India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் தன்வசம் வைத்திருந்த ஒரு சாதனையை இழந்துள்ளார். டி20 போட்டிகளில் இதுவரை நோ பால் வீசாத வீரர் என்ற சாதனையை இத்தனை ஆண்டுகளாக தன் வசம் வைத்திருந்தார். இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நோ பால் வீசியதால், இந்த சாதனையை இழந்துள்ளார். அதுமட்டுமின்றி இன்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 51 ரன்களையும் வாரி வழங்கியிருக்கிறார்.
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 வரை நடைபெற்றது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதமே நடத்தி முடிக்கப்பட்டது. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 25ஆம் தேதி முடிவடைய உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26 – ஏப்ரல் 8 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 6ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறை காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் இந்திய அரசியலுக்கே ஆபத்து என காங்கிரஸ் முன்னாள் MP சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார். மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது காவலில் இருக்கும் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் நீடிப்பது என்ன மாதிரியான ஒழுக்கம் என கேள்வி எழுப்பியுள்ளார்.
நவ கிரகங்களின் தலைவனான சூரிய பகவான் தற்போது புதன் மற்றும் ராகுவோடு கூட்டணி சேர்ந்துள்ளார். இதனால் கடகம், துலாம், தனுசு, மீன ராசியினருக்கு அடி மேல் அடி விழப்போகிறது. வேலை பார்க்கும் இடத்தில் பிரச்னை, பொருளாதார நெருக்கடி, கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வருவது, எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைக்காமல் போவது போன்ற பல்வேறு சங்கடமான நிகழ்வுகளை மேற்கண்ட ராசியினர் சந்திக்க உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரருமான எம்.எஸ்.தோனி அவ்வப்போது புதுப்புது ஹேர் ஸ்டைலில் தோன்றுவார். அந்த வகையில், அவர் தற்போது போனிடெய்ல் லுக்கில் அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சென்னை அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட அவர், போனிடெய்ல் லுக்கில் வலம்வந்தார். அது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும்போது, மீனவர்களுக்கு நாள்தோறும் ₹500 வழங்குவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை, நாகை வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் விடியல் பாய்ச்சப்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரது நலனுக்காகவும் தமிழக அரசு போராடுவதாகவும் அவர் கூறினார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வந்த சேஷு தற்போது ICU-வில் சிகிச்சை பெற்று வருவதாக நடிகர் S.VE.சேகர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ICU-வில் உள்ள சேஷுக்கு மருத்துவ உதவிக்கு பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். மேலும், சேஷுவின் மகன் பெயருக்கு பணம் அனுப்பி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர், வங்கி கணக்கு எண் தொடர்பான தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் சமீபத்தில் இணைந்த மஜத கட்சி 4 தொகுதிகள் கேட்ட நிலையில், 3 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது. ஹாசன் தொகுதியில் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுகிறார். அதே போல், அக்கட்சியின் தலைவர் குமாரசாமி, மாண்டியா தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
சில கனவுகள் நம்மை புன்னகையோடு எழ வைத்தாலும், சில கனவுகள் திகிலூட்டி அழ வைக்கும். இதற்கு, தூங்கச் செல்லும் முன் நமது ஆழ்மனத்தில் தோன்றும் எண்ணங்களும், தீவிரமாக ஆலோசிக்கும் எதிர்மறை விஷயங்களும் காரணமாக கூறப்படுகின்றது. குறிப்பாக கனவில் அடிக்கடி பாம்பு, பேய் வருவது, சண்டையிடுவது போன்றவை நமது தூக்கத்தை கலைத்தாலும் அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடவே கூடாது என சிலர் விரும்புவதாக சீமான் தெரிவித்துள்ளார். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், ” மிகுந்த போராட்டத்துக்கு பிறகு எனக்கு மைக் சின்னத்தை கொடுத்துள்ளார்கள். ஏதாவது ஒன்றை தாருங்கள் என கேட்டும் அவர்கள் எங்களுக்கு சின்னம் தர விரும்பவில்லை. மக்கள் சின்னத்தை தேட மாட்டார்கள், என்னைத்தான் தேடுவார்கள், தேர்தல் முடிவில் இது புரியும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.