News March 20, 2024

செம்பருத்திப்பூ சர்பத் செய்வது எப்படி?

image

இதய படபடப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய ஆற்றல் கொண்டது செம்பருத்திப்பூ. எளிதாக கிடைக்கும் செம்பருத்திப்பூவை வைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரும் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை, இஞ்சி, புதினா இலைகளை போட்டு, கரண்டியால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் செம்பருத்திப்பூ ஜூஸை ஊற்றி, சப்ஜா விதை சேர்த்தால் சுவையான சர்பத் ரெடி.

News March 20, 2024

இலங்கை அணியின் மாஸ்டர் பிளான்..!

image

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஹசரங்காவுக்கு ஐசிசி 2 போட்டிகளில் விளையாட தடை விதித்தது. அடுத்து அவர் எப்போது விளையாடினாலும், அதில் 2 போட்டிகளில் தடை விதிக்கப்படும். அவர் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வாகியுள்ள நிலையில், அந்த நேரத்தில் அவர் அணியில் இல்லாமல் போனால் அணிக்கு பின்னடைவாக இருக்கும். எனவே, அதற்கு முன்பாக ஒரு டெஸ்ட் தொடரில் அவரை விளையாட வைக்க அணி பிளான் செய்துள்ளது.

News March 20, 2024

கர்ப்பிணி பெண்களுக்கு ஓர் நற்செய்தி!

image

தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணியருக்கு பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்குப் பதிலாக மூன்று தவணைகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கர்ப்ப காலத்தின் 4ஆவது மாதத்தில் ரூ.6,000, குழந்தை பிறந்த 4ஆவது மாதத்தில் ரூ.6,000, 9ஆவது மாதத்தில் ரூ.2,000 என ரூ.14,000 ரொக்கமாக வழங்கப்படும். மேலும் 3, 6ஆவது மாதங்களில் இரண்டு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுமென அரசு அறிவித்துள்ளது.

News March 20, 2024

மீண்டும் பயணத்தை தொடங்கிய அஜித்

image

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்நிலையில், பைக்கில் உலகம் சுற்றிவரும் தனது பயணத்தை அவர் மீண்டும் தொடங்கியுள்ளார். அஜித் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவரது மேலாளர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

News March 20, 2024

வேட்புமனு தாக்கல் செய்ய விதிகள் என்னென்ன?

image

தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் விதிகள்: காலை 11 முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை அளிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.

News March 20, 2024

RCB ஜெர்சியை விமர்சிக்கும் ரசிகர்கள்

image

நடப்பு ஐ.பி.எல் தொடருக்கான புதிய ஜெர்சியை பெங்களூரு அணி நேற்று அறிமுகம் செய்துள்ளது. நீலம் & சிவப்பு நிறத்திலான புதிய ஜெர்சி குறித்து RCB அணியின் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியிட்ட ஜெர்சி பிரமாதமாக இருந்ததாகவும், அதை ஏன் மாற்றினார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜெர்சி குறித்து உங்கள் கருத்து என்ன? அதை இங்கே கமெண்ட் செய்யுங்கள்.

News March 20, 2024

தமிழகத்தில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு

image

முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்.19இல் தமிழகம், புதுச்சேரியில் காலை 7 முதல் மாலை 6 மணி வரையும், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒருசில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணியுடன் நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

News March 20, 2024

தினம் ஒரு தொகுதி: இன்று கடலூர்

image

மீன்பிடித் தொழிலையும், முந்திரி, பலா விவசாயத்தையும் முக்கிய தொழிலாக கொண்டது கடலூர் தொகுதி. திட்டக்குடி (தனி), விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 திமுக வசமுள்ளன. இதுவரை இங்கு நடந்த 18 தேர்தல்களில் காங். 7, திமுக 5 & அதிமுக 2 முறை வென்றுள்ளன. 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ரமேஷ் 1,43,983 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

News March 20, 2024

இதுவரை ரூ.5.37 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

image

தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ரூ.5.37 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.4.37 கோடி ரொக்கம், ரூ.0.36 கோடி மதிப்பில் மதுபானங்கள், ரூ.0.25 கோடி மதிப்பில் போதைப்பொருட்கள், ரூ.0.20 கோடி மதிப்பில் இலவச பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News March 20, 2024

உலகின் மிக மகிழ்ச்சியான நாடு இதுதான்

image

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வருடாந்திர பட்டியலை நேற்று ஐநா வெளியிட்டது. இதில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. ஆஸ்திரேலியா 10, இங்கிலாந்து 20, அமெரிக்கா 23, ஜெர்மனி 24, சீனா 64, ரஷ்யா 70 ஆகிய இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவை (126) முந்தி பாகிஸ்தான் 108ஆவது இடத்தில் உள்ளது.

error: Content is protected !!