India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வனத்துறையால் கைது செய்யப்பட்ட கிளி ஜோதிடர்கள் செல்வராஜ், சீனிவாசன் விடுவிக்கப்பட்டனர். கடலூர் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாமக வேட்பாளர் தங்கர்பச்சான், அங்கிருந்த செல்வராஜிடம் கிளி ஜோதிடம் பார்த்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், கிளியை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
மலட்டுத்தன்மை கொண்ட ஆண்களின் குடும்பத்தினருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைப்பேறு பிரச்னை கொண்ட ஆண்களின் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சிலருக்கு எலும்பு, திசு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், தீவிர ஆய்வு நடந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் எனக் கணித்ததால் தான் கிளி ஜோசியர் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக காடுகளில் மரங்கள், விலங்குகள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் திமுக அரசு, கிளி ஜோசியரிடம் தனது வீரத்தை காட்டியுள்ளதாக கண்டனம் தெரிவித்த அவர், பகுத்தறிவு பேசும் திமுகவால் ஜோதிடத்தில் நல்ல செய்தி கூறியதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என சாடினார்.
தேர்தலை காரணம் காட்டி ED விசாரணைக்கு வர முடியாது என கெஜ்ரிவால் கூறுவதை ஏற்க முடியாது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னை மத்திய அரசுக்கும், கெஜ்ரிவாலுக்குமானது இல்லை என விளக்கமளித்த கோர்ட், இது அமலாக்கத் துறைக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான சட்டப் பிரச்னை எனக் கூறியுள்ளது. முன்னதாக ED கைது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய கெஜ்ரிவாலின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற அவர், ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவரது மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் மட்டுமின்றி திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையை பதித்தவர் ஆர்.எம்.வீரப்பன் என புகழாரம் சூட்டியிருந்தார்.
காங்கிரஸ் கட்சி ராமரை அவமானப் படுத்திவிட்டதாக பிரதமர் மோடி மீண்டும் பேசியிருக்கிறார். உத்தர பிரதேசத்தின் பிலிபிட் நகரில் பிரசாரம் செய்த அவர், அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையை காங்கிரஸ் புறக்கணித்ததாக குறிப்பிட்டுள்ளார். மதம் தொடர்பாக பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் விதி இருக்கும்போது பிரதமரே அதனை மீறுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கெஜ்ரிவால் கைது சட்டப்படி தானே தவிர, தேர்தல் சமயம் என்பதற்காக அல்ல என டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது. ED கைது செய்ததை எதிர்த்த வழக்கில், அவர் ஒரு முதலமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை கொடுக்க முடியாது எனத் தெரிவித்த கோர்ட், பொது வாழ்வில் இருப்பவர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கை சட்டவிரோதம் இல்லை எனவும் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
அதிக அளவில் உட்கொள்ளப்படும் துரித உணவுகளில் முக்கிய இடம் வகிப்பது நூடுல்ஸ். இதை நீரிழிவு நோயாளிகள் அதிகளவில் உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ஒரு கப் நூடுல்ஸில் சுமார் 45 கிராம் கார்ப்போஹைட்ரேட் உள்ளது. இது சாதத்துடன் ஒப்பிடுகையில் ஒன்றரை மடங்கு அதிகம். அரை கப் நூடுல்ஸ் உடன் அரை கப் காய்கறிகள் சேர்த்து சமைத்து சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
திமுக இருக்கும்வரை தமிழ்நாட்டில் தாமரை மலராது என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். CNN செய்தி சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால் இனி தேர்தலே இருக்காது என்றார். மக்களை திசை திருப்புவதற்காகவே கச்சத் தீவு விவகாரம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாஜகவினர் தோல்வி பயத்தில் உள்ளனர் என்றும் முதல்வர் கூறினார்.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்க, டெல்லி ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பிறருடன் சேர்ந்து கெஜ்ரிவாலும் சதி வேலையில் ஈடுபட்டது ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள கோர்ட், தற்போதை நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயலில் தலையிட முடியாது எனக் கூறியுள்ளது. இந்த வழக்கில் மார்ச் 21ஆம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.