India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
✍அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை; உண்மையைச் சொல் அது மரியாதையை காக்கும்.✍எல்லா உயிர்களிடத்திலும் இறை வியாபித்திருக்கிறார் என்று அறிதலே மெய்யியலின் மெய். ✍பாவம், புண்ணியம் என்பன மனம், சொல், செயல் ஆகிய முவ்வழிகளில்தான் நம்மை வந்தடைகின்றன.✍உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள்.✍சோதனைகளே ஒருவருக்கு அவரை அவருக்கே யாரென அறிமுகப்படுத்துகிறது.
ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தும் வாய்ப்பை நீரஜ் சோப்ராவுக்கு அளித்திருக்க வேண்டும் என்று இந்திய தடகள சங்கத்தின் துணைத் தலைவர் அஞ்சு ஜார்ஜ் கூறியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், “டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட தேசிய விளையாட்டு சங்கங்கள் இன்னும் ஒலிம்பிக் போட்டிக்கான தங்கள் அணியையே அறிவிக்கவில்லை. இந்நிலையில், அதற்குள் எப்படி சரத் கமல் தேர்வு செய்யப்பட்டார் என்று தெரியவில்லை” என்றார்.
இந்தியா பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதை உலகமே கவனித்து வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் அர்விந்த் விர்மானி பெருமிதமாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கு எட்டப்பட வாய்ப்பில்லை என்று பாராசூட் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். அவரது கூற்றை ஏற்க முடியாது. அவரது கருத்து இந்தியாவைப் பற்றி தெரியாதவர் கூறுவது போல் உள்ளது” எனத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையமே மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல தெரிகிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் பேசிய அவர், “பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை தேர்தல் ஆணையம் உடனே வழங்குகிறது. எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் ஏற்கெனவே பயன்படுத்திய சின்னத்தைக் கூட கொடுக்க மறுக்கிறது. இதற்கெல்லாம் மக்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்” என்றார்.
▶மார்ச் – 30 | பங்குனி – 17
▶கிழமை: சனி ▶திதி: பஞ்சமி
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, இரவு 09:30 – 10:30 வரை
▶ராகு காலம்: நண்பகல் 09:00 – 10:30 வரை
▶எமகண்டம்: காலை 01:30 – 03:00 வரை
▶குளிகை: காலை 06:00 – 07:30 வரை
▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
▶சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி
ஆப்கனில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கல்லடி, கசையடி அளிக்கும் தண்டனையை மீண்டும் அமல்படுத்த உள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து பேசிய தலிபான் முல்லா ஹிபத்துல்லா, “காபூலைக் கைப்பற்றியதோடு தலிபான்களின் வேலை முடிந்துவிடவில்லை. இப்போதுதான் அது தொடங்கியுள்ளது. ஷாரியத் சட்டத்தை விரைவில் அமல்படுத்தப் போகிறோம்” எனக் கூறியுள்ளார்.
இந்தி திரை உலகில் நிலவும் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு மாற வேண்டும் என்று நடிகை பிரியாமணி வலியுறுத்தியுள்ளார். பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்த அவர், “எங்களுடைய தோல் நிறம் இந்தி நடிகைகள் போல் பிரகாசமாகவும் வெளிர் நிறமாகவும் இல்லை தான். நடிப்பை பொருத்தமட்டில் அது ஒரு பொருட்டல்ல. விரைவில் அங்கு நிலவும் ஏற்றத்தாழ்வு மாறும் என நம்புகிறேன். நாங்களும் இந்திய நடிகர்கள் தான்” என்றார்.
மலக்குடலில் தேங்கி நிற்கும் நச்சு கழிவுகளை நீக்கி, முடி உதிர்வை தடுக்க நெல்லி குடிநீரை பருகலாம் என சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். இரவு தூங்கும் முன்பாக பித்தளை பாத்திரத்தில், ஒரு கைப்பிடி நெல்லியை (வெட்டியது) போட்டு நீரை ஊற்றி மூடி வைக்கவும். காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை 45 நாள்கள் பருகி வந்தால் முடி உதிர்வு நிற்குமாம். இரும்புச் சத்து குறைப்பாடு உடையவர்களும் இதை அருந்தலாம்.
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 23 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. அரபிக்கடல் பகுதியில், அல்-கம்பார் கப்பலை ஐஎன்எஸ் சுமேதா போர்க்கப்பல் இடைமறித்தது. அப்போது, கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்திய இந்திய படை,12 மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு 23 பேரையும் மீட்டதாகக் கூறப்படுகிறது.
பாமக சார்பில் கடலூர் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள இயக்குநர் தங்கர் பச்சான் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் நிற்கும் அவருக்கு ஆதரவாக பரப்புரைச் செய்ய இயக்குநர் சேரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட திரைப் பிரபலங்களை அழைத்துவர சிலர் முயன்றதாகக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியை காரணம் காட்டி, ஆளும் தரப்புக்கு எதிராகக் களத்துக்கு வர அவர்கள் மறுத்துவிட்டனராம்.
Sorry, no posts matched your criteria.