India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டிவி சின்னத்தில் போட்டியிட விரும்பிய நிலையில், அந்த சின்னம் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்ட நிலையில், தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னத்தை ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் ஆஸ்தான சின்னமான பம்பரத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து மதிமுக நீதிமன்றத்தை நாடிய நிலையில் அதுவும் பலனளிக்கவில்லை. ஆகையால், இந்த இரண்டு சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
மும்பை – ஐதராபாத் இடையேயான 8ஆவது ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் ஐதராபாத் அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளுமே ஒரு வெற்றிகூட பெறவில்லை. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
நெல்லை தொகுதியில் போட்டியிட முன்னாள் MP ராமசுப்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ள சம்பவம் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 2009-14 வரை நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி-யாக இருந்தவர் ராமசுப்பு. இந்தத் தேர்தலில் போட்டியிட சீட் தராததால் அதிருப்தியில் இருந்த அவர், சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நான்தான் காங்கிரஸ்காரன் எனக் கூறினார்.
டீசல் விலை அதிகரித்ததே விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அத்தியாவசியப் பொருட்கள் 40% அளவுக்கு விலையேற்றம் கண்டதாக குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்ததாகக் கூறினார். மேலும், வீட்டு வரி, தண்ணீர் வரி, குப்பை வரி என திமுக அரசு அனைத்திற்கும் வரி விதிப்பதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போவதாக தகவல் கசிந்துள்ளது. இந்தி திணிப்பை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் மாதம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், படத்தை தொடங்குவது சரியாக இருக்காது என படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடர், இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ருதுராஜ் தலைமையிலான CSK அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள தோனிக்கு, இது கடைசி ஐபிஎல் தொடராக கூட இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை, நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி விலகுவார் என்றால், இத்தொடரில் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்ப்பீர்கள்? என கமெண்டில் சொல்லுங்க.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே மதிமுக கேட்ட பம்பரம் சின்னத்தையும் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்தது. இவ்வாறு திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கேட்கும் சின்னத்தை ஒதுக்காத தேர்தல் ஆணையம், அமமுக, தமாகாவுக்கு மட்டும் குக்கர், சைக்கிள் சின்னங்களை ஒதுக்கியது எப்படி என்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதியை பாமக இன்று வெளியிட்டது. அதில் இடம்பெற்றிருக்கும் “திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம்” என்ற அம்சம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. 21 வயதுக்குட்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்ள இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலும் கட்டாயமாக்க வழி செய்வோம் என்று பாமக வாக்குறுதி அளித்திருக்கிறது. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 4,187 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 28) கடைசி நாளாகும். டெல்லி காவல் துறையில் 186 எஸ்ஐ பணியிடங்களும், மத்திய ஆயுதப்படையில் 4001 பணியிடங்களும் உள்ளன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 20-25 வயதுடையவர்கள் <
Sorry, no posts matched your criteria.