India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தோனி மீதான ரசிகர்களின் அன்பு தன்னை வியக்கச் செய்வதாக சிஎஸ்கே வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ” எப்போதெல்லாம் தோனி மைதானத்திற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் ரசிகர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்று ஆர்ப்பரிக்கிறார்கள். இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. பல நேரங்களில் இதை நினைத்து வியப்படைகிறேன். தோனி மீது மக்கள் வைத்துள்ள அன்பு தனித்துவமானது” என்று தெரிவித்தார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே அமைச்சர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது புதிய உத்தரவில், டெல்லி மக்களின் நல்வாழ்விற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அமைச்சர்கள் ஈடுபடுமாறும், மொஹல்லா மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதை உறுதிபடுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. போட்டியை காண வரும் ரசிகர்கள், தங்கள் ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம். அதேபோல், மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல், சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வேளச்சேரி வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதால், அவருக்கு பதிலாக சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கமல் ஈடுபட்டிருப்பதால், தேர்தல் முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு தாமதமானதால் கால்ஷீட் பிரச்னை காரணமாக முதலில் துல்கர் சல்மான் படத்திலிருந்து விலக, அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகினார்.
நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டுதான், திமுக அரசு தகுதியான குடும்ப பெண்களுக்கு மாதம் ₹1000 மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக அண்ணாமலை விமர்சித்தார். அதுவும், 100 பெண்களில் 30 பேருக்கு மட்டும் தான் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறது. ஆனால், பாஜக வெற்றி பெற்றால், அனைத்து பெண்களுக்கும் இந்த உரிமைத் தொகை ₹1000இல் இருந்து ₹1500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ஆனால், தற்போது வரை மயிலாடுதுறை வேட்பாளரை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறது. தமிழகத்தில் நாளையுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இந்நிலையில், காங்., கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவுத் தலைவராக இருக்கும் பிரவீன் சக்ரவர்த்தி அங்கு வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகின் 500 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல்முறையாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இணைந்துள்ளார். அவர் மீதான நிதி மோசடி வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியதால், பங்குச்சந்தையில் டிரம்ப் நிறுவனங்களின் மதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் நிகர மதிப்பு ₹33,340 கோடிக்கும் அதிகமானது. இதனால், ₹54,175 கோடி சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் டிரம்ப் இணைந்தார்.
அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு கேப்பை, பெங்களூரு வீரர் விராட் கோலி தட்டிச் சென்றுள்ளார். பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 11 பவுண்டரி, 2 சிக்சர்கள் என மொத்தமாக 77 ரன்கள் குவித்தார். அணியின் வெற்றிக்கு காரணமான அவருக்கு, ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. நடந்து முடிந்த 2 போட்டிகளில் மொத்தமாக 98 ரன்கள் எடுத்த அவர், நடப்பு ஐபிஎல் தொடரின் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
கோவை மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில் வரும் தேர்தலில் வெற்றிபெற வேண்டி, பாப்பநாயக்கன்பாளையம் பண்ணாரி அம்மன் குண்டத் திருவிழாவில், தீ மிதித்து வழிபாடு செய்தார். பின், கோயிலுக்கு வந்த பக்தர்களிடமும் அவர் வாக்கு சேகரித்தார்.
கெஜ்ரிவால் கைதை கண்டித்து பிரதமர் வீட்டை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் ஜெக்ரிவாலை 21ஆம் தேதி ED கைது செய்தது. இந்த கைதை கண்டித்து பலகட்ட போராட்டங்களை ஆம் ஆத்மி முன்னெடுத்த நிலையில், இன்று பிரதமர் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர். இதனால் பிரதமரின் இல்லம் முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.