India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் பிரியாணி தலைநகரமாக ஐதராபாத் நகரம் உருவெடுத்துள்ளதாக, ஸ்விக்கி (Swiggy) நிறுவனத்தின் வருடாந்திர ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. கடந்தாண்டில் (2023) ஐதராபாத்தில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் பிரியாணிகள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. 1 கோடி பிரியாணி ஆர்டர்களுடன் பெங்களூரு 2ஆவது இடத்திலும், 50 லட்சம் பிரியாணி ஆர்டர்களுடன் சென்னை 3ஆவது இடத்திலும் இருப்பது தெரிய வந்துள்ளது.
கொங்கு மண்டலத்தை ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டையாக்க வேண்டுமென ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதனால் தான் கோவை தொகுதியில் திமுகவே நேரடியாகக் களமிறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்ணில் எக்காரணம் கொண்டும் பாஜக வெற்றிபெறக் கூடாது என்பதற்காக தேர்தல் பணியை முடிக்கிவிட்டுள்ள திமுக தலைமை, அந்த மண்டலத்தின் தேர்தல் பொறுப்பாளராக உதயநிதியை நியமிக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்திக்க இருப்பதாக பாமக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் செய்தியாளர்கள் மத்தியில் இதனை அறிவித்தார். இந்த முடிவினை அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் இணைந்து எடுத்துள்ளதாகவும் வடிவேல் ராவணன் கூறியிருக்கிறார். இன்று மாலை நடைபெற்ற பாமக உயர்நிலை கூட்டத்திற்கு பின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் செலவுத் தொகை ரூ.95 லட்சமாக உயர்ந்துள்ளது. 2014 – ரூ. 40 லட்சம் , 2019 – ரூ. 70 லட்சம், 2024 – ரூ. 95 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் செலவுத் தொகையும் 2014 – ரூ. 16 லட்சம் , 2019 – ரூ. 28 லட்சம், 2024 – ரூ. 40 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் வேட்பாளர் செலவுத் தொகை 75 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தின் கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 40 கோடி செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன், விஜய், உதயநிதி ஸ்டாலின், கார்த்தி உள்ளிட்டோர் அளித்த நிதியைச் சேர்த்து இதுவரை ரூ.12 கோடி வசூலாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது, வங்கிக் கடனுக்கு ஏற்பாடுகள் நடக்கும் நிலையில், கலை நிகழ்ச்சி நடத்தி, நிதி திரட்டும் திட்டத்தில் நடிகர் சங்க நிர்வாகம் இருப்பதாக அறிய முடிகிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனர், 4 மாத குழந்தையான தனது பேரனுக்கு ₹240 கோடி மதிப்பிலான பங்குகளை பரிசளித்துள்ளார். நாராயண மூர்த்தியின் மகன் ரோஹனுக்கு கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, பேரனுக்கு பரிசு வழங்க நினைத்த அவர், தனது நிறுவனத்தின் பங்குகளில் இருந்து 0.04% பங்குகளை (₹240 கோடி) வழங்கியுள்ளார். இதன்மூலம், உலகின் இளம் வயது கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை நாராயண மூர்த்தியின் பேரன் பெற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை வரும் 24ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தொடங்கவுள்ளார். திருச்சியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகம் செய்து முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்கும் இபிஎஸ், 31ஆம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், ராமநாதபுரம், குமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலக் கட்சி அங்கீகாரத்துக்காக இரு தொகுதிகள் கேட்டிருந்தது மதிமுக. ஆனால், திமுக ஒரு தொகுதி தான் தரமுடியுமெனக் கூறியபோது, துரைக்காக அதற்கும் மதிமுக சம்மதித்தது. வாரிசு அரசியலை எதிர்த்த கலகக்காரரான வைகோ, இன்று தனது வாரிசுக்கு சீட்டு வாங்கியது காலத்தின் கோலம் என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
மக்கள் பணியை நேரடியாக செய்ய வேண்டும் என்ற நோக்கில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் அரசியல் அனுபவம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தனது முடிவுக்கு பாஜக தலைமை தடை விதிக்கவில்லை என விளக்கமளித்தார். மேலும், வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு தேர்தலில் போட்டியிட உள்ளதால் தனது அன்பை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
CUET நுழைவுத் தேர்வு தேதிகளில் மாற்றமில்லை என யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. மே 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மட்டும் தேர்வும், தேர்தலும் ஒரே நாளில் வருகின்றன. எத்தனை பேர் அந்த நாளில் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர் என்பதை அறிந்து, அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். அதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மே 15 முதல் 31 வரை CUET நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தும் எனத் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.