India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொல்லார்டுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், பொல்லார்டுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், சில பந்தங்கள் தனது சகோதரனை ஒருபோதும் மாற்றாது, வலுப்படுத்தவே செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன் குஜராத் அணி கேப்டனாக இருந்த பாண்டியா, நடப்பு தொடரில் மும்பை அணியை வழிநடத்த உள்ளார்.
அதிமுகவும் தேமுதிகவும் 3ஆம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி வருகிறது. மார்ச் 1ஆம் தேதி அதிமுக நிர்வாகிகள் பிரேமலதாவின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். பின்னர் மார்ச் 6ஆம் தேதி அவர்களுக்குள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் இன்று பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்திவரும் அவர்கள், விரைவில் கூட்டணியை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி பரப்பி, வெறுப்புப் பிரச்சாரம் செய்துவந்த பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்யும் போஸ்ட்டுகள் மீது புகார்கள் எழுந்ததால், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய சலீம், விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடித்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது ஆங்காங்கே தகராறுகள், கலவரங்கள் நடைபெற வாய்ப்பிருப்பதால் அதன்பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிகிறது.
ஐபிஎல் 17ஆவது சீசன் 6 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், CSK அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரனா காயம் காரணமாக ஆரம்பப் போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 21 வயதான பத்திரனாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் 4 முதல் 5 வாரங்கள் வரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த சீசனில் CSK அணியில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.19 முதல் ஜூன் 1 வரை, மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
*முதல்கட்டம் – ஏப்.19 – 102 தொகுதிகள்
*2ஆம் கட்டம் – ஏப்.26 – 89 தொகுதிகள்
*3ஆம் கட்டம் – மே 7 – 94 தொகுதிகள்
*4ஆம் கட்டம் – மே 13 – 96 தொகுதிகள்
*5ஆம் கட்டம் – மே 20 – 49 தொகுதிகள்
*6ஆம் கட்டம் – மே 25 – 57 தொகுதிகள்
*7ஆம் கட்டம் – ஜூன் 1 – 57 தொகுதிகள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையே கடைசி நாள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டியவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலை ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்கும் இறுதி வாய்ப்பாக மக்கள் கருத வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் மூலம் இந்தியாவின் நியாயத்திற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட கிடைத்த கடைசி வாய்ப்பாக இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“இயேசு”வைப் பற்றி, கனவிலும் தவறாக சித்தரிக்க மாட்டேன் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். ரோமியோ பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில், மது பழக்கம் தொடர்பாக “இயேசு” குறித்து அவர் தவறாக பேசியதாக சர்ச்சையானது. இதனால், கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், தவறாக எதுவும் சொல்லவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், தனது கருத்து தவறாக அர்த்தப்படுத்தப்பட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் சார்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரே நேரத்தில் மக்களவை, சட்டசபை தேர்தல் நடத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. ஆதலால் மக்களவைத் தேர்தல் முடிந்ததும், அங்கு சட்டசபை தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.
Sorry, no posts matched your criteria.