India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுகவை அழிக்க இதுவரை எவரும் பிறக்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் சூளுரைத்துள்ளார். வேலூரில் அவரது மகனை ஆதரித்து பேசிய அவர், ” திமுகவை அழிப்பேன் என்று பலரும் சொல்லிவிட்டார்கள். ஆனால், அவர்களால் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. இனிமேலும் பார்க்க முடியாது. என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கட்சிக்காக தந்துள்ளேன். திமுக நெருப்பாற்றில் நீந்திய கட்சி, எப்போதும் யாராலும் அழிக்க முடியாது” என்றார்.
தனது நீண்ட நாள் காதலனுடன் நடிகை எமி ஜாக்சனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் இருவரும் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை சட்ட விரோதம் என அறிவிக்க கோரியும், இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க கோரியும் ஆம் ஆத்மி கோரிக்கை வைத்துள்ளது. முன்னதாக, கெஜ்ரிவாலை வரும் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நெல்லை தொகுதியில் சிம்லா முத்துசோழனுக்கு பதிலாக ஜான்சி ராணி போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏப்.19இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 32 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருக்கு சீட் வழங்குவதா என அதிமுகவில் எதிர்ப்பு எழுந்ததால் அவர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர இளம் வீரர் மதீஷ பதிரன காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் தற்போது சென்னை அணியுடன் இணைந்துள்ளார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாகவும், தோனியின் செல்லப் பிள்ளையாகவும் வலம் வந்த பதிரன காயம் காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பெங்களூரு அணியுடனான முதல் போட்டியில் அவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதத்ககது.
பாஜக மனித குலத்திற்கே ஆபத்து என நாதக பிரமுகர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். சூர்யா சிவாவுடனான இவரது ஆடியோ லீக்கான நிலையில், ‘எங்கள் இனத்தை அழிக்க காரணமாக இருந்த காங்கிரசும், திமுகவும் தான் எங்கள் முதல் எதிரி. ஆனால், அண்ணாமலை போன்றவர்கள் தமிழ்நாட்டு அரசியலுக்கே பேராபத்து என்பதை சொல்லித்தான் வீடியோ வெளியிட்டேன். இதற்காக என்னிடம் கெஞ்சிப் பேசி, ஆடியோ வெளியிடுவது நாகரீகமற்றது’ எனக் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி அணி வீரர் அபிஷேக் போரெல் 10 பந்துகளில் 32 ரன்களை குவித்தார். முதலில் பேட் செய்த டெல்லி அணி 174/9 ரன்களை எடுத்தது. இதில், கடைசி ஓவரில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அபிஷேக் பேட்டிங் செய்ய ஹர்ஷல் படேல் பந்து வீசினார். அப்போது 4, 6, 4, 4, 6 என முதல் 5 பந்துகளில் 24 ரன்களை குவித்தார். இந்தப் போட்டியில் யார் வெல்லுவாங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.
தனியார் மருத்துவமனை நிர்வாகம் தன்னை மிரட்டியதாக இயக்குநர் விக்ரமன் மனைவி ஜெயப்பிரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் 5 வருடங்களாக சிகிச்சை பெற்றேன். ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதை ஒரு யூடியூப் பேட்டியில் கூறியிருந்தேன். மருத்துவமனையின் பெயரைக் கூட அதில் சொல்லவில்லை, ஆனால், என்னை தொடர்பு கொண்டு மிரட்டினார்கள்” என்றார்.
ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 174/9 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி ஓவரில் 4,6,4,4,6,1 என அதிரடியாக விளையாடிய அபிஷேக் 32* ரன்கள் எடுத்தார். இதையடுத்து டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 174/9 ரன்கள் எடுத்து. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு (மார்ச் 23-27) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கக் கூடும் எனவும், சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மதிய வேளைகளில் வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.
Sorry, no posts matched your criteria.