News April 4, 2024

சனாதனத்தை எதிர்த்த போது காங். மெளனம் காத்தது

image

காங்கிரஸ் கட்சியின் முக்கிய செய்தித் தொடர்பாளரான கவுரவ் வல்லப், திடீரென கட்சியில் இருந்து விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர், I.N.D.I.A கூட்டணியில் சில பெரிய தலைவர்கள் சனாதனத்தை எதிர்த்த போது, காங்கிரஸ் தலைமை மௌனம் காத்தது தன்னை பெரிதும் காயப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். மேலும், ராமர் கோயில் குறித்த கட்சியின் நிலைப்பாட்டில் தனக்கு உடன்பாடில்லை என்றும் அவர் கூறினார்.

News April 4, 2024

தமிழ் நடிகை கவலைக்கிடம்

image

சாலை விபத்தில் படுகாயமடைந்த நடிகை அருந்ததி நாயர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வென்டிலேட்டரின் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ரத்தம் உறைந்ததால், மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவரது சகோதரி ஆர்த்தி தெரிவித்துள்ளார். அவரின் சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ₹2 லட்சம் வீதம் இதுவரை ₹40 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாம்.

News April 4, 2024

பாஜக ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பிம்பம்

image

பாஜகவை திமுக போட்டியாக கருதவில்லை என எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். அதிமுகவை தான் திமுக எதிர்க்கட்சியாக பார்க்கிறது. ஆனால், அந்த தகுதியுடன் அவர்கள் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய கனிமொழி, பாஜக என்பது ஊடகங்களால் உருவாக்கப்பட்ட பிம்பம் என விமர்சித்தார். மேலும் பேசிய அவர், புயல், மழைக்கு வராத பிரதமர் மோடி, வாக்குகளை வாங்குவதற்கு மட்டும் வருவதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

News April 4, 2024

மும்பையில் இருந்து ரோஹித் ஷர்மா விலகல்?

image

IPL-2024 சீசனுக்கு பிறகு ரோஹித் ஷர்மா MI அணியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித்துக்கு பதிலாக பாண்டியாவுக்கு கேப்டன் பதவி கொடுத்தது சர்ச்சையானது. இதற்கிடையில் ஹர்திக் கேப்டன்சியில் ரோஹித் அதிருப்தியில் இருப்பதாக MI வீரர் ஒருவர் கூறியதாக பல ஊடக செய்திகள் கூறுகின்றன. MI-லிருந்து விலகும் அவர், அடுத்த ஆண்டு மெகா ஏலத்தில் பங்கேற்பார் என தெரிகிறது.

News April 4, 2024

பேண்ட் எய்ட்டுகளால் புற்றுநோய் ஆபத்து

image

காயங்களுக்கு பேண்ட் எய்ட் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வு தகவல் ஒன்று எச்சரிக்கிறது. ரத்த காயத்துக்கு உடனடியாக பேண்ட் எய்ட் பயன்படுத்தும் வழக்கம் அனைவரிடமும் உள்ளது. இந்நிலையில், பேண்ட் எய்ட்டுகளில் ஆர்கனிக் ஃப்ளோரின் என்ற ரசாயனம் அதிகம் இருப்பதாகவும், இதனால் அதை பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

News April 4, 2024

அமித் ஷா இன்று தமிழகம் வருகை

image

தேர்தல் பரப்புரைக்காக அமித்ஷா இன்று தமிழகம் வர உள்ளார். நாளை காலை சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து வாகனப் பேரணியில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக தென்காசி செல்லும் அவர், அதிமுக சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். முன்னதாக நேற்று அமித்ஷா வருவதாக இருந்த நிலையில், அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

News April 4, 2024

ஒரே ஆண்டில் ரூ.17,545 கோடியிலிருந்து ‘பூஜ்யம்’

image

பைஜூ அதிபர் ரவீந்திரனின் சொத்து ஒரே ஆண்டில் ரூ.17,545 கோடியில் இருந்து பூஜ்யமாகியுள்ளது. 2011இல் தொடங்கப்பட்ட பைஜூ செயலி மூலம் தொடக்க கல்வி முதல் எம்பிஏ வரை பயிற்சி அளிக்கப்பட்டது. 2022இல் பைஜூ மதிப்பு 22 பில்லியன் டாலராகவும், ஓராண்டுக்கு முன்பு ரவீந்திரனின் சொத்து ரூ.17,545 கோடியாகவும் மதிப்பிடப்பட்டது. ஆனால் 2024 போர்ப்ஸ் பட்டியலில் அவரின் சொத்து பூஜ்யம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 4, 2024

கர்நாடகாவில் மோடி அலை இல்லை

image

கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என அம்மாநில துணை முதல்வர் சிவகுமார் விமர்சித்துள்ளார். மத்திய அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கர்நாடகாவிற்கு எந்த திட்டத்தையும் தராததால் இங்கு மோடி அலை இல்லை என்று கூறினார்.

News April 4, 2024

BREAKING: முதல்வர் ஸ்டாலின் கொந்தளிப்பு

image

புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21,000 கோடிக்கு மேல் ஏழைகளிடம் பறித்துள்ளார்கள் எனக் கூறிய அவர், சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை செல்லாததாக்கி வங்கிகளில் வரிசையில் நிற்கவைத்து வதைத்தார்கள். ஆனால் ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் பிரதமர் மோடி புளுகுகிறார் என விமர்சித்துள்ளார்.

News April 4, 2024

அமேசானின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்

image

அமேசான் இணையதள சேவையில் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் ஏராளமானோரை அமேசான் நிறுவனம் பணியில் அமர்த்தியது. ஆனால் கொரோனா பாதிப்பு விலகிய பிறகு 2022,23ஆம் ஆண்டுகளில் 27,000 பேரை பணிநீக்கம் செய்த அமேசான், தற்போது விற்பனை, மார்க்கெட்டிங், தொழில்நுட்ப பிரிவு ஊழியர்களில் நூற்றுக்கணக்கானோரை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!