India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ரஜினி மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவகாரத்து கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் தொடரும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தாலும், தேர்தல் கட்டுப்பாடுகள் ஜூன் 4 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, ஏப்.19 வரை மட்டுமே கட்டுப்பாடுகள் என நினைத்த தமிழக மக்கள், வணிகர்களின் தலையில் இடியாக வந்து இறங்கியிருக்கிறது.
சென்னையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு 20 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. பட்டாசு வெடிக்கக் கூடாது, அலங்கார வளைவுகள் அமைக்கக்கூடாது, வெறுப்புணர்வை தூண்டும் வகையில், மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையில் முழக்கம் எழுப்பக் கூடாது என கூறப்பட்டுள்ளது. மேலும், பேனர், கட் அவுட்டுகள் கண்டிப்பாக வைக்கக்கூடாது, பதாகைகளை ஏந்திச்செல்லகூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்று 2 கிரகணங்கள் உள்ளன. இதில் சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு பயணிக்கும்போது ஏற்படும் நிகழ்வாகும். அப்போது சூரிய ஒளி முழுமையாகவோ, லேசாகவோ அல்லது பாதியாகவோ பூமி மீது விழாமல் தடுக்கப்படும். இதனால் சூரிய கிரகணம் 3 வகைபடுத்தப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் ஆண்டுக்கு 2 முதல் 5 முறைகள் வரை ஏற்படும் என சொல்லப்படுகிறது.
அண்டவெளியில் சுற்றும் பூமி, சூரியன் மற்றும் நிலவுக்கு இடையே பயணிக்கையில் சந்திர கிரகணம் நிகழும். அப்போது சூரிய ஒளியை நிலவு மீது விழாமல் தனது நிழலை நிலவு மீது பூமி விழச் செய்யும். இந்த சந்திர கிரகணமானது, ஒரு வருடத்துக்கு 3 முறை ஏற்படும். சூரியன், சந்திரன், பூமி ஆகியவை எவ்வாறு வரிசையாக அமைகின்றன என்பதைப் பொறுத்து, பகுதியளவு சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணம் என 2 வகைபடுத்தப்படும்.
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டுவசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, 3 மாதத்தில் முடிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பெரியசாமி தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது கீழமை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ₹400 லட்சம் கோடியை முதல்முறையாக எட்டி சாதனை படைத்துள்ளது. 2014 மார்ச்சில் ₹100 லட்சம் கோடியாகவும், 2021 பிப்ரவரியில் ₹200 லட்சம் கோடியாகவும், 2023 ஜூலையில் ₹300 லட்சம் கோடியாகவும் மதிப்பு உயர்ந்திருந்தது. இதையடுத்து 9 மாதங்களுக்கு பிறகு இன்று ₹400 லட்சம் கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.
டெல்லிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது. முதலில் ஆடிய மும்பை அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 234 ரன்கள் குவித்தது. ஆனால், இதில் ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை. இதனால் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல், 200+ ரன்களுக்கும் அதிகமாக குவித்த அணி என்ற பெருமையை பெற்றது மும்பை இந்தியன்ஸ்.
*குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும் ‘CrPC 110’ என்பது ஒரு மினி குண்டாஸ் ஆகும். *குற்றப் பின்னணி கொண்டோரைத் தேர்தல் போன்ற சிறப்பு நிகழ்வுகளின்போது, வருவாய்க் கோட்டாட்சியர் சம்மன் அனுப்பி வரவழைத்து, சுய நன்னடத்தைக்கான சான்று பெறுவார். *ஓராண்டுக்கு இந்தச் சான்று உயிர்ப்புடன் இருக்கும். *குறிப்பிட்ட நபர் மீது ஏதேனும் ஒரு புகார் வந்தால்கூட அவர் கைது செய்யப்படுவார் (ஜாமின் அளிக்கப்படாது).
தொழில்நுட்பம், ராணுவ வலிமை & தேசிய அந்தஸ்து ஆகியவற்றில் இந்தியா பலவீனமாக இருந்ததால் அதன் ரூபாய் மதிப்பும் பலவீனமாக இருந்ததாக ஜோஹோ சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சுவிஸில் முடிதிருத்தும் தொழிலாளி சராசரியாக இந்திய ஆசிரியரின் வருமானத்தை விட 20-40 மடங்கு வருமானம் பெறுகிறார். இதே வருமானத்தை நமது ரூபாய் மதிப்பு உயரும்போது, நம் மக்களும் பெற முடியும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.