India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். நீலகிரியில் காவல்துறை அனுமதி பெற்று ஊர்வலம் நடத்த முயன்ற அதிமுக வேட்பாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். ஒரு சார்பாக நடந்துகொள்வதைப் தேர்தல் ஆணையம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாச வேலைகளுக்கு தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உளவுத்துறை கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு குண்டுவெடிப்பை சுட்டிக்காட்டி அக்கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும், அதில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வேட்புமனு தாக்கல் செய்தார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அவர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தயாநிதி மாறன் கடந்த 2004, 2009, 2019 தேர்தல்களில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதேபோல் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன், நீலகிரியில் ஆ.ராசா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்தியாவில் நடைபெற்று வரும் 2024 ஐபிஎல் தொடர், ரசிகர்களிடையே களைகட்டி வருகிறது. இதுவரை நடந்த 7 போட்டிகளிலும், சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வென்றுள்ளன. அதன்படி, CSK-2, RR-1, KKR-1, PBKS-1, RCB-1, GT-1 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் 6 இடங்களை பிடித்துள்ளது. சொந்த மண்ணில் ரசிகர்கள் கொடுக்கும் அளவில்லா ஆதரவு, அணிகளுக்கு தனி பலத்தை கொடுக்கும் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
பெரம்பலூர் அருகே தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது அமைச்சர் கே.என். நேருவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கொசூர் பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மயக்கம் வருவதாகக் கூறிய அவர், பிரசாரத்தை பாதியில் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின்னர் வேறு ஒரு காரில் மருத்துவமனைக்கு கே.என். நேரு புறப்பட்டு சென்றார்.
சிறுபான்மையின மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாவலர்கள் என்று கூறும் திமுக மற்றும் அதிமுக ஒரு இஸ்லாமியரை கூட வேட்பாளராக அறிவிக்கவில்லை. இது, தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. சமூக நீதி பேசும் இரு கட்சிகளும், சமூக ரீதியிலான வாக்கு வங்கியை அடிப்படையாக கொண்டு கவுண்டர், நாயுடு, முக்குலத்தோர், தேவேந்திரர், வன்னியர் போன்ற பெரும்பான்மை சமூகத்தினரை வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளன.
அசாமில் உள்ள யுபிபிஎல் கட்சியின் முக்கிய நிர்வாகியான பெஞ்சமின் பசுமத்தாரி, ரூபாய் நோட்டுகளின் மீது படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பி.டி.ஆரின் பிரமோத் போரோ தலைமையிலான யுபிபிஎல் கட்சி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேர்தல் விதிகள் அமலில் உள்ள இந்த நேரத்தில், பாஜக கூட்டணி நிர்வாகியின் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பேசிய அவர், “பாஜக கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. பலமுறை பானை சின்னம் கேட்டு மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தென் இந்தியாவில் இதற்கான விலையை பாஜக நிச்சயம் கொடுக்கும், தேர்தல் முடிவில் அதை அவர்கள் உணர்வார்கள்” என்றார்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹3,000, பிறந்த குழந்தைகளுக்கு ரூ.10,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பாமக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு ₹3,000, ஒரு டன் கரும்புக்கு ₹5,000 கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான வரி ரத்து செய்யப்படும். இதனால், லிட்டருக்கு ₹20 வரை விலை குறையும் என அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஆண்கள் 3.06 கோடி, பெண்கள் 3.15 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 8,465 பேரும் வாக்களிக்க தகுதியுடையவர்கள். தமிழ்நாட்டில் 64,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுமார் 7 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். இதுவரை ரூ.70 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.