India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதனையடுத்து, தேர்தலில் போட்டியிடுவதால், அவர் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியை சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளார். திருச்சி மாநகராட்சி 47வது வார்டு கவுன்சிலரான செந்தில்நாதன், மேயர் அன்பழகனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
நடிகர் ராகுல் மோடியை காதலிப்பதை பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் உறுதி செய்துள்ளார். து ஜூதி மைன் மக்கார் படத்தில் நடித்த போது, இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஷ்ரத்தா கபூர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஆர் டாலரை அணிந்துள்ளார். ராகுல் பெயரில் உள்ள ஆர் எனும் எழுத்தையே டாலராக அணிந்திருப்பதாகவும், இதன் மூலம் அவர் தற்போது காதலை உறுதி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பாஜகவின் 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 37 எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 111 தொகுதிகளுக்கு பாஜக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. அதில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார் செளபே, விகே சிங், வருண் காந்தி உள்ளிட்ட 37 எம்பிக்களின் பெயர் இல்லை. அதேநேரத்தில் நடிகர்கள் கங்கனா, அருண் கோவில் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சேர்ந்தோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் அசோக் 96,050, திமுகவின் செங்குட்டுவன் 95,256 வாக்குகளை பெற்றனர். இதில் 605 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தபால் வாக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர் முன்பு எண்ண உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் அணி 2013 முதல் அனைத்து முதல் போட்டிகளிலும் தோல்வியடைந்து வருகிறது. GTக்கு எதிரான நேற்றைய முதல் போட்டியில் MI அணி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த GT அணி 168 ரன்கள் குவிக்க, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய MI அணி 162 ரன்களில் ஆட்டமிழந்தது. 2013 முதல் இதுவரை 5 முறை கோப்பை வென்றுள்ள மும்பை அணி, ஒரு முறைகூட முதல் போட்டியில் வென்றதில்லை.
விருதுநகர் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார், தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், சூரியவம்சம் படத்தில் வரும் சின்ராசு போல் நாட்டாமை சரத்குமார், தன்னை தட்டிக் கொடுத்து தேர்தலில் நிற்க வைத்ததாக கூறினார். முன்னதாக, சூர்யவம்சம் படத்தில் மனைவியை படிக்க வைத்து கலெக்டராக்கியதுபோல, ராதிகாவை எம்.பி.யாக்குவேன் என சரத்குமார் சூளுரைத்திருந்தார்.
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,205க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.80.80க்கும், கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.80,800க்கும் விற்பனையாகிறது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்கி ஏப்.8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க மாணவர்கள் தேர்வறைக்கு அரைமணிநேரம் முன்பே செல்லுங்கள். வெற்றி பெற வாழ்த்துகள்.
தேர்தல் பத்திர நன்கொடை குறித்து திமுக மவுனமாக இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தேசிய அளவில் பாஜகவும், தமிழகத்தில் திமுகவும் தேர்தல் பத்திரம் மூலம் அதிக நன்கொடை பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான லாட்டரி மார்டினிடம் இருந்து திமுக அதிக நன்கொடை பெற்றதாக கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து திமுக விளக்கம் அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாக பயன்படுத்தி, நம்பிக்கையோடு தேர்வு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.