India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழிலில் ஜி.வி. பிரகாஷை வைத்து புதிய படத்தை இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கவுள்ளார். கேங் ஆப் வாசிப்பூர் உள்பட இந்தியில் பல படங்களை எடுத்துள்ள அவர், தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாகவும், விஜய்யின் லியோ படத்தில் சிறிய பாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது அவர், பான் இந்தியா அளவில் ஜி.வி. பிரகாஷை வைத்து படமெடுக்க இருக்கிறார். மே மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதி சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாமகவை தங்கள் கூட்டணி பக்கம் இழுக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த சி.வி.சண்முகம், விருப்ப தொகுதிகளை தர தயாராக இருப்பதாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் (3 மணி) வெளியாக இருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் தேதிகளை வெளியிட இருக்கிறார். வேட்புமனு தாக்கல், வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணும் தேதிகள் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கின்றன. உலகின் மாபெரும் தேர்தலுக்கு தயாரா மக்களே?
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களவைத் தேர்தலின் போது முடக்கப்பட்டு விடுமோ? என்கிற அச்சம் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. ஓபிஎஸ் & இபிஎஸ் ஆகிய இருதரப்பும் தேர்தல் ஆணையத்தில், சின்னம் தொடர்பாக இதுவரை எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று அறிய முடிகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய பரோடா அணி முன்னாள் வீரரான சமர்ஜித்சிங் கெய்க்வாட், ரூ.20,000 கோடி சொத்துகளுக்கு அதிபதி ஆவார். பரோடா சமஸ்தான மன்னரான ரஞ்சித்சிங் கெய்க்வாட்டின் மகனான இவர்,1987-89 வரை துவக்க வீரராக விளையாடியதோடு, அதன்பிறகு பரோடா கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார். தந்தையின் மறைவுக்கு பிறகு, 2012ல் மன்னராக பதவியேற்றதன்மூலம், ரூ.20,000 கோடி சொத்துகளுக்கு அதிபதியானார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். எனினும் வரும் 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் எம்.பி., விஜயகுமார் பாஜகவில் இணைந்துள்ளார். குமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பையும், மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ஒருங்கே கொடுத்தார் ஜெயலலிதா. ஜெ., மறைவுக்கு பிறகு EPS- OPS என அணிகள் பிரிந்தபோது, இவர் இபிஎஸ் அணியில் இருந்தவர். அவரைத் தொடர்ந்து, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கமும் பாஜகவில் இணைந்தார்.
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ₹400 ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் கார்கே, “அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டங்கள் & தொழிலாளர்களின் சுகாதார உரிமை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும். ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் போல நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.
WPL எலிமினேட்டர் போட்டியில் மும்பையை வீழ்த்தி ஆர்சிபி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டிக்குப் பின் ஆர்சிபி வீராங்கனை எல்லிஸ் பெர்ரிக்கு டாடா நிறுவனம் புதுமையான பரிசை வழங்கியுள்ளது. UP வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில், பெர்ரி அடித்த சிக்ஸர் பரிசாக வழங்க நிறுத்தப்பட்டிருந்த டாடா காரின் கண்ணாடியை உடைத்தது. உடைந்த கண்ணாடித் துண்டுகளை ஒன்றாக சேர்த்த கண்ணாடி அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவி கால விவகாரத்தில் ஆளுநர் வரம்பு மீறி செயல்படுகிறார். ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்யம் நடத்துகிறார். தேர்தலுக்குப் பின் அவரது ராஜ்யத்திற்கு முடிவு கட்டப்படும் என அமைச்சர் ரகுபதி காட்டமாக பேசியுள்ளார். மேலும், அமைச்சராக பொன்முடி பதவியேற்பதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் தேதி அறிவித்தாலும் பதவியேற்பு விழா கண்டிப்பாக நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.