News March 23, 2024

மீண்டும் ஆடுகளத்திற்கு திரும்பும் ரிஷப் பண்ட்

image

பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்று மதியம் மொஹாலியில் நடைபெற உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இப்போட்டியில் களமிறங்க உள்ளார். 2022ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கார் விபத்துக்கு பிறகு, தொடர் பயிற்சியின் மூலம் தற்போது முழு உடற்தகுதி பெற்றுள்ளார். சுமார் 454 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆடுகளத்தில் களமிறங்க உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News March 23, 2024

சேலையூர் SSI-ஐ கைது செய்த வங்கதேச ராணுவம்

image

வங்கதேச எல்லையைக் கடக்க முயன்ற தாம்பரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் (SSI) செல்வராஜை, அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. மடிப்பாக்கத்தில் தங்கி பணியாற்றி வந்த இவர், விடுப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜானியாபாத் என்ற இடத்தில் சட்ட விரோதமாக எல்லையை கடக்க முயன்ற புகாரில் வங்கதேச ராணுவத்தால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தலைமை அலுலவகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

News March 23, 2024

தேனியில் டி.டி.வி தினகரன் போட்டி

image

நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு தேனி, திருச்சி என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தேனி தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி, தானே களமிறங்க முடிவு செய்திருக்கிறார். தனது விருப்பத்தின்படியே டிடிவி தேனியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.

News March 23, 2024

முன்னாள் முதல்வர் மகளுக்கு மேலும் 3 நாள் காவல்

image

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை மேலும் 3 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மதுபான முறைகேடு வழக்கில் கடந்த 15ஆம் தேதி கைது செய்த அவரை 7 நாள் காவலில் E.D. எடுத்திருந்தது. காவல் முடிந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, E.D. மீண்டும் 5 நாள் விசாரணைக்கு அனுமதிகேட்டது. ஆனால் 3 நாள் மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.

News March 23, 2024

டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் ஆதரவு

image

அரசியலில் மத நம்பிக்கைகளை கலந்தது போல இசையிலும் அரசியலை கலக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், கிருஷ்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் முதல்வர், அவரை காழ்ப்புடன் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

News March 23, 2024

புதினுக்கு ரூ.16.71 லட்சம் கோடி சொத்துக்கள்

image

ரஷ்ய அதிபர் புதினுக்கு ரூ.16,71,877 கோடி சொத்துக்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் சோவியத் யூனியனின் கேஜிபி உளவுத்துறை அதிகாரியான அவர், 5 முறை அதிபராகியுள்ளார். அவருக்கு ரூ.16,71,877 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், அதில் 19 பங்களாக்கள், 700 கார்கள், 58 விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சொகுசு கப்பலும் அடங்குமென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

News March 23, 2024

ஓபிஎஸ் நிலைப்பாட்டால் குழப்பத்தில் ஆதரவாளர்கள்

image

பாஜக ஆதரவுடன் ஒரேயொரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்ததைக் கண்டு அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். 3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ், பாஜகவிடம் 10 தொகுதிகளை பெறுவார், அதில் போட்டியிடலாம் என்று ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு தொகுதியில் போட்டியிட ஒப்புக் கொண்டதைக் கண்டு, இது என்ன நிலைப்பாடு என தெரியாமல் அவர்கள் குழம்பியுள்ளனர்.

News March 23, 2024

மற்றொரு வேட்பாளர் விலகல்

image

பாஜகவைச் சேர்ந்த வதோதரா எம்.பி. ரஞ்சன் பட், வரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் பாஜக ஏற்கெனவே இவரது பெயரை அறிவித்திருந்தது. இந்நிலையில் அவர் பின்வாங்குவது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல குஜராத் வேட்பாளர் பிகாஜி தாகூரும் போட்டியிடப் போவதில்லை என்று சற்றுமுன் அறிவித்தார்.

News March 23, 2024

அழகியை மணந்தார் சொமாட்டோ தலைவர்

image

சொமாட்டோ (Zomato) நிறுவனத்தின் உரிமையாளர் தீபிந்தர் கோயல், மெக்சிகோவைச் சேர்ந்த மாடலான கிரேஸியா முனோஸை திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த திருமணம் குறித்து, அவர்கள் பொதுவெளியில் எதுவும் தெரிவிக்கவில்லை. 41 வயதாகும் தீபிந்தர் கோயலுக்கு இது 2ஆவது திருமணம் ஆகும். முன்னதாக டெல்லி ஐஐடி-இல் படிக்கும் போது காஞ்சன் ஜோஷி என்பவரை திருமணம் செய்து இருந்தார்.

News March 23, 2024

திமுக கூட்டணியில் சேர்ந்தது ஏன்?

image

மதவாதத்தை பாஜக பரப்புவதால், திமுக கூட்டணியில் சேர்ந்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “ஆரம்பத்தில் அரசியலை நான் வெறுத்தேன். ஆனால் நல்ல முயற்சிகளை அரசியல் மூலமே செய்ய முடியும் என்பதை உணர்ந்து அரசியலுக்கு வந்தேன். திமுக கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள் என கேள்வி கேட்கிறார்கள். ஒரு கட்சி (பாஜக) மக்களை மதத்தின் மூலம் பிளவுபடுத்துவதால், திமுக அணியில் இணைந்தேன்” என்றார்.

error: Content is protected !!