்டும் என்றும் பாஜக தேசிய தலைமை விரும்புகிறது. இதற்காக ராதிகா, குஷ்பு போன்ற திரைப் பிரபலங்களை களமிறக்க முயற்சிக்கிறது.
Sorry, no posts matched your criteria.