India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரஷ்யாவில் 60 பேரை பலிகொண்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், அந்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற முதல் மிகப்பெரிய தாக்குதலாகும். 2004இல் பெஸ்லான் பள்ளிக்குள் புகுந்த செசன்ய தீவிரவாதிகள், 1,100 பேரை சிறைபிடித்தனர். அவர்களை மீட்கும்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 334 பேர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்துக்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் ரஷ்யாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புஷ்பக் மூலம் மறுபயன்பாட்டு விண்கல புறப்பாடு வாகனம் (ஆர்எல்வி) கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து சாதனை படைத்துள்ளது. செயற்கைக்கோள்களை ஏவ பயன்படும் ராக்கெட்டுகளுக்கு பதிலாக ஆர்எல்வி வாகனத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் நாடுகள் மட்டுமே இதனை தயாரித்திருந்தன. அந்தப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 சுங்கச்சாவடியின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அரியலூர் – மணகெதி, திருச்சி – கல்லக்குடி, வேலூர் – வல்லம், விழுப்புரம் – தென்னமாதேவி, திருவண்ணாமலை – இனம்கரியாந்தல் ஆகிய சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
சென்னையில் 33 வயது பெண் ஒருவர் மார்ச் 19ஆம் தேதி மொபைல் செயலி மூலம் பைக் டாக்ஸி புக் செய்திருக்கிறார். கிண்டியில் இருந்து கொட்டிவாக்கம் சென்ற அவருக்கு பைக்கை ஓட்டிவந்த நடன சபாபதி (22) பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அத்துடன், இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியிருக்கிறார். பெண்ணின் புகாரையேற்று போலீசார் நடன சபாபதியை கைது செய்துள்ளனர்.
பழனி தண்டாயுதபாணி சாமி திருக்கோயிலின் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கிரி வீதிகளில் மயில், ஆட்டுக்கிடா, காமதேனு வாகனங்களில் சாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் 6ஆம் நாளான இன்று, மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது. பின்னர், இரவு 8.30 மணிக்கு மணக்கோலத்தில் வெள்ளித் தேரில் சாமி உலா வருவார்.
காவல் உதவி ஆணையர் ஏ.கே. சிங் மோசமாக நடந்து கொண்டதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான அவர், நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஏ.கே. சிங் மோசமாக நடந்து கொண்டதால், அவரை பணிநீக்கம் செய்யும்படி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். எந்த விதத்தில் மோசமாக நடந்தார் என கெஜ்ரிவால் குறிப்பிடவில்லை.
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6,235ஆகவும், சவரன் தங்கம் ரூ.49,880ஆகவும் அதிகரித்து புதிய உச்சம் தொட்டது. ஆனால் நேற்று கிராமுக்கு ரூ.35ம், சவரனுக்கு ரூ.280ம் குறைந்தது. இதையடுத்து 2வது நாளாக இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,185 ஆகவும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480 ஆகவும் விற்பனையாகிறது.
காமெடி நடிகர் சேஷு உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக லொள்ளு சபா நடிகை ஸ்வேதா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ரீ யூனியன் நிகழ்ச்சியில் தான் அவரை கடைசியாக சந்தித்தேன். அன்றைக்கு தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சென்று பார்த்த போது, முன்பு இருந்ததைவிட இப்போது நன்கு தேறியுள்ளார். கேட்பதற்கெல்லாம் பதில் சொல்கிறார். சீக்கிரமே குணமாகி வருவார்” எனக் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் 40 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிமுகம் செய்யவிருக்கிறார். சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அதில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளனர். இக்கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வியட்நாமில் 34 வயது நபரின் அடிவயிற்று பகுதியில் 30 செ.மீ. நீள விலாங்கு மீன் உயிருடன் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கபட்ட அவரின் அடிவயிற்றை எக்ஸ்ரே செய்ததில் மீன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் மீன் அகற்றப்பட்டது. மலக்குடல் வழியாக மீன், பெருங்குடல் சென்று சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.