News April 7, 2024

மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால் ஆபத்து

image

சில உணவுகளை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால், உடல்நிலை பாதிக்கும். அது எந்த உணவுகள் என்பதை தெரிந்து கொள்வோம். 1) கோழி இறைச்சி 2) கீரை 3) முட்டை 4) காளான் 5) சாதம் ஆகியவற்றை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால், அதில் ஏற்படும் மாற்றங்கள் வயிற்று உபாதைகள், செரிமானக் கோளாறு போன்ற உடல்நிலை பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக, கீரை மற்றும் எண்ணெய்களை மீண்டும் சூடாக்கினால் புற்றுநோய் ஆபத்து உள்ளது.

News April 7, 2024

ஒரே வாரத்தில் ரூ.1.71 லட்சம் கோடி சேர்த்த நிறுவனங்கள்

image

டாப் 10 நிறுவனங்களில் 4 நிறுவனங்களின் கடந்த வார சந்தை மூலதன மதிப்பு ரூ.1.71 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் உள்பட மற்ற 6 நிறுவனங்கள் ரூ.78,127 கோடி சரிவை சந்தித்துள்ளன. டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, எல்ஐசி ஆகிய 4 நிறுவனங்கள் லாபம் ஈட்டின. மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ, ஏர்டெல், இன்ஃபோசிஸ், ஐடிசி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் சரிவில் முடிந்தன.

News April 7, 2024

மோடிக்கு தென்னிந்தியாவின் மதிப்பு தெரியவில்லை

image

பிரதமர் மோடிக்கு தென்னிந்தியாவின் மதிப்பு தெரியவில்லை என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி நாட்டை ஒற்றுமையாக வைத்திருந்ததாக தெரிவித்த அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மதச்சார்பற்ற சிந்தாந்த அறிக்கை என புகழாரம் சூட்டினார். தென்னிந்திய மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் பாஜகவினர் மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்க நினைப்பதாக தெரிவித்தார்.

News April 7, 2024

டெல்லிக்கு 235 ரன்கள் இலக்கு

image

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு 235 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது மும்பை அணி. டாஸ் வென்ற டெல்லி அணி, மும்பையை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மும்பை வீரர்கள், எதிரணியின் பந்துகளை பதம் பார்த்தனர். இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி 234 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 49, டிம் டேவிட் 45 ரன்கள் எடுத்தனர்.

News April 7, 2024

புதிய உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு

image

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,558.3 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின்படி, மார்ச் 29ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு 295.1 கோடி டாலர் உயர்ந்து 64,558.3 கோடி டாலராக உள்ளது. இதுவரை இல்லாத அளவில் அதிகபட்ச கையிருப்பு இதுவாகும். மதிப்பீட்டு வாரத்தில் தங்கம் கையிருப்பு 67.3 கோடி டாலர் அதிகரித்து 5,216 கோடி டாலராக உள்ளது.

News April 7, 2024

அனந்த்நாக் தொகுதியில் மெஹபூபா முஃப்தி போட்டி

image

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் பி.டி.பி கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி வேட்பாளராக போட்டியிடுகிறார். I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்றுள்ள அக்கட்சி, தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், ஸ்ரீநகரில் வஹீத் பர்ரா, பாரமுல்லாவில் முன்னாள் எம்.பி மிர் ஃபயாஸ் ஆகியோர் பி.டி.பி கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

News April 7, 2024

ஒரே நாளில் ஒரு கோடி. ஓஹோனு வாழ்க்கை

image

அமெரிக்காவில் லாட்டரி சீட்டு வாங்கிய டாக்ஸி டிரைவர் ஒருவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் பரிசாக கிடைத்திருக்கிறது. டிப்ஸாக கிடைத்த 5 டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ. 400) அவர் அந்த சீட்டினை வாங்கியிருக்கிறார். அதில் அவருக்கு 1,50,000 டாலர்கள் பரிசு கிடைத்திருக்கிறது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு ஒரு கோடியே 24 லட்சம் ஆகும்.

News April 7, 2024

தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலராக உள்ளார் மோடி

image

பிரதமர் மோடி தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தோடு ஒன்றிவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மதுரை திருமங்கலத்தில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்தின் பாதுகாவலராக திகழ்கிறார். ஆனால் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் தமிழ் கலாச்சாரம், சனாதனத்தை களங்கப்படுத்தியதோடு, அதற்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றனர்’ என்றார்.

News April 7, 2024

இந்த பிரச்னைகள் உங்களுக்கு இருக்கிறதா?

image

இந்திய இளைஞர்களிடையே மனநலப் பிரச்னைகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் அதிர்ச்சி தெரிவிக்கின்றன. குறிப்பாக 13 – 17 வயதுடைய இளம் பருவத்தினரில் 7.3% பேர் மனச்சோர்வை உணர்கின்றனர். தூக்கமின்மை, ஒருவித சோக உணர்வு, எதிலும் ஆர்வமின்மை, குற்ற உணர்வு ஆகியவை மனச்சோர்வின் அறிகுறிகள் ஆகும். இவை நீண்ட நாள்களுக்கு தொடர்ந்தால் மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம் என்கிறார்கள் மனநலம் சார்ந்த நிபுணர்கள்.

News April 7, 2024

ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க காசில்லை

image

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லையென சீமான் குற்றம்சாட்டியுள்ளார். வேலூரில் நாதக வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், ‘ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க காசு இல்லை. ஆனால் சமாதி ரூ.150 கோடிக்கு கட்ட காசு உள்ளது. கல்வியை இலவசமாக, தரமாக தந்தால் போதுமென கேட்கிறோம். பெண்களை 1,000 ரூபாய்க்கு கையேந்த வைப்பது தமிழ் மக்களுக்கு தன்மான இழப்பாகும்’ என்றார்.

error: Content is protected !!