News March 29, 2024

தமிழ் இனத்திற்கு திமுக தான் எதிரி

image

தமிழகத்திற்கும் தமிழ் இனத்திற்கும் திமுக தான் உண்மையான எதிரி என அண்ணாமலை கூறியுள்ளார். மழை வெள்ளத்தில் தத்தளிக்கக் கூடிய நகரமாக சென்னை மாறியதுதான் திமுகவின் சாதனை எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் வளர்ச்சியை குழிதோண்டி புதைத்து விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக வாக்குப்பதிவிற்கு முன்பே, யார் பிரதமர் என்று தீர்மானிக்கப்பட்ட தேர்தல் இதுதான் எனவும் அவர் கூறினார்.

News March 29, 2024

புதிய உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு

image

2023-24ஆம் நிதியாண்டில் பிட்காயின் மதிப்பு வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. நிதியாண்டின் தொடக்கத்தில் $28,500 ஆக (இந்திய மதிப்பில் ₹23 லட்சம்) இருந்த பிட்காயினின் மதிப்பு சுமார் 150% அதிகரித்து தற்போது $73,750 என்ற (₹61.5 லட்சம்) புதிய உச்சத்தை தொட்டது. ஈக்விட்டி, பத்திரங்கள் மற்றும் தங்கத்துடன் ஒப்பிடுகையில் பிட்காயின் நல்ல வருமானத்தை அளித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

News March 29, 2024

பட்டையை கிளப்பும் கொல்கத்தா அணி

image

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர். சின்னசாமி மைதானத்தில் முதலில் களமிறங்கிய RCB அணி 182/6 ரன்களை குவித்தது. பின்னர் 183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KKR வீரர்கள் சால்ட் மற்றும் நரைன் அதிரடியாக விளையாடினர். இதனால் 6 ஓவர்களில் KKR அணி 85/1 ரன்களை குவித்துள்ளது. இதில் சுனில் நரைன் 47 (22) அவுட்டானார்.

News March 29, 2024

PhonePe பயனர்களுக்கு GOOD NEWS

image

UPI செயலியான PhonePe பயனாளர்கள் இனி ஐக்கிய அரபு நாடுகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம் என்று அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்கான கரன்ஸியாக இந்திய ரூபாயை மாற்றிய பின்பு பணப் பரிமாற்றம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் UPI இருப்பது போல அரபு நாடுகளில் Neopay சேவை இருக்கிறது. அந்த இரண்டையும் இணைத்திருப்பதன் மூலம் PhonePe இந்த சேவையை வழங்கவுள்ளது.

News March 29, 2024

ஆரத்திக்கு பணம் கொடுத்தாரா அண்ணாமலை?

image

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்ததாக வீடியோ ஒன்று வைரலானது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் அண்ணாமலை, “அது என் மண், என் மக்கள் பயணத்தின்போது கொடுத்தது. ஆரத்திக்கு பணம் கொடுப்பது நமது கலாசாரம். வாக்குகளை பணம் கொடுத்து பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்று கூறியிருக்கிறார்.

News March 29, 2024

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நடவடிக்கை

image

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் செலுத்த வேண்டிய ₹1,823 கோடி வரியை செலுத்துமாறு ஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இதுபோன்ற செயல்களை மீண்டும் ஒருமுறை செய்ய தைரியம் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது எனது உத்தரவாதம் எனத் தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

IPL: 240 சிக்ஸர்கள்.. புதிய சாதனை

image

பெங்களூருவில் நடைபெற்றுவரும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி, புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்தபோது அவர், ஒட்டுமொத்தமாக RCB அணிக்காக அதிக சிக்ஸர்கள் (240) அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அவருக்கு அடுத்தபடியாக கெயில் 239, டி வில்லியர்ஸ் 238, மேக்ஸ்வெல் 67, டு பிளெசிஸ் 50 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

News March 29, 2024

விரைவில் வருகிறது பாலாவின் இலவச மருத்துவமனை

image

இலவச மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதே தனது ஆசை என KPY பாலா தெரிவித்துள்ளார். மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வரும் பாலா, சமீபத்தில் அரசுப் பள்ளி ஒன்றுக்கு நடிகர் லாரன்ஸ் உதவியுடன் ₹15 லட்சம் வழங்கினார். இந்த நிலையில், இருதய நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் இலவச மருத்துவமனை ஒன்றை கட்ட வேண்டும் என்றும், தனது இந்த ஆசை விரைவில் நிறைவேறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

சமூகநீதிக்கு சவக்குழி தோண்டும் கட்சி பாஜக

image

சமூக நீதி பேசும் ராமதாஸ், சமூக நீதிக்கு எதிராக உள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தருமபுரி பிரசாரத்தில் பேசிய அவர், உடன்பாடு இல்லாமல்தான் பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் சென்றார் என பாமகவினருக்கே தெரியும். சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் கட்சி தான் பாஜக என விமர்சித்தார். மேலும், பாஜகவிடம் இருந்து இந்தியாவை காக்க வேண்டும் எனவும் அவர் சூளுரைத்தார்.

News March 29, 2024

கொல்கத்தா அணிக்கு 183 ரன்கள் இலக்கு

image

பெங்களூருவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி 182/6 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 83* ரன்கள் குவித்தார். கேமரூன் கிரீன் 33, மேக்ஸ்வெல் 28, தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்தனர். KKR அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக ஆடி ரன்கள் குவித்த கோலி, அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியும் வென்றார்.

error: Content is protected !!