India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி வெள்ளிக் கிழமை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம், வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக பொது விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இதுவரை 300 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. குஜராத்-பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வரும் இன்றைய போட்டியில், பஞ்சாப் வீரர் ப்ரார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கில் சிக்ஸர் விளாசினர். அதன் மூலம், இந்தத் தொடரில் இதுவரை 300 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன. அதிகபட்சமாக KKR அணி 3 போட்டிகளில் 45 சிக்ஸர்கள், ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் 39 சிக்ஸர்களை விளாசியுள்ளது.
கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ரூ.680-க்கு மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரை எதிர்த்து பாஜக வேட்பாளராக போட்டியிடும் அவர் தனது வேட்புமனுவில், ‘2018-19இல் ஆண்டு வருமானம் ரூ.10.8 கோடி, 2019-20இல் ரூ.4.5 கோடி, 2020-21இல் ரூ.17.5 லட்சம், 2021-22இல் ரூ.680, 2022-23இல் ரூ.5.6 லட்சம்’ என படிப்படியாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்ததால் அவர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இதன் காரணமாக அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து சேனா அமைப்பு மனு தாக்கல் செய்தது. அதனை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
‘முரண்பாடான கொள்கை உடைய நீங்கள் ஒன்று சேரும் போது, தமிழ்நாட்டை காப்பாற்ற நாங்கள் ஒன்று சேரக்கூடாதா?’ என முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வினவியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ராமதாஸ், பா.ஜ.கவிடம் சரணடைந்திருப்பதாக ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு அன்புமணி, ‘திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே ஒரே கொள்கையா உள்ளது’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியலுக்கு வருமாறு பொதுமக்கள் தன்னை வற்புறுத்தி வருவதாக பிரியங்கா காந்தி கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வாத்ரா தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர், ‘காந்தி குடும்பத்தின் உறுப்பினராக அரசியலில் இருந்து விலகியிருப்பது கடினம். அமேதியில் இரானி உள்ளிட்ட எந்தவொரு தலைவரையும் எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளேன். ராகுலை தேர்வு செய்யாதது தவறு என அமேதி மக்கள் உணர்கின்றனர்’ என்றார்.
பிரபல தமிழ் நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் ஃபிலிப் (83) எர்ணாகுளத்தில் இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மும்பையில் பல காலம் வசித்துவந்த அவர், கடைசி காலத்தை பிறந்த ஊரான எர்ணாகுளத்தில் செலவிட்டார். அவருக்கு ஆலியம்மா என்ற மனைவியும் மீரா ஜாஸ்மினுடன் சேர்த்து 5 பிள்ளைகளும் உள்ளனர். இறுதி ஊர்வலம் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் வெளியிட்டுள்ளது. அதில், மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு வந்தால், UAPA, PMLA, CAA போன்ற கொடூரமான சட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், பெரும் செல்வந்தர்களுக்கு வரி, பொது செல்வ வரி, பரம்பரை வரி ஆகியவற்றிற்காக ஒரு புதிய சட்டம், நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதி இரட்டிப்பு போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படாவிட்டால் இனிமேல் மக்களவைத் தேர்தல் நடைபெறுமா என்பதே சந்தேகம் தான் என ப.சிதம்பரம் அச்சம் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் பிரசாரத்தில் பேசிய அவர், ஒரு மாநிலத்தின் முதல்வரை கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்றார். மேலும், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என குற்றம்சாட்டினார்.
ஐபிஎல் தொடரில் இன்று குஜராத்-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. குஜராத் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி இதுவரை 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று 7ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் யார் ஜெயிப்பாங்க?
Sorry, no posts matched your criteria.