India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் பத்திரிகைகளில் பெரிய விளம்பரம் வெளியிட பாபா ராம்தேவ் முடிவு செய்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, முன்னரே மன்னிப்பு விளம்பரம் வெளியிடாமல் நேற்று வெளியிட்டது ஏன்? பெரிய அளவில் வெளியிடப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, விரைவில் பெரிய விளம்பரம் வெளியிட இருப்பதாக ராம்தேவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எண்ணெய், மளிகைப்பொருட்கள் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு ஆகிறது. எனவே, விலைவாசி உயர்வை தமிழக அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும். மளிகைப் பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
விளம்பரங்கள் வெளியிடப்பட்ட அதே பக்கத்தில் அதே அளவுக்கு மன்னிப்பு பிரசுரிக்கப்பட்டதா என பாபா ராம்தேவ், பதஞ்சலி சிஇஓ பாலகிருஷ்ணாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. வழக்கு விசாரணையில் ராம்தேவ் சார்பில், ₹10 லட்சத்தில் 67 பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
விமான சிக்னலை முடக்கும் ரகசிய ஆயுதத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளதாக தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ரஷ்யா தயாரித்துள்ள இந்த ஆயுதத்தின் பெயர் டோபோல் என்றும், அதனை லித்துவேனியா-போலந்து இடையே நிறுத்தியிருக்கிறது என்றும் கூறியுள்ளது. மேலும், பால்டிக் கடல் மீது பறந்த விமானங்களின் சிக்னல்கள் முடக்கப்பட்டதற்கு இதில் தொடர்புண்டு என்றும் அப்பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் அதிகபட்ச வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தப்படியாக ஈரோட்டில் வெப்ப அலை வீசியதாகவும், 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயிலால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்கவும்.
மக்களை வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பலருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும், தனது குடும்பத்தில் சிலரது பெயரும் இல்லை என்றும் கூறிய அவர், இந்த குளறுபடி குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், இதுபோன்று சொதப்பலாக ஒரு தேர்தல் நடந்ததில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பத்மபூஷன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு விருது அளிக்கவில்லை. தாமதமாக விருதை அறிவித்துவிட்டு அதனை வழங்குவதிலும் தாமதம் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, விருதுகள் அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்படாது. அடுத்தகட்டமாக அவருக்கு விருது வழங்கப்படும் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் அவதூறு பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில காங். தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். காங். தேர்தல் அறிக்கையில் கூறாததை மோடி திரித்துக் கூறியிருப்பதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான விஷமத்தனமான கருத்துக்களைப் பேசி வருவதாகவும் சாடினார். மேலும், அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் அவருக்கு மக்கள் உரிய படிப்பினை வழங்குவார்கள் என்றும் கூறினார்.
இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேஷ கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்துவது உகந்ததல்ல. இதுபோன்ற கருத்துகள் சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கே நாட்டின் வளங்கள் மீது முதல் உரிமை இருப்பதாக மன்மோகன் சிங் தெரிவித்ததாக பிரதமர் மோடி மீண்டும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இதே குற்றச்சாட்டை மோடி அண்மையில் முன்வைத்தபோது, அதை காங்கிரஸ் மறுத்திருந்தது. இந்நிலையில் ராஜஸ்தானில் இன்று பேசிய மோடி, காங்கிரஸ் கட்சி எப்போதும் திருப்திபடுத்துதல், வாக்கு வங்கி அரசியலை நினைத்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.