India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகிலேயே மிக ஆரோக்கியமான மரபு உணவு என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பெருமையைக் கொண்டது நுங்கு. தமிழர்கள் காலங்காலமாக உண்டுவரும் நுங்கை
இளநீரோடு பானமாக பருகுவதால், வெயில் காலத்தில் ஏற்படும் ரத்த அழுத்தம், மயக்கம், முடக்குவாதம், குடல் சார்ந்த பல நோய் பாதிப்புகள் குறையுமென ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் உடலுக்கு தேவையான B12, B6 போன்ற ஊட்டச்சத்துகளும் இதில் இருக்கிறதாம்.
மறைந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தியின் உடல் நாளை மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று மாலை 4 மணி வரை புகழேந்தியின் உடல் வைக்கப்படுகிறது. தொடர்ந்து, நாளை மாலை 4 மணிக்கு அவரது சொந்த ஊரான அத்தியூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பாஜக ஆட்சி இனியும் தொடர்ந்தால் இடஒதுக்கீடு நடைமுறைகள் பறிபோகும் என திமுக தெரிவித்துள்ளது. அரசுத் துறைகளில் தற்போது பெண்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ள திமுக, மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் பெண்கள் முன்னேற்றம் கேள்விக்குறியாகி விடும் எனக் கூறியுள்ளது. மேலும், அதுபோன்ற ஒரு நிலை ஏற்படாமல் இருக்க பெண்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும் எனவும் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையையொட்டிய புஜாரி கங்கர் வனப்பகுதியில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அந்தப் பகுதியில் ஆயுதங்களை மீட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் மத்திய ரிசர்வ் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒருவாரத்தில் 6க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் போலீஸ் என்கவுண்ட்டரில் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வெப்ப அலை காலத்தில், குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மதுபானங்கள், காபி, தேநீர் , கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். நண்பகலில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக புரதம், உப்பு, காரமான, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. வெப்பத்தை உருவாக்கக்கூடிய ஒளிரும் ஒளி விளக்குகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
மகாலட்சுமி திட்டம் என்ற பெயரில் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்நிலையில் இத்திட்டம் சாத்தியமில்லாதது என்ற கருத்து எழுந்துள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1,000, கர்நாடகாவில் கிரகலட்சுமி என்ற திட்டத்தில் ரூ.2,000 வழங்குவதை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், இத்திட்டம் சாத்தியமே என்கின்றனர்.
4 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12ஆம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 4-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.10, 12-இல் நடைபெற இருந்த முழு ஆண்டுத் தேர்வுகள், ரம்ஜான் பண்டிகை காரணமாக ஏப்.22, 23க்கு ஒத்திவைக்கப்பட்டன. இதனால், தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் வகையில் ஏப்ரல் 12 வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாததால் அதிமுகவினர் நொந்துபோய் உள்ளனர் என திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் கிண்டலாக பேசியுள்ளார். தேசிய கூட்டணியில் இல்லாத அதிமுகவினர் ‘INDIA’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து பேசுவது பரிதாபமாக உள்ளது. ஏற்கெனவே நொந்துபோய் இருக்கும் அதிமுகவினர் குறித்து பேச நாங்கள் விரும்பவில்லை. INDIA கூட்டணியைப் பொறுத்தவரை பிரதமர் வேட்பாளரை சரியான நேரத்தில் அறிவிப்பார்கள் என்றார்.
நாடு முழுவதும் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை சிபிஐ கைது செய்துள்ளது. டெல்லி, ஹரியானா மாநிலங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த 3 பச்சிளம் குழந்தைகளை அவர்கள் மீட்டனர். ரூ.5.5 லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குழந்தைகளை கடத்தி, விற்று வந்த 7 பேர் கும்பலையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நாடே கூறி வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வரும் அவர், எங்கள் கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் மோடி என கூற முடியும். I.N.D.I.A கூட்டணியால் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், திமுக, காங். கூட்டணி ஜனநாயகத்தை பற்றி பேச முடியாது என்றும், நாட்டை சூறையாடுவதுதான் அவர்களின் எண்ணம் எனவும் அவர் விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.