India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் உதயசூரியன் உதிக்கக் கூடாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஓசூரில் பிரசாரம் செய்த அவர், போதைப் பொருள்கள் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் பிழைக்கக் கூடிய எந்தக் குடும்பமும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. போதைப்பொருள்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்க நினைக்கும் முதல்வரின் குடும்பத்தை மீண்டும் ஒரு முறை மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது என்றார்.
திமுக டெபாசிட் இழக்க கூடிய முதல் தொகுதி கோவையாக இருக்குமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை தொகுதிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், “வேட்பாளர் மக்களை சந்திக்கக் கூடாது என எந்த விதியும் கிடையாது. ஆவாரம்பாளையம் பகுதியில் காவல்துறை அனுமதி கொடுத்த இடங்களுக்கு தான் நேற்று சென்றேன். 10 மணிக்கு மேல் நான் மைக்கை எடுத்து பிரசாரம் செய்த வீடியோக்களை வெளியிட வேண்டும்” என்றார்.
கிளாக்கோமா என்பது கண்களை பாதிக்கும் ஒரு வகை நோய். இதன் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறிகளும் தெரிவதில்லை. பரிசோதனையின் மூலமே இந்த நோயை கண்டறிய முடியும். தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் முழுமையான பார்வை இழப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வயது வித்தியாசம் இன்றி பாதிக்கும் இந்நோய் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 70 முதல் 80 வயதுடையவர்களுக்கு அபாயம் அதிகம்.
கோடை வாட்டி வதைத்துவந்த சூழலில் இரண்டு நாள்களாக கிழக்கு காற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், விருதுநகர், புதுக்கோட்டை, நாகை, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை இல்லாத பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாலை 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு இதே நாளில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிரைன் லாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையை படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், 43 பவுண்டரிகள், 4 சிக்சர்களை விளாசிய அவர், ஒரே இன்னிங்ஸில் 400* ரன்கள் குவித்து அசத்தினார். அதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தவொரு வீரரும் 400 ரன்கள் அடித்ததில்லை. இதனால் அணியின் மொத்த ஸ்கோர் கியகியே
ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவிற்கே விடியல் பிறக்கப்போவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் புதிய அறிவிப்புகள் சாத்தியமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாட்டை வளப்படுத்த முடியாத அளவில் இடைஞ்சலாக இருக்கும் மோடி அரசை அகற்றினாலே அனைத்தும் சாத்தியம் என்றார். மேலும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் விடியல் இன்னும் பிரகாசமாக இருக்கும் என்றார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC), காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதில் 3,340 நடத்துனர்கள், 1,975 ஒட்டுனர்கள் உள்ளிட்ட 5,688 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2024 ஏப்ரல்-மே மாதம் நடைபெறும் இத்தேர்வுக்கு, www.tnstc.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையான ₹1000 திங்கட்கிழமை (ஏப்ரல் 15) வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். தற்போது தேர்தல் நடைமுறைகள் அமலில் இருப்பதால் பணம் வருமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், பணம் கொடுக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் நிலையில் விரைவில் பணம் வரவு வைக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் நாளைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நீலகிரியில் உதவி செலவின பார்வையாளர் புகார் எங்களுக்கு வரவில்லை. இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம்” என்றார்.
Sorry, no posts matched your criteria.