India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து தராமல், கொல்ல சதி நடப்பதாக ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தது. இந்நிலையில், திகார் சிறை நிர்வாகம் டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனாவுக்கு அனுப்பிய மருத்துவ அறிக்கையில், கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையிருப்பதாக ஆர்.எம்.எல் மருத்துவர்கள் கூறவில்லை. மேலும், மாத்திரைகள் எடுத்து கொண்டால் போதுமானதென அறிவுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளது.
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி 2ஆவது முறையாக போட்டியிடுகிறார். அவர் சமீபத்தில் அங்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு சென்றார். இதனிடையே வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சுதாகரன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அத்துடன், கடந்த 5 ஆண்டுகளாக ராகுல் தொகுதிக்கு வருவது இல்லை என்றும் தன்னுடனே அவர் தொடர்பில் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்காக ஆடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் ரூ.30 லட்சம் செலவில் மலர்களால் மணப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை (ஏப்.22) தேரோட்டமும், ஏப்.23ஆம் தேதி அதிகாலையில் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதே போன்று, இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் குஜராத் அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஃபிளே ஆப் சுற்றுக்கு முன்னேற, இரு அணி வீரர்களும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
காஸாவின் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 6 சிறார்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அகதிகள் முகாம்கள், மருத்துவமனை பணியாளர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதை சர்வதேச மனித உரிமை மீறல் எனவும், இதனை உடனடியாக தலையிட்டு ஐ.நா அமைப்புகள் கண்டிக்க வேண்டுமென பாலஸ்தீனிய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
▶ஏப்ரல் – 21 | ▶ சித்திரை – 08 ▶கிழமை: ஞாயிறு | ▶திதி: திரயோதசி ▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 03:30 – 04:30 வரை ▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 01:30 – 02:30 வரை ▶ராகு காலம்: காலை 04:30 – 06:00 வரை ▶எமகண்டம்: பிற்பகல் 12:30 – 01:30 வரை ▶குளிகை: காலை 03:00 – 04:30 வரை ▶சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் அரிய வகை விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு பணி வரும், ஏப்.29 முதல் மே 1ம் தேதி வரை நடக்கிறது. நீலகிரி, முக்கூர்த்தி தேசிய பூங்கா முதல் கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம் வரையிலான, மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள வரையாடுகளின், 140 வாழ்விடங்களில் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் மேற்கொள்கின்றனர்.
மதிமுகவை பொறுத்தவரை, I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என மதிமுக முதன்மை செயலாளரும், அக்கட்சியின் திருச்சி வேட்பாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், I.N.D.I.A கூட்டணி அமைவதற்கு முன்பாகவே பிரதமர் வேட்பாளர் ராகுல் தான் என தெரிவித்துள்ளேன். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது அவர் தான் பிரதமராக வருவார். இதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது என்றார்
‘வேட்டையன்’ படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர்171’ படத்தில், அவருக்கு வில்லனாக நடிகர் நாகார்ஜூனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 9ஆவது தளத்தில் ஏற்பட்ட தீயை, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். தீ விபத்தில் மாயமான இருவரை தேடும் பணியில் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. குடியிருப்பில் சிக்கித் தவித்த 15 பேர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.