India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் இன்று தொடங்கினார். வண்ணாங்கோவில் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி இபிஎஸ் உரையாற்றவுள்ளார். இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ, புதிய தமிழகம், தேமுதிக ஆகிய கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ அணி திணறி வருகிறது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. குயின்டன் டி காக் 4, தேவ்தத் படிக்கல் 0, ஆயுஷ் பதோனி 1 என முதல் 3 ஓவர்களிலேயே 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளனர். லக்னோ பதிலடி கொடுக்குமா?
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை குறிவைத்து இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கலந்துகொண்டால் பரிசுகள் கிடைக்கும் என பொதுமக்களின் மொபைலுக்கு லிங்க்குகள் அனுப்பப்படுகின்றன. இவற்றை கிளிக் செய்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற செய்திகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் அமைச்சர் இ.ராமகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். 1989இல் திமுக ஆட்சியில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சராக இ.ராமகிருஷ்ணன் பதவி வகித்தார். பின்னர் அதிமுகவுக்கு ஜெயலலிதா தலைமையேற்றதும் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். 1991ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மருத்துவராக பயிற்சி பெற்றவர்.
கஜகஸ்தான் நாட்டில் கலாச்சி கிராம மக்கள் வித்தியாசமான நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமத்தில் உள்ள அனைவருமே கும்பகர்ணனைப் போல தூங்குகின்றனர். இவர்கள் ஒருமுறை தூங்கினால் எழுந்திரிக்க ஒரு வாரம் ஆகிறது. இவர்கள் தூங்கினால் எழுப்புவதும் கடினம். அந்த கிராமத்தின் அருகே யுரேனிய சுரங்கங்கள் இருப்பதால், தண்ணீரில் கார்பன் மோனாக்சைடு கலக்கிறது. இந்த நீரை குடிப்பதே பிரச்னைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ அணிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் அணி, தொடக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்தாலும் பிறகு நிதானமாக விளையாடி வந்தது. சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 193 ரன்கள் எடுத்தது.
நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் முடிந்தது. ‘பிகில்’ படத்தின் மூலம் அறிமுகமான இந்திரஜாவுக்கு அவரின் உறவினரும், இயக்குனருமான கார்த்திக் என்பவருடன் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று மதுரையில் இருவருக்கும் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஜூன் மாதத்துக்கான திருப்பதி ஏழுமலையான் கோயிலின் ரூ.300 தரிசன டிக்கெட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (மார்ச் 25) வெளியிடப்பட உள்ளன. பக்தர்கள் கூட்டத்தினால் சாமி தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க 3 மாதத்துக்கு முன்பே, டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, ஜூன் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள், தேவஸ்தான இணையதளத்தில் நாளை காலை 10 மணிக்கு துவங்குகிறது.
மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆளும் பாஜக கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது. அக்கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிக்கு பாராமதி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே தொகுதியில் போட்டியிட பாஜக கூட்டணியைச் சேர்ந்த சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சியும் முயல்கிறது. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று அஜித் பவார் எச்சரித்துள்ளார்.
ஐபிஎல்லில் இன்று நடைபெற்று வரும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக ஆடிவரும் ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்துள்ளார். தற்போது வரை ராஜஸ்தான் அணி 14 ஓவர்கள் முடிவில் 128/2 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வால் 24, பட்லர் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். சஞ்சு 58, ரியான் பராக் 32 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ராஜஸ்தான் எவ்வளவு ரன்கள் அடிக்கும் என நினைக்கிறீர்கள்?
Sorry, no posts matched your criteria.