India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஷாலுடன் இணைந்து நடித்திருக்கும் ‘ரத்னம்’ படம் தனக்குத் திருப்புமுனையாக அமையும் என பிரியா பவானி சங்கர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். ஊடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த அவருக்கு வருமானத்துக்குக் குறைவில்லை என்றாலும், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வெற்றியாக ஒரு படம் அமையவில்லை. இந்த வருத்தத்தை ரத்னம், இந்தியன் 2 ஆகிய இரு படங்கள் போக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது முதலே ரசிகர்கள் அவர் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, ‘மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் அவருடைய தவறு எதுவும் இல்லை. மும்பை அணி நிர்வாகம் தான் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது’ என பாண்டியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
மாநில உரிமைகள் குறித்த 16 வாக்குறுதிகளில் ஒன்றை ஏற்க பாஜக தயாரா? என காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக நீதி, பொருளாதாரத்திற்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கூறிய அவர், திமுக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஒத்துப்போவது இயற்கையானது எனவும் தெரிவித்தார். பாஜக, பாமக போன்று கொள்கைகளில் முரண்பட்ட கட்சிகளுடன் காங். கூட்டணி அமைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கார் விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகை அருந்ததி நாயர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 வாரமாக மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது சிகிச்சைக்கு திரையுலகினர் நிதி உதவி அளிக்க வேண்டும் என குடும்பத்தினர் உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
SRH அணிக்கு எதிரான லீக் போட்டியில் CSK அணி தோற்றதற்கு ருதுராஜின் கேப்டன்ஷிப் தான் காரணமென முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருந்தார். அதற்கு முகமது கைஃப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “CSK அணி வென்றால், தோனி தான் காரணம் என்று பாராட்டுவதும், தோற்றால் அதற்கு ருதுராஜ் கெய்க்வாட் மீது பழி சுமத்துவதும் தவறு. இந்தப் போக்கை அனைவரும் கைவிட வேண்டும்” எனக் கூறினார்.
கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக சரித்திரத்தை மாற்றிப் பேசுவதாக மநீம தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ‘சரித்திரத்தில் நடந்த உண்மையை நாங்கள் பேசுகிறோம். பிசியாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் கமல், ஷூட்டிங்கிற்கு இடையே வந்து பேசினால் இப்படித்தான் இருக்கும். சரித்திரத்தை ஒழுங்காக படித்துவிட்டு வந்து அவரை பேசச் சொல்லுங்கள்’ எனக் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், திமுக ஆட்சிதான் அவர்களுக்கு பொற்கால ஆட்சி எனக் கூறினார். மேலும், மத்தியில் INDIA கூட்டணி ஆட்சி அமைந்ததும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் உறுதியாக நிறைவேற்றித் தரப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
ரோகித் ஷர்மா போன்ற ஒரு ஹிட்மேன், கேப்டன் பதவி இல்லாமல் இருக்கும்போது நிச்சயம் அதிரடியாக விளையாடத்தான் முயற்சி செய்வார் என்று முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கருத்து தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்த சீசனில் ஒரேயொரு போட்டியில், அவரது ஆட்டம் சூடு பிடித்தால் போதும், அதன் பிறகு நடப்பவை வேறு மாதிரி இருக்கும். விரைவில் ரோஹித் சர்மாவின் அதிரடியை காண காத்திருங்கள்” எனக் கூறினார்.
உலகிலேயே மிக ஆரோக்கியமான மரபு உணவு என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெருமையைக் கொண்டது நுங்கு. தமிழர்கள் காலங்காலமாக உண்டுவரும் நுங்கை
இளநீரோடு பானமாக பருகுவதால், வெயில் காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம், மயக்கம், முடக்குவாதம், குடல் சார்ந்த பல நோய் பாதிப்புகள் குறையுமென ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் உடலுக்கு தேவையான B12, B6 போன்ற ஊட்டச்சத்துகளும் இதில் இருக்கிறதாம்.
மறைந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தியின் உடல் நாளை மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணி வரை புகழேந்தியின் உடல் வைக்கப்படுகிறது. தொடர்ந்து, நாளை மாலை 4 மணிக்கு அவரது சொந்த ஊரான அத்தியூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.