India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று ரோஹித் ஷர்மா விளையாடவுள்ள போட்டி, மும்பை அணிக்காக அவர் விளையாடும் 200வது ஐபிஎல் போட்டியாகும். 2011ல் மும்பை அணியில் சேர்ந்தது முதல் இதுவரை 199 போட்டிகளில் விளையாடி 5,084 ரன்கள் குவித்துள்ளார். இதில் 34 அரைசதங்கள், ஒரு சதம் அடங்கும். 2013ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனான பிறகு, 10 ஆண்டுகளில் 5 முறை கோப்பையை வென்று தந்துள்ளார்.
20 நாட்களுக்கு பிறகு கணவர் குழந்தைகளை சந்திப்பதாக, நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘எல்.ஐ.சி’ மற்றும் ‘மண்ணாங்கட்டி’ படங்களின் படப்பிடிப்பிற்காக, இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் வெளிநாடு சென்றிருந்தனர். 20 நாட்கள் தொடர் படப்பிடிப்பிற்கு பிறகு இருவரும் வீடு திரும்பியுள்ளதால், குழந்தைகளை பிரிந்த ஏக்கத்தை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழியின் கணவர் அரவிந்தன் பெயரில் ரொக்க பணம், வங்கி கையிருப்பு, பத்திரங்கள், கார் உள்பட அசையும் சொத்து ரூ.66,21,347, நிலங்கள், வணிக கட்டிடம், வீடு உள்பட அசையா சொத்து ரூ.2,26,31,550 என மொத்தம் ரூ.2,92,52,897 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அவரது பெயரில் ரூ.60,60,187 கடன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ரூ.57.32 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார். ரொக்க பணம், வங்கி கையிருப்பு, பங்குகள், பத்திரங்கள், நகைகள், கார்கள் என அசையும் சொத்து ரூ.38,77,79,177, நிலங்கள், கட்டிடங்கள், வீடுகள் என அசையா சொத்து ரூ.18,54,42,000 என மொத்தம் ரூ.57,32,21,177 சொத்துகள் இருக்கிறது.
அமெரிக்காவில் லாட்டரியில் நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு ரூ.9,166 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது. “மெகா மில்லியன் ஜாக்பாட்” லாட்டரி பரிசுத் தொகை வியப்படைய செய்யும் ஒன்றாகும். கடந்த ஆண்டு ஜனவரியில் மைனே மாகாணத்தை சேர்ந்தவருக்கு ரூ.11,124 கோடி, ஜூலையில் புளோரிடாவை சேர்ந்தவருக்கு ரூ.13,347 கோடி பரிசு கிடைத்தது. இந்நிலையில், தற்போது நியூ ஜெர்சியை சேர்ந்தவருக்கு ரூ.9,166 கோடி கிடைத்துள்ளது.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் மாவட்டம் சிகுர்பாட்டி, புஸ்பகா கிராமங்களுக்கு இடையேயான வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும் அவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் பெண் உள்ளிட்ட 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
▶டெல்லி, பஞ்சாப், பெங்களூரு, லக்னோ – ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. ▶டெல்லி, லக்னோ – அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு கேப் பெற்றதில்லை. ▶கொல்கத்தா, லக்னோ – அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான பர்பிள் கேப் பெற்றதில்லை. ▶குஜராத், லக்னோ – வளர்ந்து வரும் வீரருக்கான விருது பெற்றதில்லை. ▶கொல்கத்தா, பெங்களூரு, குஜராத், லக்னோ – நியாயமாக விளையாடியதற்கான Fair Play விருது பெற்றதில்லை.
நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் எந்த சின்னம் கேட்டிருந்தாலும் கிடைத்திருக்கும். வாசன், தினகரனுக்கு பாஜக கூட்டணி காரணமாகவே அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்தது. என் வாழ்நாளில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சின்னத்தை காட்டி என்னை முடக்க முடியாது. எந்த சின்னத்தில் நின்றாலும் நாதக வேட்பாளர்கள் வெல்வார்கள் என சீமான் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாதுகாப்புப் படையினரை திரும்ப பெறவும், சட்டம் ஒழுங்கு பணியை போலீசாரிடம் திரும்ப ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்ப பெறவும் அரசு ஆலோசித்து வருகிறது” என்றார்.
மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஓபிஎஸ் மனு அளித்திருந்தார். ஆனால், அவரின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம், சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னதாக, ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.