News March 23, 2024

தோனி இருக்கப் பயமேன்

image

அணியில் தோனி இருப்பதால் கேப்டன் பொறுப்பில் கூடுதலாக எந்த அழுத்தத்தையும் உணரவில்லையென சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டி வெற்றிக்கு பின்னர் பேசிய அவர், ‘கேப்டன் பொறுப்பை நான் ரசித்து மகிழ்ந்தேன். நிலைமையை எவ்வாறு கையாள வேண்டுமென்பதில் ஏற்கெனவே அனுபவம் உள்ளது. அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆடினர்’ என்றார்.

News March 23, 2024

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவித்தால் நடவடிக்கை

image

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் செயலிகளுக்கு விளம்பரம் செய்யக்கூடாதென சமூகவலைதள பிரபலங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கியிருக்கும் நிலையில், சமூகவலைதள நிறுவனங்களும் தங்களது பயனர்களுக்கு இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

News March 23, 2024

பிரதான வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் எப்போது?

image

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவாக நல்லநாள் பார்த்து வேட்பு மனுதாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வரும் மார்ச் 25ஆம் தேதி ஒரே நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர். அதே போல, திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பெரும்பாலான வேட்பாளர்களும், மார்ச் 25ஆம் தேதி அந்தந்த தொகுதிகளில் தங்களது வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

News March 23, 2024

வரலாற்றில் இன்று!

image

➤1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங், சிவராம் ராஜகுரு, சுக்தேவ் தபார் ஆகியோர் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டனர். ➤ 1942 – இரண்டாம் உலகப் போர் : இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர். ➤1956 – பாகிஸ்தான் உலகின் முதலாவது இஸ்லாமியக் குடியரசானது. ➤1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

News March 23, 2024

இந்தியாவிடம் கடன் கேட்கும் மாலத்தீவு அதிபர்

image

மாலத்தீவில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாக அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடரும் முய்சு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இந்தியா மாலத்தீவின் நெருங்கிய கூட்டாளியாக தொடரும். மாலத்தீவுக்கு இந்தியா கடனுதவி வழங்க வேண்டும்’ என்றார். கடந்தாண்டு மாலத்தீவுக்கு 400 மில்லியன் டாலர்களை இந்தியா கடனாக அளித்திருந்தது.

News March 23, 2024

ஆர்சிபி தோல்விக்கு காரணம் இதுதான்!

image

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதற்கு 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்ததே காரணமென ஆர்சிபி அணியின் கேப்டன் டூபிளெசிஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற போட்டிக்கு பின்னர் பேசிய அவர், நாங்கள் பேட்டிங் செய்த போது, சிஎஸ்கே அணியின் ஸ்பின்னர்கள் நல்ல நெருக்கடி கொடுத்தனர். சேஸிங்கில் சிஎஸ்கே எப்போதும் முன்னிலையில் இருக்கும். நாங்கள் நெருக்கடி தர முயற்சித்தோம். ஆனால் அது பலிக்கவில்லை’ என்றார்.

News March 23, 2024

எதிர்க்கட்சிகளை முற்றிலும் அழிக்க நினைக்கும் பாஜக!

image

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். கெஜ்ரிவால் கைது குறித்து பேசிய அவர், ‘ஹேமந்த் சோரன், கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது. இதற்காக வருமான வரித்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது’ என்றார்.

News March 23, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾இயல் : அரசியல்
◾அதிகாரம்: ஆள்வினையுடைமை
◾குறள்: 614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
◾விளக்கம்: முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.

News March 23, 2024

ரஷ்யாவில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலி

image

ரஷ்யாவில் முகமூடி அணிந்த நபர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்தனர். தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் புகுந்த 5 நபர்கள், கூட்டத்தினரை நோக்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது சமீப ஆண்டுகளில் ரஷ்யாவில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாகும்.

News March 23, 2024

தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்த சச்சின்!

image

விக்கெட் கீப்பராக இருந்த தோனியை, இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க தான் பரிந்துரைத்த நினைவுகளை சச்சின் பகிர்ந்துள்ளார். ஐ.பி.எல் சீசன் 17 தொடர்பான டிவி விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், ‘2007ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக இருந்த சரத் பவார், என்னை இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டார். அப்போது என் உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், தோனியின் பெயரை பரிந்துரை செய்தேன்’ என்றார்.

error: Content is protected !!