India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசியில் பணப்பட்டுவாடா இல்லாமல் நேர்மையான முறையில் தேர்தல் நடந்ததாக புதக தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், குண்டூசி அளவுகூட பிரச்னை ஏற்படாமல் தேர்தலை நடத்திய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு நன்றி எனத் தெரிவித்தார். மேலும், தென்காசியில் எந்தக் கட்சியும் பணம் கொடுக்கவில்லை எனக்கூறியவர், பணப்பட்டுவாடா செய்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலை மாறியுள்ளது என்றார்.
வாக்குப்பதிவு அதிகமாக இருந்தால் ஆட்சி மாற்றம் நடக்கும் எனப் பொதுவாகப் சொல்வதுண்டு. ஆனால், வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் தேர்தல் முடிவுகளுக்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். அதே நேரம், வாக்குப்பதிவு அதிகமாக உள்ள தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பு மக்கள் தங்கள் தரப்பை வெற்றிப் பெறச் செய்ய பெருமளவில் வாக்களிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2019 தேர்தலை விட இந்த 2024 தேர்தலில் தமிழகத்தில் உள்ள 7 தனித் தொகுதிகளின் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது. திருவள்ளூர் (72.33 – 68.31%), காஞ்சிபுரம் (75.28 – 71.55%), விழுப்புரம் (78.62 -76.44%), நீலகிரி (73.99 – 70.93%), சிதம்பரம் (77.91 – 75.32%), நாகை (76.88 – 71.55% ), தென்காசியில் (71.37 – 67.55%) வாக்குகள் பதிவாகியுள்ளன. நாகையில் கடந்த தேர்தலை விட 5% வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
பறவைக் காய்ச்சல் பண்ணைக் கோழிகள் மட்டுமல்லாமல், வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளுக்கும் எளிதாக பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோழிகள் மூலமாக தான் இந்த காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுகிறது. பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் அனைத்தும் சாதாரண சளி, காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகளுடன் ஒத்துப்போகின்றன. அதாவது, இருமல், வயிற்றுப்போக்கு, மூச்சுத் திணறல், தலைவலி, தசை வலி, தொண்டை வலி போன்றவை தான்.
நாமக்கல் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளிலும், கோழிகளை தீவிரமாக கண்காணிக்க கால்நடை நோய் தடுப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளா குட்டநாடு பகுதியில் வாத்துகள் கொத்து கொத்தாக செத்து மடிந்தன. அவற்றை பரிசோதித்ததில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை விட பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆபத்தானவர், மோசமானவர் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம்சாட்டியுள்ளார். பீகாரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், கட்சியைத் தொடங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்குமென்றும், ஆனால் நிதிஷுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது என்றும் தெரிவித்தார். நிதிஷ் பலமுறை கூட்டணிக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
‘LCU’-வின் ஆரம்பக் கதையைக் கூறுவதற்காக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கி வருகிறார். இதில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. குறும்படத்தின் மொத்த நீளம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே. இக்குறும்படம் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 39 தொகுதிக்கான மக்களவைத் தேர்தலும், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு இன்னும் 6 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4இல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இதற்கு இன்னும் 45 நாள்கள் உள்ளதால், அதுவரை தமிழக மக்கள் முடிவை அறியக் காத்திருக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்கள் விலகுவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில், இன்று இமாச்சல பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளரும், பிரியங்கா காந்தியின் நெருங்கிய ஆதரவாளருமான தஜிந்தர் சிங் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். கட்சியில் இருந்து விலகிய சிறிது நேரத்திலேயே அவர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக – கேரள எல்லைகளில் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச் சாவடிகளில் தமிழ்நாடு கால்நடைத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோழி உள்ளிட்ட கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
Sorry, no posts matched your criteria.