India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில், திருச்சியில் நாளை பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் NTK ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இதில், கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது.
பாஜகவிற்கு வாக்களித்தால், காஷ்மீரின் நிலை நாளை நமக்கும் வரலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தஞ்சையில் பேசிய அவர், ‘இந்தியா கூட்டணி அமைய நான் காரணமாக இருந்தேன் என்பதால் என் மீது பிரதமருக்கு கோபம். பாஜகவின் பாணி ஒரு சர்வாதிகாரம். மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நிதி கொடுக்காத பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்’ என்றார்.
வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை மறு உத்தரவு வரும் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில், வெங்காய விலையை தொடர்ந்து கட்டுப்படுத்த இந்த தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் எடுத்து விசாரிக்க EDக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரியும், இதை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீத்திமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள மறுத்துள்ள நீதிமன்றம், புதன்கிழமை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் நேற்று களமிறங்கிய சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி, இனி வரும் போட்டிகளில் சில போட்டிகளில் விளையாடாமல் போக வாய்ப்புள்ளதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். இந்த சீசனில் தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாட மாட்டார். இடையே சிறிய ஓய்வு எடுக்கலாம். அதனால் தான் ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தோனி சிறப்பாக விளையாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகை, தஞ்சை வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், “இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் தற்போது கைது செய்யப்படுகிறார்கள். மோடி தனக்கு கிடைத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். அவரின் ஆட்சி தொடர்ந்தால் இந்தியா இருக்காது. அதை தடுத்து நிறுத்த, மோடியை தோற்கடிக்க வேண்டும்” என்றார்.
உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ₹1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ விரைவில் தொடங்கப்படும் என தஞ்சை பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் தங்களது உயர்கல்வி திறனை மெருகேற்றும் வகையில் ₹1,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பின் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ‘ThugLife’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன், த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோரும் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு இதுகுறித்து ஏதும் அறிவிக்கவில்லை.
அதிமுக தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பம்மாத்து அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாகை, தஞ்சை வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், ” மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்க விழாவில் பங்கேற்ற இபிஎஸ், அதன் பிறகு அதைப் பற்றி பேசினாரா? பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை இதுவரை பேசியுள்ளாரா? தன் நலனுக்காக இபிஎஸ் தமிழக மக்களின் நலனை காவு கொடுத்துள்ளார்” என்றார்.
Sorry, no posts matched your criteria.