News March 24, 2024

நடிகர் விஜய் யாருக்கு ஆதரவளிக்க உள்ளார்?

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் மறைமுக ஆதரவை பெற அரசியல் கட்சிகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும், தன் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விஜய் உணர்த்துவது வழக்கம். இந்நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் விஜயின் ஆதரவு இருந்தால், கணிசமான வாக்குகளைப் பெறலாம் என அரசியல் கட்சிகள் கருதுகின்றனர்.

News March 24, 2024

தேர்தலில் மூத்த மகனுக்கு சீட் தருவேன்

image

2026இல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தன் மூத்த மகனுக்கு வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக சீமான் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், அவர் இதனை உறுதிசெய்துள்ளார். திமுக வாரிசு அரசியல் செய்கிறது என விமர்சித்து வந்த சீமான், தற்போது நாதக-வில் அவரது மனைவிக்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகக் கூறி அக்கட்சியில் இருந்து சிலர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2024

இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ராம்குமார்

image

ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீரர் ராம்குமார் ராமநாதன் முன்னேறியுள்ளார். சண்டிகரில் ஆடவருக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ராம்குமார், வியட்நாமின் ஹோங் லியுடன் மோதினார். தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய ராம்குமார் ஆட்டத்தின் முடிவில் ஹோங்கை 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.

News March 24, 2024

மார்ச் 24 வரலாற்றில் இன்று!

image

*1401 – தமாஸ்கஸை மங்கோலியப் பேரரசர் தைமூர் தீக்கிரையாக்கினார். *1603 – முதலாம் எலிசபெத் மகாராணி மறைந்த நாள். *1837 – கனடாவில் கறுப்பர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. *1947 – மவுண்ட்பேட்டன் இந்தியாவின் ஆளுநரானார். *1988 – பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் மறைந்த நாள். *1993 – சூமேக்கர் – லேவி வால்வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது. *2020 – கொரோனா வைரஸ்: இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

News March 24, 2024

மனித உணர்ச்சிகளை மறைக்க விரும்பவில்லை

image

செய்தியாளர்களுக்கு முன்பாக மனித உணர்ச்சிகளை மறைக்க தான் விரும்பவில்லை என்று பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் மனந்திறந்து கூறியுள்ளார். நோ பில்டர் நேஹா நிகழ்ச்சியில் பேசிய அவர், “கலைஞர்களான நாங்களும் மனிதர்கள்தான். எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து எழுதுவதும், பேசுவதும் வலியைத் தரும். ஆனால், அதையெல்லாம் மறைத்து, சிரித்துப் பேச வேண்டியிருக்கிறது. இது எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

News March 24, 2024

அதிமுகவை கபளீகரம் செய்த பாஜக

image

நீண்ட காலம் என்.டி.ஏ கூட்டணியில் பயணித்த அதிமுகவை கபளீகரம் செய்வதை செயல்திட்டமாக பாஜக வைத்திருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவை தனிமைப்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். அதற்காக தான் அதிமுகவை அக்கட்சி துண்டாடி, வலுவிழக்கச் செய்தது. அதன் மூலம் தேர்தலில் இரண்டாம் இடத்தில் தன்னை நிறுத்திக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது” என்றார்.

News March 24, 2024

16,000 வாகனங்களை திரும்ப பெறும் மாருதி

image

பலேனோ, வேகன் ஆர் வாகனங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறவுள்ளதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. ஜூலை 30, 2019 – நவம்பர் 1, 2019 வரையான காலத்தில் தயாரிக்கப்பட்ட 11,851 பலேனோ & 4,190 வேகன் ஆர் வாகனங்களின், எரிபொருள் பம்ப் மோட்டாரில் குறைபாடு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, வாகனங்களை திரும்பப் பெற்று, புது பாகத்தை இலவசமாக மாற்றியும் தருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

News March 24, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

*குறள் பால்: பொருட்பால் | இயல்: அமைச்சியல்
*அதிகாரம்: அமைச்சு
*குறள் எண்: 631
*குறள்:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
*பொருள்: ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே சிறந்த அமைச்சர்.

News March 24, 2024

ஹர்ஷித் ராணாவின் திமிர்த்தனமான செயல்

image

SRH அணிக்கு எதிரான போட்டியில் KNR அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா நடந்துகொண்ட விதம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதிரடி ஆட்டத்திற்கு பெயர்பெற்ற SRH அணியின் சீனியர் வீரரான மயங்க் அகர்வாலின் (33) விக்கெட்டை ராணா எடுத்தார். அகர்வாலை வெறுப்பேற்றும் வகையில், அவரது முகத்திற்கு முன்பாக கையில் முத்தமிட்டு அதை காற்றில் பறக்கவிட்டதை, அப்பட்டமான திமிர்த்தனம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

News March 24, 2024

ஜெர்மனிக்கு இந்தியா கடும் கண்டனம்

image

அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஃபிஷர் கூறிய கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் ஜெர்மனி அப்பட்டமாக தலையீடுவதாகவே கருதுகிறோம். இந்திய நீதித்துறையின் சுதந்திரத்தை ஜெர்மனி கேள்வி கேட்பதை ஏற்க முடியாது. ஜெர்மனியின் அனுமானங்கள் அவசியமற்றவை” எனக் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!