India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 7 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், நெல்லை, மயிலாடுதுறைக்கு இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. உட்கட்சி பூசலால், வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறி நீடிக்கிறது. இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை நாங்குநேரியில் பிரசாரம் செய்யும் முன்பாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகுமென கூறப்படுகிறது.
வலிப்பு, நரம்பு வலி, பதற்றம் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படும் ப்ரீகாபலின் மாத்திரையால்(Pregabalin) மரணிக்கும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த மாத்திரையை அதிகளவில் எடுத்துக் கொண்ட பலர் மரணத்தை சந்தித்துள்ளதாக எச்சரித்துள்ள இங்கிலாந்து மருத்துவர்கள், இதை எடுத்துக்கொண்ட பிறகு மது அருந்தக் கூடாது என எச்சரித்துள்ளனர். அதே வேளையில் சரியான அளவு எடுத்துக் கொண்டால் பிரச்னை இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையானது வசந்த காலத்தை வரவேற்பதற்காக கொண்டாடப்படுகிறது. சௌகார்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட வட மாநிலத்தவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடி பூசி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். காலை 7 மணிக்கே தொடங்கிய இப்பண்டிகையால், ஒட்டுமொத்த இந்தியாவும் வண்ணமயமாக மாறியுள்ளது. நீங்கள் ஹோலி கொண்டாடினீர்களா?
திமுக, அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வேட்புமனு தாக்கல் செய்ய காத்திருக்க வேண்டி இருந்ததாக வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “காவல்துறையினர் வழிமுறைகளை பின்பற்றி வேட்பாளர்களை அனுப்பாமல், அதிமுக, திமுகவினரை ஒரே நேரத்தில் உள்ளே அனுமதித்தனர். இவர்கள் இருவருக்குள் நடந்த அமளியால் எங்களால் குறித்த நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை” என்றார்.
தமிழகத்தில் தனது தலைமையில் பாஜக வளர்ந்திருக்கிறது என்றால் அண்ணாமலை சொந்த தொகுதியில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுவது ஏன் என கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேசிய அவர், “கரூரில் போட்டியிட்டால், டெபாசிட் கிடைக்காதென அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் என்னை எதிர்த்து நிற்க பயந்து கோயம்புத்தூருக்கு ஓடி விட்டார்” என்றார்.
இந்தியன் 2, இந்தியன் 3 படங்கள் குறித்து புதுத் தகவலை கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “இந்தியன் 2, இந்தியன் 3 படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. தற்போது, இந்தியன் 2 பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடக்கிறது. அது முடிந்த பிறகு, இந்தியன் 3 பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்கும். மக்களவைத் தேர்தல் முடிந்ததும், மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் பங்கேற்பேன்” என்றார்.
தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., உயர்த்தியதை அன்புமணி கண்டித்துள்ளார். பொதுப்பிரிவு கட்டணம் – ₹2,500, MBC – ₹2,000, SC, ST – ₹800ஆக உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்திய அவர், இதன் மூலம் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படும் ஒன்றரை லட்சம் பேரிடம் இருந்து ₹30 கோடி வசூலாகும். இந்தத் தேர்வு நடத்த அவ்வளவு செலவாகாது எனக் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு-சென்னை விரைவு சாலை, விக்கிரவாண்டி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, திமுக மக்களவைத் தேர்தல் அறிக்கையில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
▶மும்பை இந்தியன்ஸ் – ₹725 கோடி
▶சென்னை சூப்பர் கிங்ஸ் – ₹675 கோடி
▶கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ₹659 கோடி
▶பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – ₹584 கோடி
▶குஜராத் டைட்டன்ஸ் – ₹542 கோடி
▶டெல்லி கேப்பிட்டல்ஸ் – ₹533 கோடி
▶ராஜஸ்தான் ராயல்ஸ் – ₹525 கோடி
▶சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ₹400 கோடி
▶லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ₹392 கோடி
▶பஞ்சாப் கிங்ஸ் – ₹375 கோடி
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவப் படை வரவுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ” தமிழகத்துக்கு கூடுதலாக வரும் 165 கம்பெனி துணை ராணுவப் படைகளோடு சேர்த்து, 190 கம்பெனி படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளன. இதுவரை, சி விஜில் செயலி மூலம் 11,305 புகார்கள் வந்துள்ளன” எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.